Tuesday, July 28, 2009

பள்ளி என்றொரு சர்க்கஸ் கூடாரம்!

காலையில் செய்தித்தாளைப் பார்த்தபோது அதிர்ச்சி. விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்ப்பெரும்பாக்கம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் சமீபத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா நடத்தியிருக்கிறார்கள். அதில் முக்கிய அம்சமாக கராத்தே மாஸ்டரின் சாகசங்கள்! பத்து வயது மாணவர்கள் சீருடைகளுடன் வரிசையாகக் கைகளை நீட்டி, குப்புறப் படுத்திருக்கிறார்கள். மோட்டார் சைக்கிளை குழந்தைகளின் கைகள் மேல் ஓட்டி வருகிறார் மாஸ்டர். குழந்தைகள் பயத்தில் தலையை நிமிர்த்தவில்லை. சுற்றி நிற்கும் கூட்டம் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. அடுத்த சாகசம் தரையில் படுத்திருக்கும் மாணவியின் வயிற்றில் ஒரு பலகை வைத்து, அதன் மீது மோட்டார் சைக்கிளை ஓட்டி வருகிறார் மாஸ்டர்.

குழந்தைகளைத் துன்புறுத்தும் இந்த நிகழ்ச்சி அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊர்ப்பெரியவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது! அதுவும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சம்மதத்துடன் எனும்போது என்ன சொல்வது?

2008ம் ஆண்டு எடுத்த புள்ளிவிபரம் அரசாங்கப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதாகக் கூறியிருக்கிறது. அதே போல மாணவர்களின் சேர்க்கையும் குறைந்து வருவதாகச் சொல்கிறது. இந்த நேரத்தில் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் காட்ட வேண்டிய அக்கறையை குழந்தைகளைப் பகடையாக வைத்து, இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகளில் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

2 comments:

Anonymous said...

அநியாயம், அராஜகம் - மிக வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய விஷயம் இது!

என். சொக்கன்,
பெங்களூர்.

Vijay Subramanian said...

well, did yu see the news about little kids thrown from 30 feet....stating that it is a religious cerimony...?? Mera Bharath Mahan.!!!!!!!!!