Monday, September 14, 2009

இருள் பொருள், இருள் ஆற்றல்

Dark Matter, Dark Energy (கண்ணுக்குத் தெரியாத பொருள், கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்) என்ற கருத்துகள் இன்று அறிவியலாளர்களை ஆட்டி வைக்கிறது. இந்தப் புதிய கருத்தாக்கத்தின்படி, உலகின் 96% பொருளும் ஆற்றலும் இந்த கண்ணுக்குத் தெரியாத பொருள், கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் வடிவைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகிறது.

சாதாரணப் பொருள் மட்டும் இருந்தால், அண்டங்கள் (கேலக்ஸிகள்) உருவாகி இருக்கவே முடியாது. எனவே ‘கண்ணுக்குத் தெரியாத பொருள்’ என்று ஒன்று இருக்கவேண்டும்; இந்தக் கண்ணுக்குத் தெரியாத பொருள், சாதாரணப் பொருள்களை இழுத்து ஒட்டவைக்கும் பசைபோலச் செயல்படுகிறது என்று ஒரு கருத்தாக்கம் உள்ளது.

இன்று பிரபஞ்சம் பயங்கர வேகத்தில் விரிவாகிக்கொண்டே இருக்கிறது. பொருள்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன. பொருள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையையும் தாண்டி இவ்வாறு பொருள்கள் விலகிச் செல்லக் காரணம் ஒருவேளை ‘கண்ணுக்குத் தெரியாத ஆற்றல்’ என்ற ஆற்றல் ஈர்ப்புக்கு எதிராகச் செயல்படுவதாலோ என்ற ஒரு கருத்தாக்கமும் உள்ளது.

கண்ணுக்குத் தெரியாத பொருள், கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் ஆகியற்றின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க உள்ளார் டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன். இவர் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.

இடம் : கிழக்கு மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, சென்னை
நாள் : 26 செப்டெம்பர் 2009, சனிக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணி


பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ள அழைக்கிறோம். வாருங்கள்.

1 comment:

கருப்புசாமி குத்தகைதாரர் said...

இதற்கு விஞ்ஞானம் எதற்கு? கண்ணுக்குத் தெரியாத ஆற்றலுக்குத்தான் கடவுள் என்று பெயர்.