· இந்தியா வல்லரசு ஆகியிருக்கும். கூரை வீடுகளே இருக்காது. அனைவரும் மாடி வீடுகளில் குடியிருப்பார்கள்.
· நான் எஞ்சினியராகி இந்தியாவின் கடனை அடைப்பேன். பிறகு இந்தியாவை உயர்த்துவேன்!
· இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் முறியடிக்கப்பட்டிருக்கும்.
· அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.
· பெண்கள் சமமாக நடத்தப்படுவார்கள். வரதட்சணை ஒழிக்கப்பட்டிருக்கும். (மாணவிகள் மட்டுமே இந்தப் பிரச்னைகளைக் குறிப்பிட்டிருந்தனர்)
· இந்தியா பசுஞ்சோலையாக மாறியிருக்கும்.
· இன்று இலங்கை தமிழர்களைப் பாத்துக்கொண்டு சும்மா இருப்பது போன்ற நிலை இருக்காது. தமிழர்கள் தலை நிமிர்ந்திருப்பார்கள்.
· மக்கள் தொகையில் நாம் சீனாவை முந்தியிருப்போம்!
· இன்று ஒரு காபி ரூ.10. தங்கம் ஒரு பவுன் ரூ. 15,000. 2020-ல் இன்னும் பொருளாதாரம் வளர்ந்து கற்பனைக்கு எட்டாத அளவுக்குச் சென்று விடும். (ஐயோ விலை ஏற்றத்தை பொருளாதார வளர்ச்சி என்று நினைத்துவிட்டார்களே!)
· பாகிஸ்தான் அடக்கப்பட்டிருக்கும்.
· சீனாவின் வளர்ச்சியோடு இந்தியா சரிசமமாகப் போட்டியிடும்.
· எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்கும்.
· வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பியிருப்பார்கள்!
· நல்ல அரசியல்வாதிகள் உருவாகியிருப்பார்கள்.
இவை எல்லாம் மாணவர்கள் சொன்ன சில கருத்துகள்.
பூம்புகார் பள்ளியில் ’இந்தியா 2020 என் கனவு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி 6 முதல் 12-ம் வகுப்பு வரை நடத்தப்பட்டது. பரிசுக்கான கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்பு வாரியாகப் போட்டி நடத்தப்பட்டிருந்தாலும் மாணவர்களின் சிந்தனையில் பெரிய மாற்றம் இல்லை என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஆறாம் வகுப்புக்கும் பன்னிரண்டாம் வகுப்புக்கும் இடையே மொழியில், விரிவாக எழுதுவதில் வித்தியாசம் இருந்ததே தவிர, அவர்கள் சொன்ன விஷங்களில் மாற்றம் இல்லை!
அப்துல் கலாம், புவி வெப்பம், மக்கள் தொகை கட்டுப்பாடு, வேலை வாய்ப்பு, கல்வி போன்ற விஷயங்களைச் சுமார் 80 சதவிகித கட்டுரைகளில் காண முடிந்தது. 100 சதவிகிதம் இருந்த ஒரு விஷயம் ’வல்லரசு’. வல்லரசு என்றால் அனைவரும் மாடி வீட்டில் வசிப்பது என்று பெரும்பாலும் குறிப்பிட்டிருந்தனர். யார் கொடுத்த விளக்கமோ தெரியவில்லை!
Monday, August 16, 2010
Friday, July 9, 2010
ஹாஸ்டல் கதைகள் - 2 : வசந்தி அக்கா!
திருட்டு. இந்த வார்த்தைக்கு அர்த்தம் ஹாஸ்டலில்தான் தெரிந்தது. நான் ஹாஸ்டலில் சேர்ந்த மூன்றாம் நாளே சிவப்பு நிறப் புது பிளாஸ்டிக் வாளி காணாமல் போனது. வாளி இல்லாமல் என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. யாரிடம் கேட்பது, எப்படிக் கண்டுபிடிப்பது? கனிமொழி அக்காவிடம் சென்றேன். அவர்தான் சேர்ந்த அன்றிலிருந்து என்னிடம் நட்பு வைத்திருப்பவர்.
’பள்ளிக்கூடம் திறந்ததுமே ஆரம்பிச்சிட்டாளுகளா? வா, நான் கண்டுபிடிக்கிறேன்’ என்று அழைத்துப் போனார்.
அங்கு என்னுடைய வாளியைப் போல நான்கு வாளிகள் இருந்தன. நான்கு புது வாளிகள். அதில் மூன்று வாளிகளின் அடியில் பெயிண்ட் மூலம் பெயர் எழுதப்பட்டிருந்தது. கடைசியில் இருந்தது ஒரு வாளி. அடையாளம் எதுவும் இருந்தால் சொல்லச் சொன்னார் கனிமொழி. இப்படி எல்லாம் நடக்கும் என்பதை நான் நினைத்துக்கூடப் பார்க்காததால் வாளியை அவ்வளவு துல்லியமாக கவனித்திருக்கவில்லை. எடுத்தவள் சாதாரணமாக நிற்க, தொலைத்தவள் திருதிருவென்று நின்றேன். கனிமொழிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.
’என்ன கூட்டம்?’ என்று கேட்டபடி இன்பா அக்கா வந்தார்.
விஷயத்தை அறிந்தவர், “மாதவி உன் கிட்ட பக்கெட் இல்லைன்னுதானே நேத்து மேரி கிட்ட வாங்கிட்டுப் போனே? அதுக்குள்ள எப்படி பக்கெட் வாங்கினே?’
’டேஸ்காலர் பிள்ளை கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன். அவளோட பக்கெட்டுன்னு அடையாளம் சொல்லச் சொல்லு பார்க்கலாம்!’ என்றாள் மாதவி.
கண் முன்னே வாளி இருந்தும் என்னிடம் நிரூபிக்க முடியவில்லை.
பேனா, பென்சில், ரப்பர், உள்ளாடைகள், பணம் என்று திருட்டுப் போகாத பொருள்களே இல்லை என்பது அன்றுதான் தெரிந்தது. பொருள்களில் பெயர் எழுதி வைப்பது, பணத்தை வார்டனிடம் கொடுத்து வைப்பது, உள்ளாடைகளை உள்ளுக்குள் போட்டு, அதன் மீது பாவாடை, தாவணியைக் காய வைக்கும் உத்தி எல்லாம் பிறகு கற்றுக்கொண்டேன்.
இப்படி அவ்வப்போது யாருக்காவது பொருள்கள் காணாமல் போவது தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் விஷயம் பெரிதாகவில்லை.
**
வசந்தி கிறிஸ்டிபாய். பெயரைப் போலவே அவரும் வசீகரிப்பார். நானும் அவரும் ஒரே ஊர் என்பது நான் ஹாஸ்டலுக்கு வந்து ஒருமாதம் கழிந்தபிறகுதான் தெரிந்தது. அதற்குள் நான் கனிமொழியின் அன்புப் பிடியில் சிக்கி விட்டேன். அதனால் நான் அவருடன் நெருக்கமாக முடியவில்லை. ஆனால் அவரே வந்து என்னை அடிக்கடி விசாரிப்பார். ஊருக்குப் போகும்போது பத்திரமாக அழைத்துச் செல்வார். சீனியர் மாணவியாக இருந்தாலும் ஜூனியர் மாணவிகளிடம் அன்புடன் பழகுவதால் வசந்தியை எல்லோருக்கும் பிடிக்கும்.
நன்றாகப் படிப்பார். அழகாக உடுத்துவார். தெரிந்தவர், தெரியாதவர் பார்க்காமல் உதவி செய்வார். பேஸ்கட் பால் கேப்டனாக இருந்தார். ஹாஸ்டல் தலைவிகளில் ஒருவர். வார்டன், ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவி. அவருடன் படித்தவர்களுக்கு அன்புத் தோழி. விடுதியில் இருந்த என்னைப் போன்ற ஏராளமான ஜூனியர் மாணவிகளுக்கு வசந்தி கிறிஸ்டி பாய் ஒரு ரோல் மாடல்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். பார்க்க வந்தவர்கள் உணவு கொண்டு வந்திருந்தால் அன்று விடுதியில் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. வசந்தி அக்காவின் குழுதான் அந்த வாரம் பரிமாற வேண்டும்.சந்தோஷமாக வந்தார் வசந்தி. வார்டனிடம், ’எங்க அண்ணன் சாப்பாடு கொண்டு வந்திருக்காங்க. பரிமாறிட்டு மட்டும் போயிடறேன்’என்றார். வார்டன் சிரித்துக்கொண்டே தலையசைத்தார்.
தன் பொறுப்பை மற்றவர்கள் போலத் தட்டிக் கழிக்காத அவருடைய நடத்தை, அவர் மீது இன்னும் கொஞ்சம் மதிப்பை உயர்த்தியது. வசந்தி அக்காவிடம் படிக்கப் போகும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டேன்!(ஆசிரியராவதுதான் அவர் விருப்பம்.)
மாலை நான்கு மணிக்கு ஹாஸ்டலில் ஏதோ சலசலப்பு. விஷயம் ஒன்றும் புரியவில்லை. சிலுவைச் செல்வி, அமுதாவுடன் நான் மைதானத்துக்குச் சென்று விட்டேன். மீண்டும் ஐந்து மணிக்குத் திரும்பினோம். கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அமுதா விசாரித்துவிட்டு வந்தாள்.
’இன்னிக்கு வாங்கிட்டு வந்த ஃப்ரான்ஸ்சிஸ்காவோட புதுச் செருப்பைக் காணோமாம்’ என்றாள் எங்களிடம்.
’சரி, ஒரு செருப்புக் காணோம்னா இப்படியா ஹாஸ்டலே பரபரப்பாகும்?’
’செருப்புக் காணோம்ங்கிறதுக்காக பரபரப்பாகலை சுஜா. செருப்பை எடுத்தவங்கன்னு அவ சொல்றவங்களாலதான் பரபரப்பு...’
’யாருப்பா?’
’யார் கிட்டேயும் சொல்ல வேணாம், செருப்பு உனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யறேன்னு வார்டன் சொன்னதால பேரைச் சொல்லல. ஆனால் பிளஸ் டூ படிக்கறவங்கதான் எடுத்திருக்காங்கன்னு மத்தவங்க சொல்றாங்க... ’
’ஃப்ரான்சிஸ்கா அடிச்சுப் பேசறதைப் பார்த்தா அவ பொய் சொல்லற மாதிரி இல்லை...’
’வார்டன் ஃப்ரான்சிஸ்காவையும் அவ குற்றம் சொல்றவங்களையும் தனியா வச்சு விசாரிச்சிருக்காங்க. இவ பெட்டியைத் திறந்து காட்டச் சொன்னாளாம். ஆனா அவங்க மாட்டேன்னு சாதிச்சிட்டாங்களாம்...’
உணவுக்காக மணி அடித்தது. அமைதியாகச் சாப்பிட்டோம். சிறப்புப் பிரார்த்தனைக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. மீண்டும் செருப்பு விஷயம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
’குரூப் லீடரா இருக்கறவங்கள்ள ஒருத்தர் தானாம் சுஜா!’
’குரூப் லீடரா...? வசந்தி அக்காவா இருக்கக் கூடாது!’
’நானும் அதைத்தான் ஜீசஸ் கிட்ட ஜெபிக்கிறேன்...’ என்றாள் சிலுவைச் செல்வி.
பிரார்த்தனைக்காக மணி அடிக்கப்பட்டது. வாய் மட்டும் கூட்டத்தோடு சேர்ந்து பாடியது. அவர்கள் பேசிய எந்த விஷயமும் காதில் விழுந்ததே தவிர, மனத்தில் பதியவில்லை. திருட்டு என்ற சொல்லைக் கூட மனம் ஏற்கவில்லை. யார் எடுத்திருப்பார்கள் என்று யோசனையில் இருந்தேன். எப்படியோ கூட்டம் முடிந்தது. படுப்பதற்குப் போர்வை, தலையணை எடுப்பதற்காக அறைக்குத் திரும்பினோம். ஃபிரான்சிஸ்கா சந்தோஷத்துடன் செருப்பைக் காட்டி, தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
’நல்லவேளை, யாருன்னு வெளியில் தெரியாமலே செருப்பு கிடைச்சது’ என்று பெருமூச்சு விட்டபடி படுக்கை அறை நோக்கி நடந்தேன். வழியில் கனிமொழி அக்காவைப் பார்த்தேன்.
’சுஜா, விஷயம் தெரியுமா?’
’என்னக்கா?’
’செருப்பை எடுத்தது...’ என்று கிசுகிசுப்பாகச் சொல்ல வந்தார்.
’வேண்டாம்... அதான் கிடைச்சிருச்சே...விட்டுடுங்க...!’
’பள்ளிக்கூடம் திறந்ததுமே ஆரம்பிச்சிட்டாளுகளா? வா, நான் கண்டுபிடிக்கிறேன்’ என்று அழைத்துப் போனார்.
அங்கு என்னுடைய வாளியைப் போல நான்கு வாளிகள் இருந்தன. நான்கு புது வாளிகள். அதில் மூன்று வாளிகளின் அடியில் பெயிண்ட் மூலம் பெயர் எழுதப்பட்டிருந்தது. கடைசியில் இருந்தது ஒரு வாளி. அடையாளம் எதுவும் இருந்தால் சொல்லச் சொன்னார் கனிமொழி. இப்படி எல்லாம் நடக்கும் என்பதை நான் நினைத்துக்கூடப் பார்க்காததால் வாளியை அவ்வளவு துல்லியமாக கவனித்திருக்கவில்லை. எடுத்தவள் சாதாரணமாக நிற்க, தொலைத்தவள் திருதிருவென்று நின்றேன். கனிமொழிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.
’என்ன கூட்டம்?’ என்று கேட்டபடி இன்பா அக்கா வந்தார்.
விஷயத்தை அறிந்தவர், “மாதவி உன் கிட்ட பக்கெட் இல்லைன்னுதானே நேத்து மேரி கிட்ட வாங்கிட்டுப் போனே? அதுக்குள்ள எப்படி பக்கெட் வாங்கினே?’
’டேஸ்காலர் பிள்ளை கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன். அவளோட பக்கெட்டுன்னு அடையாளம் சொல்லச் சொல்லு பார்க்கலாம்!’ என்றாள் மாதவி.
கண் முன்னே வாளி இருந்தும் என்னிடம் நிரூபிக்க முடியவில்லை.
பேனா, பென்சில், ரப்பர், உள்ளாடைகள், பணம் என்று திருட்டுப் போகாத பொருள்களே இல்லை என்பது அன்றுதான் தெரிந்தது. பொருள்களில் பெயர் எழுதி வைப்பது, பணத்தை வார்டனிடம் கொடுத்து வைப்பது, உள்ளாடைகளை உள்ளுக்குள் போட்டு, அதன் மீது பாவாடை, தாவணியைக் காய வைக்கும் உத்தி எல்லாம் பிறகு கற்றுக்கொண்டேன்.
இப்படி அவ்வப்போது யாருக்காவது பொருள்கள் காணாமல் போவது தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் விஷயம் பெரிதாகவில்லை.
**
வசந்தி கிறிஸ்டிபாய். பெயரைப் போலவே அவரும் வசீகரிப்பார். நானும் அவரும் ஒரே ஊர் என்பது நான் ஹாஸ்டலுக்கு வந்து ஒருமாதம் கழிந்தபிறகுதான் தெரிந்தது. அதற்குள் நான் கனிமொழியின் அன்புப் பிடியில் சிக்கி விட்டேன். அதனால் நான் அவருடன் நெருக்கமாக முடியவில்லை. ஆனால் அவரே வந்து என்னை அடிக்கடி விசாரிப்பார். ஊருக்குப் போகும்போது பத்திரமாக அழைத்துச் செல்வார். சீனியர் மாணவியாக இருந்தாலும் ஜூனியர் மாணவிகளிடம் அன்புடன் பழகுவதால் வசந்தியை எல்லோருக்கும் பிடிக்கும்.
நன்றாகப் படிப்பார். அழகாக உடுத்துவார். தெரிந்தவர், தெரியாதவர் பார்க்காமல் உதவி செய்வார். பேஸ்கட் பால் கேப்டனாக இருந்தார். ஹாஸ்டல் தலைவிகளில் ஒருவர். வார்டன், ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவி. அவருடன் படித்தவர்களுக்கு அன்புத் தோழி. விடுதியில் இருந்த என்னைப் போன்ற ஏராளமான ஜூனியர் மாணவிகளுக்கு வசந்தி கிறிஸ்டி பாய் ஒரு ரோல் மாடல்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். பார்க்க வந்தவர்கள் உணவு கொண்டு வந்திருந்தால் அன்று விடுதியில் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. வசந்தி அக்காவின் குழுதான் அந்த வாரம் பரிமாற வேண்டும்.சந்தோஷமாக வந்தார் வசந்தி. வார்டனிடம், ’எங்க அண்ணன் சாப்பாடு கொண்டு வந்திருக்காங்க. பரிமாறிட்டு மட்டும் போயிடறேன்’என்றார். வார்டன் சிரித்துக்கொண்டே தலையசைத்தார்.
தன் பொறுப்பை மற்றவர்கள் போலத் தட்டிக் கழிக்காத அவருடைய நடத்தை, அவர் மீது இன்னும் கொஞ்சம் மதிப்பை உயர்த்தியது. வசந்தி அக்காவிடம் படிக்கப் போகும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டேன்!(ஆசிரியராவதுதான் அவர் விருப்பம்.)
மாலை நான்கு மணிக்கு ஹாஸ்டலில் ஏதோ சலசலப்பு. விஷயம் ஒன்றும் புரியவில்லை. சிலுவைச் செல்வி, அமுதாவுடன் நான் மைதானத்துக்குச் சென்று விட்டேன். மீண்டும் ஐந்து மணிக்குத் திரும்பினோம். கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அமுதா விசாரித்துவிட்டு வந்தாள்.
’இன்னிக்கு வாங்கிட்டு வந்த ஃப்ரான்ஸ்சிஸ்காவோட புதுச் செருப்பைக் காணோமாம்’ என்றாள் எங்களிடம்.
’சரி, ஒரு செருப்புக் காணோம்னா இப்படியா ஹாஸ்டலே பரபரப்பாகும்?’
’செருப்புக் காணோம்ங்கிறதுக்காக பரபரப்பாகலை சுஜா. செருப்பை எடுத்தவங்கன்னு அவ சொல்றவங்களாலதான் பரபரப்பு...’
’யாருப்பா?’
’யார் கிட்டேயும் சொல்ல வேணாம், செருப்பு உனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யறேன்னு வார்டன் சொன்னதால பேரைச் சொல்லல. ஆனால் பிளஸ் டூ படிக்கறவங்கதான் எடுத்திருக்காங்கன்னு மத்தவங்க சொல்றாங்க... ’
’ஃப்ரான்சிஸ்கா அடிச்சுப் பேசறதைப் பார்த்தா அவ பொய் சொல்லற மாதிரி இல்லை...’
’வார்டன் ஃப்ரான்சிஸ்காவையும் அவ குற்றம் சொல்றவங்களையும் தனியா வச்சு விசாரிச்சிருக்காங்க. இவ பெட்டியைத் திறந்து காட்டச் சொன்னாளாம். ஆனா அவங்க மாட்டேன்னு சாதிச்சிட்டாங்களாம்...’
உணவுக்காக மணி அடித்தது. அமைதியாகச் சாப்பிட்டோம். சிறப்புப் பிரார்த்தனைக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. மீண்டும் செருப்பு விஷயம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
’குரூப் லீடரா இருக்கறவங்கள்ள ஒருத்தர் தானாம் சுஜா!’
’குரூப் லீடரா...? வசந்தி அக்காவா இருக்கக் கூடாது!’
’நானும் அதைத்தான் ஜீசஸ் கிட்ட ஜெபிக்கிறேன்...’ என்றாள் சிலுவைச் செல்வி.
பிரார்த்தனைக்காக மணி அடிக்கப்பட்டது. வாய் மட்டும் கூட்டத்தோடு சேர்ந்து பாடியது. அவர்கள் பேசிய எந்த விஷயமும் காதில் விழுந்ததே தவிர, மனத்தில் பதியவில்லை. திருட்டு என்ற சொல்லைக் கூட மனம் ஏற்கவில்லை. யார் எடுத்திருப்பார்கள் என்று யோசனையில் இருந்தேன். எப்படியோ கூட்டம் முடிந்தது. படுப்பதற்குப் போர்வை, தலையணை எடுப்பதற்காக அறைக்குத் திரும்பினோம். ஃபிரான்சிஸ்கா சந்தோஷத்துடன் செருப்பைக் காட்டி, தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
’நல்லவேளை, யாருன்னு வெளியில் தெரியாமலே செருப்பு கிடைச்சது’ என்று பெருமூச்சு விட்டபடி படுக்கை அறை நோக்கி நடந்தேன். வழியில் கனிமொழி அக்காவைப் பார்த்தேன்.
’சுஜா, விஷயம் தெரியுமா?’
’என்னக்கா?’
’செருப்பை எடுத்தது...’ என்று கிசுகிசுப்பாகச் சொல்ல வந்தார்.
’வேண்டாம்... அதான் கிடைச்சிருச்சே...விட்டுடுங்க...!’
Friday, July 2, 2010
சந்தோஷ்
ஆ... ஐயோ...
என்ன ஆச்சு?
மெதுவாகக் கண் விழித்துப் பார்த்தார் பிருந்தா.
“இந்தப் பொண்ணு கண் முழிச்சிருச்சு’ என்று அருகில் இருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்த பெண், மீண்டும் பிருந்தாவைப் பார்த்தார்.
“எமன் மாதிரி வந்த அந்த லாரி இடிச்சுப்புட்டு நிக்காம போயிட்டான். இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது’ என்று என்றார்.
சற்றுத் தூரத்தில் ராஜாவின் முனகல் கேட்டது. மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தார் பிருந்தா. கண்களை மூடிக்கொண்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தார். கையை ஊன்றி வேகமாக உட்கார முயற்சி செய்யும்போதுதான் தெரிந்தது, அவருடைய இடது கை முட்டி உடைந்திருந்தது.ராஜாவுக்குக் கால் முட்டி உடைந்திருந்தது.
’கடவுளே, இந்தச் சந்தர்ப்பத்திலாவது என்னைக் காப்பாற்று’ என்று தனக்குள் நினைத்தபடி பிருந்தாவின் கண்கள் அங்கும் இங்கும் தேடின.
’என்னம்மா உன் குழந்தையையா தேடற? கடவுள் புண்ணியத்துல அவனுக்கு ஒண்ணும் ஆகல. சின்னச் சிராய்ப்புத்தான்... நீ கவ... ’
’ஐயோ... கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கற? நான் வேண்டாத நேரம் இல்லையே...’
வெடித்து அழுதார் பிருந்தா.
சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
**
’சந்தோஷ், அப்பா ஆபிஸ் போயிட்டு வரேன். பை!’
...
’சந்தோஷ் குட்டி, உனக்கு கார்ட்டூன் சானல் வைக்கட்டுமா?’
...
’தம்பி சமர்த்தா டிவி பார்ப்பானாம். அம்மா சமைச்சிட்டு வந்துடுவேனாம்...’
...
’சந்தோஷ் அம்மாவைக் கூப்பிடு... ரெண்டு பேருக்கும் கதை சொல்றேன்!’
...
இப்படி பிருந்தா, ராஜாவின் குரல்கள் மட்டுமே அந்த வீட்டில் கேட்கும். யார் சந்தோஷ்? அவன் எப்படி இருப்பான்? கேட்கவும் தயக்கமாக இருந்தது.
ஒரு வாரத்துக்குப் பிறகு பிருந்தா தயங்கித் தயங்கி வந்தார்.
“வீட்ல யாரும் இல்லையே?’
“இல்ல... என்ன சொல்லுங்க?’
“எனக்கு ஒரு உதவி... கொஞ்சம் வர்றீங்களா?’
போனேன்.
ஹாலில் வெள்ளைவெளேரென்று ஒல்லியான, உயரமான உருவம் ஒன்று படுத்திருந்தது.
“சந்தோஷ் ஆன்ட்டிக்கு வணக்கம் சொல்லு...’
...
’இவன் எங்க பையன். பதிமூணு வயசாச்சு. பிறக்கும்போதே இப்படித்தான் இருந்தான். என்னென்னவோ காரணம் சொன்னாங்க. பார்க்காத வைத்தியம் இல்லை. பேச முடியாது. எதையும் புரிஞ்சுக்க முடியாது. நடக்க முடியாது. அசைய முடியாது. கண்ணை மட்டும் சுத்திச் சுத்திப் பார்ப்பான். தினமும் குளிக்க ஊத்தணும். இல்லைன்னா புண் வந்துரும். இவங்க அப்பா ஊருக்குப் போயிருக்கார். தனியா ஊத்த முடியாது. நீங்க தண்ணி ஊத்தினா போதும். மத்ததை நான் பார்த்துக்குவேன்...’
“என்னங்க இதுக்கு இவ்வளவு தயக்கமா?’
இருவரும் சந்தோஷைக் குளிப்பாட்டினோம்.
உடல் முழுவதும் பவுடர் போட்டு, அழகாக டிரஸ் செய்து, மீண்டும் படுக்கையில் கிடத்தப்பட்டான் சந்தோஷ்.
’ஆன்ட்டிக்கு தேங்க்ஸ் சொல்லு சந்தோஷ்!’
...
’ரொம்பக் கஷ்டமா இருக்கு...’
“குழந்தை ஊனமாவோ, மூளை வளர்ச்சி இல்லாமலோ இருந்தால் கூடப் பரவாயில்லை. உயிர் மட்டும் இருக்கற ஒரு பொம்மையா இருக்கறது ரொம்பக் கொடுமை. கிட்டத்தட்ட நானும் அவரும் இவனை மாதிரிதான் வாழ்ந்துட்டிருக்கோம். பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு நாங்க சந்தோஷமா வெளியில போய். நல்லது, கெட்டது எதுக்கும் போறதில்லை. சம்பாதித்ததை எல்லாம் செலவு பண்ணிப் பார்த்துட்டோம். கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை.’
“சந்தோஷ், ஆன்ட்டிக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்...’
“சந்தோஷ் என்ன சாப்பிடுவான்?’
“எதையும் மிக்ஸியில் அரைச்சு கூழ் மாதிரி ஊட்டணும். நம்மளா பார்த்து தண்ணி கொடுக்கணும். பிறந்த குழந்தைக்கு மாதிரி ஆச்சா, மூச்சா எல்லாம் சுத்தம் பண்ணனும்...’
எனக்குப் பேச்சு வரவில்லை.
“இவ்வளவு பிரச்னை இருக்கறதாலவோ என்னவோ காய்ச்சல், சளி மாதிரியான தொந்தரவு எல்லாம் சந்தோஷுக்கு வர்றதில்லை. மருத்துவத்துலதான் சரியாகலை. எங்க பிரார்த்தனையிலாவது சரியாகுமான்னு யார் என்ன சொன்னாலும் செஞ்சிட்டிருந்தோம். இப்ப ரெண்டு வருஷாமா அதையும் விட்டுட்டோம்...’
“உங்க மாமியார், அம்மா யாரையாவது உதவிக்கு வச்சுக்கலாமே?
“அவங்க வந்தாங்கன்னா இன்னொரு குழந்தை பெத்துக்கச் சொல்லி ஒரே தொந்தரவு. நீங்களே சொல்லுங்க, அந்தக் குழந்தையும் இவனை மாதிரி பொறந்தான்னா நான் என்ன பண்ணறது? இவங்களுக்கு அது புரிய மாட்டேங்குது...’
“உங்க கையில் என்ன தழும்பு?’
“அதை ஏன் கேட்கறீங்க? ரெண்டு வருஷத்துக்கு முன்னால பழனியில் வேண்டுதலை முடிச்சிட்டு, காரில் திரும்பி வந்தோம். அப்ப ஒரு ஆக்சிடெண்ட். எனக்குக் கை முட்டி உடைஞ்சிருச்சு. அவருக்குக் கால் முட்டி. அந்த விபத்துல குழந்தைக்கு ஏதாவது ஆயிருக்கணும்னு வேண்டிக்கிட்டே திரும்பிப் பார்த்தேன். சின்னச் சிராய்ப்போட குழந்தை அப்படியே இருந்தான்...!’
என்ன ஆச்சு?
மெதுவாகக் கண் விழித்துப் பார்த்தார் பிருந்தா.
“இந்தப் பொண்ணு கண் முழிச்சிருச்சு’ என்று அருகில் இருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்த பெண், மீண்டும் பிருந்தாவைப் பார்த்தார்.
“எமன் மாதிரி வந்த அந்த லாரி இடிச்சுப்புட்டு நிக்காம போயிட்டான். இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது’ என்று என்றார்.
சற்றுத் தூரத்தில் ராஜாவின் முனகல் கேட்டது. மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தார் பிருந்தா. கண்களை மூடிக்கொண்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தார். கையை ஊன்றி வேகமாக உட்கார முயற்சி செய்யும்போதுதான் தெரிந்தது, அவருடைய இடது கை முட்டி உடைந்திருந்தது.ராஜாவுக்குக் கால் முட்டி உடைந்திருந்தது.
’கடவுளே, இந்தச் சந்தர்ப்பத்திலாவது என்னைக் காப்பாற்று’ என்று தனக்குள் நினைத்தபடி பிருந்தாவின் கண்கள் அங்கும் இங்கும் தேடின.
’என்னம்மா உன் குழந்தையையா தேடற? கடவுள் புண்ணியத்துல அவனுக்கு ஒண்ணும் ஆகல. சின்னச் சிராய்ப்புத்தான்... நீ கவ... ’
’ஐயோ... கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கற? நான் வேண்டாத நேரம் இல்லையே...’
வெடித்து அழுதார் பிருந்தா.
சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
**
’சந்தோஷ், அப்பா ஆபிஸ் போயிட்டு வரேன். பை!’
...
’சந்தோஷ் குட்டி, உனக்கு கார்ட்டூன் சானல் வைக்கட்டுமா?’
...
’தம்பி சமர்த்தா டிவி பார்ப்பானாம். அம்மா சமைச்சிட்டு வந்துடுவேனாம்...’
...
’சந்தோஷ் அம்மாவைக் கூப்பிடு... ரெண்டு பேருக்கும் கதை சொல்றேன்!’
...
இப்படி பிருந்தா, ராஜாவின் குரல்கள் மட்டுமே அந்த வீட்டில் கேட்கும். யார் சந்தோஷ்? அவன் எப்படி இருப்பான்? கேட்கவும் தயக்கமாக இருந்தது.
ஒரு வாரத்துக்குப் பிறகு பிருந்தா தயங்கித் தயங்கி வந்தார்.
“வீட்ல யாரும் இல்லையே?’
“இல்ல... என்ன சொல்லுங்க?’
“எனக்கு ஒரு உதவி... கொஞ்சம் வர்றீங்களா?’
போனேன்.
ஹாலில் வெள்ளைவெளேரென்று ஒல்லியான, உயரமான உருவம் ஒன்று படுத்திருந்தது.
“சந்தோஷ் ஆன்ட்டிக்கு வணக்கம் சொல்லு...’
...
’இவன் எங்க பையன். பதிமூணு வயசாச்சு. பிறக்கும்போதே இப்படித்தான் இருந்தான். என்னென்னவோ காரணம் சொன்னாங்க. பார்க்காத வைத்தியம் இல்லை. பேச முடியாது. எதையும் புரிஞ்சுக்க முடியாது. நடக்க முடியாது. அசைய முடியாது. கண்ணை மட்டும் சுத்திச் சுத்திப் பார்ப்பான். தினமும் குளிக்க ஊத்தணும். இல்லைன்னா புண் வந்துரும். இவங்க அப்பா ஊருக்குப் போயிருக்கார். தனியா ஊத்த முடியாது. நீங்க தண்ணி ஊத்தினா போதும். மத்ததை நான் பார்த்துக்குவேன்...’
“என்னங்க இதுக்கு இவ்வளவு தயக்கமா?’
இருவரும் சந்தோஷைக் குளிப்பாட்டினோம்.
உடல் முழுவதும் பவுடர் போட்டு, அழகாக டிரஸ் செய்து, மீண்டும் படுக்கையில் கிடத்தப்பட்டான் சந்தோஷ்.
’ஆன்ட்டிக்கு தேங்க்ஸ் சொல்லு சந்தோஷ்!’
...
’ரொம்பக் கஷ்டமா இருக்கு...’
“குழந்தை ஊனமாவோ, மூளை வளர்ச்சி இல்லாமலோ இருந்தால் கூடப் பரவாயில்லை. உயிர் மட்டும் இருக்கற ஒரு பொம்மையா இருக்கறது ரொம்பக் கொடுமை. கிட்டத்தட்ட நானும் அவரும் இவனை மாதிரிதான் வாழ்ந்துட்டிருக்கோம். பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு நாங்க சந்தோஷமா வெளியில போய். நல்லது, கெட்டது எதுக்கும் போறதில்லை. சம்பாதித்ததை எல்லாம் செலவு பண்ணிப் பார்த்துட்டோம். கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை.’
“சந்தோஷ், ஆன்ட்டிக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்...’
“சந்தோஷ் என்ன சாப்பிடுவான்?’
“எதையும் மிக்ஸியில் அரைச்சு கூழ் மாதிரி ஊட்டணும். நம்மளா பார்த்து தண்ணி கொடுக்கணும். பிறந்த குழந்தைக்கு மாதிரி ஆச்சா, மூச்சா எல்லாம் சுத்தம் பண்ணனும்...’
எனக்குப் பேச்சு வரவில்லை.
“இவ்வளவு பிரச்னை இருக்கறதாலவோ என்னவோ காய்ச்சல், சளி மாதிரியான தொந்தரவு எல்லாம் சந்தோஷுக்கு வர்றதில்லை. மருத்துவத்துலதான் சரியாகலை. எங்க பிரார்த்தனையிலாவது சரியாகுமான்னு யார் என்ன சொன்னாலும் செஞ்சிட்டிருந்தோம். இப்ப ரெண்டு வருஷாமா அதையும் விட்டுட்டோம்...’
“உங்க மாமியார், அம்மா யாரையாவது உதவிக்கு வச்சுக்கலாமே?
“அவங்க வந்தாங்கன்னா இன்னொரு குழந்தை பெத்துக்கச் சொல்லி ஒரே தொந்தரவு. நீங்களே சொல்லுங்க, அந்தக் குழந்தையும் இவனை மாதிரி பொறந்தான்னா நான் என்ன பண்ணறது? இவங்களுக்கு அது புரிய மாட்டேங்குது...’
“உங்க கையில் என்ன தழும்பு?’
“அதை ஏன் கேட்கறீங்க? ரெண்டு வருஷத்துக்கு முன்னால பழனியில் வேண்டுதலை முடிச்சிட்டு, காரில் திரும்பி வந்தோம். அப்ப ஒரு ஆக்சிடெண்ட். எனக்குக் கை முட்டி உடைஞ்சிருச்சு. அவருக்குக் கால் முட்டி. அந்த விபத்துல குழந்தைக்கு ஏதாவது ஆயிருக்கணும்னு வேண்டிக்கிட்டே திரும்பிப் பார்த்தேன். சின்னச் சிராய்ப்போட குழந்தை அப்படியே இருந்தான்...!’
Friday, June 25, 2010
ரசிக்க... சிரிக்க...
தினமும் இரண்டு முறை செல்லும் வழிதான். ஆனாலும் கடந்த ஒரு வாரமாக சுவாரசியம் கூட்டுகிறது. பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அவசர அவசரமாகப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதில் சிலர் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். சில பெயர்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன; சில பெயர்கள் சிரிக்கும்படியாக இருக்கின்றன!
நேஷனல் மட்கலன் - National Ceramics
சிவா வணிகம் நடுவம் - Siva Enterprises
குமார் வன்பொருளகம் - Kumar Hardwares
ரவீஸ் வெதுப்பகம் - Ravees Cakes
குமார் அடுமனை - Kumar Bakery
மை லேடி தேடல் - My lady’s choice
எஸ்.டி. தூதஞ்சல் - S.T. Courier
ஸ்ரீ தேவி தானியங்கி - Sridevi Automobiles
ராஜ் தொலைபேசி நடுவன் - Raj Telephone Centre
ஏ.கே. முகவாண்மை - A. K. Agencies
பி.கே. வீட்டுக் குழுமம் - B.K. Housing Group
சந்திரன் ஒட்டும் பலகைகள் - Chandran Plywoods
அன்பு மின்பொருளகம் & வன்பொருளகம் - Anbu Electricals & Hardwares
மன்னா இனிப்புகள், வெதுப்பகம், நொறுவைகள் - Manna Sweets, Cakes, Snacks
கேக் அலைகள் - Cake Waves
சிவா குளிர் பான அருந்தகம் - Siva Coolbar
புஷ்பக் அணிகலன்கள் - Pushpak Jeweller
ஜோதி நறுமணப் பொருள்கள் - Jothi Cosmetics
நேஷனல் மட்கலன் - National Ceramics
சிவா வணிகம் நடுவம் - Siva Enterprises
குமார் வன்பொருளகம் - Kumar Hardwares
ரவீஸ் வெதுப்பகம் - Ravees Cakes
குமார் அடுமனை - Kumar Bakery
மை லேடி தேடல் - My lady’s choice
எஸ்.டி. தூதஞ்சல் - S.T. Courier
ஸ்ரீ தேவி தானியங்கி - Sridevi Automobiles
ராஜ் தொலைபேசி நடுவன் - Raj Telephone Centre
ஏ.கே. முகவாண்மை - A. K. Agencies
பி.கே. வீட்டுக் குழுமம் - B.K. Housing Group
சந்திரன் ஒட்டும் பலகைகள் - Chandran Plywoods
அன்பு மின்பொருளகம் & வன்பொருளகம் - Anbu Electricals & Hardwares
மன்னா இனிப்புகள், வெதுப்பகம், நொறுவைகள் - Manna Sweets, Cakes, Snacks
கேக் அலைகள் - Cake Waves
சிவா குளிர் பான அருந்தகம் - Siva Coolbar
புஷ்பக் அணிகலன்கள் - Pushpak Jeweller
ஜோதி நறுமணப் பொருள்கள் - Jothi Cosmetics
Thursday, June 24, 2010
ஹாஸ்டல் கதைகள் - 1 : எஸ்தருக்கு இறங்கி வந்த ஏசு!
ஹாஸ்டலில் எல்லோருக்கும் தெரிந்த பெயர் எஸ்தர். ஆறாம் வகுப்பில் இருந்து ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருக்கிறாள். நான் சேர்ந்த அன்றே அவளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு வந்தது. இரவு உணவுக்காக எல்லோரும் அமர்ந்திருந்தோம். உணவு பரிமாறி, பிரார்த்தனை முடியும் வரை யாரும் தட்டில் கை வைக்கக்கூடாது. ஆனால் பிரார்த்தனைக்கு முன்பே சாப்பிட்டு, தண்டனையாக நின்றுகொண்டிருந்தாள் எஸ்தர். அத்தனைப் பேர் மத்தியில் ஒருத்திக்குத் தண்டனை எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்குக் கவலையாக இருந்தது.
மறுநாள் காலை உணவு வேளை. முதலில் இட்லி பரிமாறப்பட்டது. ஆறிப் போய், புளிப்பேறியிருந்த இட்லியின் வாசம் குடலைப் புரட்டியது. ஆனால் சற்றுத் தூரத்தில் அமர்ந்திருந்த எஸ்தர் தட்டு நிறைய இட்லிகளை வாங்கியிருந்தாள். சுவையான கேக்கைச் சாப்பிடும் பாவத்தில் இட்லிகளைப் பிட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள். சட்னி வரும்போது அவள் தட்டில் இரண்டே இட்லிகள்தான் இருந்தன. பிரார்த்தனை முடிவதற்குள் இன்னும் ஓர் இட்லி மாயமானது. அங்கு வந்த வார்டன், எஸ்தரை எழுந்து நிற்கச் சொன்னார்.
’நீயெல்லாம் ஒரு கிறிஸ்துவப் பெண்ணா? எல்லோரும் பிரேயர் முடிகிறவரை காத்திருக்காங்க. உனக்கென்ன? ஒழுங்கீனம்... ஒழுங்கீனம்... உன்னைப் பார்த்து மத்த பிள்ளைகளும் கெட்டுப் போகும்’ என்று திட்டினார்.
எதையும் காதில் வாங்காத எஸ்தர் நின்றுகொண்டே பிரார்த்தனை முடித்து, அடுத்த ஒரு நிமிடத்துக்குள் மீதி இருந்த இட்லியைக் காலி செய்துவிட்டு, முதல் ஆளாக வெளியேறினாள்.
இப்படிச் சாப்பிடும் இடம், தூங்கும் இடம், பிரார்த்தனை நேரம், படிக்கும் நேரம் எல்லாம் எஸ்தர் பெரும்பாலும் நின்றுகொண்டுதான் இருப்பாள். எதையும் மீறுவது அவள் குணமாக மாறி இருந்தது. தண்டனை கொடுத்து, கொடுத்து வார்டன்களுக்கும் சலிப்பு வந்துவிட்டது. இவ்வளவு தண்டனை வாங்கினாலும் அவள் மேல் கொஞ்சம் பரிவு இருந்ததற்குக் காரணம் ஓரளவு நன்றாகப் படித்துவிடுவாள் என்பதே.
எஸ்தர் வீட்டில் அவளைச் சேர்த்து மூன்று பிள்ளைகள். ஆசிரியராக இருந்த அவளுடைய அப்பாவின் சொற்ப வருமானத்தில் மூன்று பிள்ளைகளையும் ஹாஸ்டலில் படிக்க வைப்பதால், அவளைப் பார்ப்பதற்கு யாரும் வரமாட்டார்கள். மாதாமாதம் மணியார்டர் வரும். அவள் ஊரிலிருந்து யாராவது வந்தால் சத்துமாவு கொடுத்து அனுப்புவார்கள். ஆனால் அவள் யாரும் பார்க்க வரவில்லையே என்று கவலைப்பட்டதாகவே தெரியாது.
தன் தோழிகளுடன் எப்போதும் சந்தோஷமாக இருப்பாள். ஞாயிற்றுக்கிழமை தலை குளித்து, யாரிடமாவது வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறப் பாவாடை, தாவணி
வாங்கி அணிந்துகொண்டு முதல் ஆளாக தேவாலயத்துக்குக் கிளம்பிவிடுவாள். அதற்கு அவள் சொல்லும் காரணம், ‘இந்த ஒரு நாள் தான் நம்மள வெளியில் கூட்டிட்டுப் போறாங்க. நாலு பேரைப் பார்க்க முடியுது!’
அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். அப்பா வருகிறார் என்பதால் சிலுவைச் செல்வி தேவாலயம் செல்லவில்லை. (பார்வையாளர்கள் வராத கிறிஸ்துவ மாணவிகள் தேவாலயம் செல்லாவிட்டால் தண்டனை!) நானும் அமுதாவும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்குச் சென்று விட்டோம்.
ஒரு மணி நேரம் கழித்து சிலுவைச் செல்வி எங்களைத் தேடிக் கொண்டு ஓடி வந்தாள். காரணம் புரியாமல் நானும் அமுதாவும் பார்த்தோம். “எங்கெல்லாம் உங்களைத் தேடுறது? பிரேயர் ஹால்ல ஒரே கூட்டம்... பரபரப்பா இருக்கு. எங்கப்பா கிளம்பிட்டார். வாங்கடி போய்ப் பார்ப்போம்’ என்றாள் மூச்சிரைத்தபடி.
அவளுடைய பதற்றம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது. வேக வேகமாக நடந்தோம். வழியில் சில பெண்கள் வந்தார்கள். அவர்களிடம் விசாரித்தோம்.
’பிரேயர் ஹால்ல ஏசு தெரியறார்! நாங்க எல்லாம் பார்த்துட்டோம். சீக்கிரம் போங்க!’
புத்தகங்களை அறையில் வைத்துவிட்டு ஓடினோம்.
’நம்ம எஸ்தருக்குத்தான் முதலில் ஏசு காட்சி கொடுத்தார். அவ சொல்லித்தான் எல்லோரும் பாத்திருக்காங்க! எனக்கும் தெரிஞ்சார்!’ என்று தேன்மொழி அக்கா சொன்னார்.
பிரார்த்தனை கூடத்துக்குள் வழக்கத்தை விடக் கூட்டம். பார்க்க வந்த பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் கூரையை நோக்கி ஜெபித்தபடி இருந்தனர். சிலர் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. அமுதாவும் சிலுவைச் செல்வியும் முட்டி போட்டு ஜெபிக்க ஆரம்பித்தார்கள். நானும் பார்த்தேன். அந்த இடத்தில் சிறிது காரை பெயர்ந்திருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு, கற்பனை செய்து பார்த்தால் கொஞ்சம் சிலுவைக் குறி போலத் தெரிந்தது. மற்றபடி ஒன்றும் தெரியவில்லை.
அமுதாவையும் சிலுவைச் செல்வியையும் பார்த்தேன். அவர்கள் மும்முரமாக ஜபித்தபடி அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் சென்றதும் வெளியில் போகலாம் என்றேன். சிலுவைச் செல்வியும் அமுதாவும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அந்தக் கசகசப்பையும் சத்தத்தையும் விட்டு நான் வெளியில் வந்து நின்றேன்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு அமுதாவும் சிலுவைச் செல்வியும் வருத்தத்துடன் வெளியே வந்தார்கள். அவர்கள் முகமே விஷயத்தைச் சொன்னது. இருந்தாலும் கேட்டேன்.
’உனக்குத் தெரிஞ்சதா சிலுவை?’
’இல்லப்பா... ’ என்று அழுதபடிச் சொன்னாள் சிலுவைச் செல்வி.
அமுதாவைப் பார்த்தேன், அவள் தான் ஏதோ குற்றம் செய்துவிட்டதால்தான் ஏசு தனக்குக் காட்சி தரவில்லை என்றாள்.
’இல்ல அமுதா, எனக்கும் தெரியலை’ என்றேன்.
அமுதாவுக்கும் சிலுவைச் செல்விக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
நாங்கள் மேலும் பலரை விசாரித்தோம். எல்லோரும் தங்களுக்கு ஏசு காட்சி தந்ததாகப் பரவசத்துடன் சொன்னார்கள். சிலுவைச் செல்வியும் அமுதாவும் மறுபடியும் அழ ஆரம்பித்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்குச் சென்றேன். நாங்கள் மூவரும் விரக்தியுடன் அமைதியாக அமர்ந்திருந்தோம். அப்போது பக்கத்து அறையில் பேச்சுச் சத்தம். யாரு? ஆ...! எஸ்தரிடம் அவள் தோழிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
’என்ன நடந்துச்சு எஸ்தர்? இப்பவாவது சொல்லு.’
’உங்களுக்கு எல்லாம் விசிட்டர்ஸ் வந்து, போயிட்டீங்க. எனக்கு இன்னிக்கு என்னவோ மனசே சரியில்லை. சர்ச்சுக்கும் போகப் பிடிக்கலை. அதான் பிரேயர் ஹால்ல போய்த் தனியா உட்கார்ந்து யோசிச்சிட்டிருந்தேன். என்னைப் பார்க்க யாரும் வரமாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சதும் எனக்கு அழுகை வந்துருச்சு. அந்த நேரம் பார்த்து ஏசு பைத்தியம் பிடிச்ச லூசு வந்துச்சு...’
’எத்தனையோ லூசு இருக்கு. எந்த லூசு? ’
’அங்காளப் பரமேஸ்வரி. என்னன்னு காரணம் கேட்டாள். ஒரு இந்துப் பிள்ளை எப்படி ஏசு மேல நம்பிக்கை வச்சிருக்கா பாருன்னு அன்னிக்கு வார்டன் அவளைக் காட்டி, என்னைத் திட்டினது ஞாபகம் வந்துச்சு. உடனே இந்த லூசை இன்னும் லூசாக்கிடலாம்னு முடிவு பண்ணி, ஏசு தெரியறார்னு அந்தக் காரையைக் காட்டினேன். அவ்வளவுதான்! அவ முட்டி போட்டு ஜபிக்க ஆரம்பிச்சிட்டா. திடீர்னு சத்தம் போட்டு அழுதாள். நானே பயந்துட்டேன்! அவளைத் தேடிக்கிட்டு அவளுடைய ஃப்ரெண்ட்ஸ் வந்தாங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா எல்லோருக்கும் ஏசு தெரிய ஆரம்பிச்சார்!’
’அடிப்பாவி! எல்லாம் உன்னுடைய வேலைதானா? எங்களுக்குத் தெரியலையேன்னு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. உன்னை என்ன பண்ணலாம்?’
‘ஒண்ணும் பண்ண வேணாம். நான் இப்ப சந்தோஷமா இருக்கேன். மத்த பிள்ளைகளோட அம்மா, அப்பா எல்லாம் அன்பா விசாரிச்சாங்க. ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க. கூட்டம் கூடி, நிலைமை கட்டு மீறிடுச்சு. இப்ப வெளியில் இருந்து ஃபாதர் எல்லாம் வரப்போறாங்க. சிறப்புப் பிரார்த்தனை நடக்கப் போகுது’ என்று சொல்லி முடித்தாள் எஸ்தர்.
நாங்கள் மூவரும் ஆச்சரியத்தில் உட்கார்ந்திருந்தோம்.
ஹாஸ்டல் மணி ஒலித்தது.
’என்னடி பார்க்கறீங்க? இன்னும் கொஞ்ச நாளைக்கு வார்டன், டீச்சர் எல்லாம் என்கிட்ட எவ்வளவு மரியாதையா நடந்துக்கப் போறாங்கன்னு பாருங்க!’ என்றபடி எழுந்தாள் எஸ்தர்.
மறுநாள் உணவு வேளையில் வழக்கம் போல இட்லிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் எஸ்தர். வார்டன் கண்டும் காணாதது போல நகர்ந்து விட்டார்! நான், அமுதா, சிலுவைச் செல்வி மூவரும் பட்டென்று சிரித்துவிட்டோம். வார்டன் திரும்பினார். நாங்கள் மூவரும் முதல் முறையாக எழுந்து நின்றோம்!
மறுநாள் காலை உணவு வேளை. முதலில் இட்லி பரிமாறப்பட்டது. ஆறிப் போய், புளிப்பேறியிருந்த இட்லியின் வாசம் குடலைப் புரட்டியது. ஆனால் சற்றுத் தூரத்தில் அமர்ந்திருந்த எஸ்தர் தட்டு நிறைய இட்லிகளை வாங்கியிருந்தாள். சுவையான கேக்கைச் சாப்பிடும் பாவத்தில் இட்லிகளைப் பிட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள். சட்னி வரும்போது அவள் தட்டில் இரண்டே இட்லிகள்தான் இருந்தன. பிரார்த்தனை முடிவதற்குள் இன்னும் ஓர் இட்லி மாயமானது. அங்கு வந்த வார்டன், எஸ்தரை எழுந்து நிற்கச் சொன்னார்.
’நீயெல்லாம் ஒரு கிறிஸ்துவப் பெண்ணா? எல்லோரும் பிரேயர் முடிகிறவரை காத்திருக்காங்க. உனக்கென்ன? ஒழுங்கீனம்... ஒழுங்கீனம்... உன்னைப் பார்த்து மத்த பிள்ளைகளும் கெட்டுப் போகும்’ என்று திட்டினார்.
எதையும் காதில் வாங்காத எஸ்தர் நின்றுகொண்டே பிரார்த்தனை முடித்து, அடுத்த ஒரு நிமிடத்துக்குள் மீதி இருந்த இட்லியைக் காலி செய்துவிட்டு, முதல் ஆளாக வெளியேறினாள்.
இப்படிச் சாப்பிடும் இடம், தூங்கும் இடம், பிரார்த்தனை நேரம், படிக்கும் நேரம் எல்லாம் எஸ்தர் பெரும்பாலும் நின்றுகொண்டுதான் இருப்பாள். எதையும் மீறுவது அவள் குணமாக மாறி இருந்தது. தண்டனை கொடுத்து, கொடுத்து வார்டன்களுக்கும் சலிப்பு வந்துவிட்டது. இவ்வளவு தண்டனை வாங்கினாலும் அவள் மேல் கொஞ்சம் பரிவு இருந்ததற்குக் காரணம் ஓரளவு நன்றாகப் படித்துவிடுவாள் என்பதே.
எஸ்தர் வீட்டில் அவளைச் சேர்த்து மூன்று பிள்ளைகள். ஆசிரியராக இருந்த அவளுடைய அப்பாவின் சொற்ப வருமானத்தில் மூன்று பிள்ளைகளையும் ஹாஸ்டலில் படிக்க வைப்பதால், அவளைப் பார்ப்பதற்கு யாரும் வரமாட்டார்கள். மாதாமாதம் மணியார்டர் வரும். அவள் ஊரிலிருந்து யாராவது வந்தால் சத்துமாவு கொடுத்து அனுப்புவார்கள். ஆனால் அவள் யாரும் பார்க்க வரவில்லையே என்று கவலைப்பட்டதாகவே தெரியாது.
தன் தோழிகளுடன் எப்போதும் சந்தோஷமாக இருப்பாள். ஞாயிற்றுக்கிழமை தலை குளித்து, யாரிடமாவது வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறப் பாவாடை, தாவணி
வாங்கி அணிந்துகொண்டு முதல் ஆளாக தேவாலயத்துக்குக் கிளம்பிவிடுவாள். அதற்கு அவள் சொல்லும் காரணம், ‘இந்த ஒரு நாள் தான் நம்மள வெளியில் கூட்டிட்டுப் போறாங்க. நாலு பேரைப் பார்க்க முடியுது!’
அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். அப்பா வருகிறார் என்பதால் சிலுவைச் செல்வி தேவாலயம் செல்லவில்லை. (பார்வையாளர்கள் வராத கிறிஸ்துவ மாணவிகள் தேவாலயம் செல்லாவிட்டால் தண்டனை!) நானும் அமுதாவும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்குச் சென்று விட்டோம்.
ஒரு மணி நேரம் கழித்து சிலுவைச் செல்வி எங்களைத் தேடிக் கொண்டு ஓடி வந்தாள். காரணம் புரியாமல் நானும் அமுதாவும் பார்த்தோம். “எங்கெல்லாம் உங்களைத் தேடுறது? பிரேயர் ஹால்ல ஒரே கூட்டம்... பரபரப்பா இருக்கு. எங்கப்பா கிளம்பிட்டார். வாங்கடி போய்ப் பார்ப்போம்’ என்றாள் மூச்சிரைத்தபடி.
அவளுடைய பதற்றம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது. வேக வேகமாக நடந்தோம். வழியில் சில பெண்கள் வந்தார்கள். அவர்களிடம் விசாரித்தோம்.
’பிரேயர் ஹால்ல ஏசு தெரியறார்! நாங்க எல்லாம் பார்த்துட்டோம். சீக்கிரம் போங்க!’
புத்தகங்களை அறையில் வைத்துவிட்டு ஓடினோம்.
’நம்ம எஸ்தருக்குத்தான் முதலில் ஏசு காட்சி கொடுத்தார். அவ சொல்லித்தான் எல்லோரும் பாத்திருக்காங்க! எனக்கும் தெரிஞ்சார்!’ என்று தேன்மொழி அக்கா சொன்னார்.
பிரார்த்தனை கூடத்துக்குள் வழக்கத்தை விடக் கூட்டம். பார்க்க வந்த பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் கூரையை நோக்கி ஜெபித்தபடி இருந்தனர். சிலர் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. அமுதாவும் சிலுவைச் செல்வியும் முட்டி போட்டு ஜெபிக்க ஆரம்பித்தார்கள். நானும் பார்த்தேன். அந்த இடத்தில் சிறிது காரை பெயர்ந்திருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு, கற்பனை செய்து பார்த்தால் கொஞ்சம் சிலுவைக் குறி போலத் தெரிந்தது. மற்றபடி ஒன்றும் தெரியவில்லை.
அமுதாவையும் சிலுவைச் செல்வியையும் பார்த்தேன். அவர்கள் மும்முரமாக ஜபித்தபடி அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் சென்றதும் வெளியில் போகலாம் என்றேன். சிலுவைச் செல்வியும் அமுதாவும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அந்தக் கசகசப்பையும் சத்தத்தையும் விட்டு நான் வெளியில் வந்து நின்றேன்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு அமுதாவும் சிலுவைச் செல்வியும் வருத்தத்துடன் வெளியே வந்தார்கள். அவர்கள் முகமே விஷயத்தைச் சொன்னது. இருந்தாலும் கேட்டேன்.
’உனக்குத் தெரிஞ்சதா சிலுவை?’
’இல்லப்பா... ’ என்று அழுதபடிச் சொன்னாள் சிலுவைச் செல்வி.
அமுதாவைப் பார்த்தேன், அவள் தான் ஏதோ குற்றம் செய்துவிட்டதால்தான் ஏசு தனக்குக் காட்சி தரவில்லை என்றாள்.
’இல்ல அமுதா, எனக்கும் தெரியலை’ என்றேன்.
அமுதாவுக்கும் சிலுவைச் செல்விக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
நாங்கள் மேலும் பலரை விசாரித்தோம். எல்லோரும் தங்களுக்கு ஏசு காட்சி தந்ததாகப் பரவசத்துடன் சொன்னார்கள். சிலுவைச் செல்வியும் அமுதாவும் மறுபடியும் அழ ஆரம்பித்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்குச் சென்றேன். நாங்கள் மூவரும் விரக்தியுடன் அமைதியாக அமர்ந்திருந்தோம். அப்போது பக்கத்து அறையில் பேச்சுச் சத்தம். யாரு? ஆ...! எஸ்தரிடம் அவள் தோழிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
’என்ன நடந்துச்சு எஸ்தர்? இப்பவாவது சொல்லு.’
’உங்களுக்கு எல்லாம் விசிட்டர்ஸ் வந்து, போயிட்டீங்க. எனக்கு இன்னிக்கு என்னவோ மனசே சரியில்லை. சர்ச்சுக்கும் போகப் பிடிக்கலை. அதான் பிரேயர் ஹால்ல போய்த் தனியா உட்கார்ந்து யோசிச்சிட்டிருந்தேன். என்னைப் பார்க்க யாரும் வரமாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சதும் எனக்கு அழுகை வந்துருச்சு. அந்த நேரம் பார்த்து ஏசு பைத்தியம் பிடிச்ச லூசு வந்துச்சு...’
’எத்தனையோ லூசு இருக்கு. எந்த லூசு? ’
’அங்காளப் பரமேஸ்வரி. என்னன்னு காரணம் கேட்டாள். ஒரு இந்துப் பிள்ளை எப்படி ஏசு மேல நம்பிக்கை வச்சிருக்கா பாருன்னு அன்னிக்கு வார்டன் அவளைக் காட்டி, என்னைத் திட்டினது ஞாபகம் வந்துச்சு. உடனே இந்த லூசை இன்னும் லூசாக்கிடலாம்னு முடிவு பண்ணி, ஏசு தெரியறார்னு அந்தக் காரையைக் காட்டினேன். அவ்வளவுதான்! அவ முட்டி போட்டு ஜபிக்க ஆரம்பிச்சிட்டா. திடீர்னு சத்தம் போட்டு அழுதாள். நானே பயந்துட்டேன்! அவளைத் தேடிக்கிட்டு அவளுடைய ஃப்ரெண்ட்ஸ் வந்தாங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா எல்லோருக்கும் ஏசு தெரிய ஆரம்பிச்சார்!’
’அடிப்பாவி! எல்லாம் உன்னுடைய வேலைதானா? எங்களுக்குத் தெரியலையேன்னு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. உன்னை என்ன பண்ணலாம்?’
‘ஒண்ணும் பண்ண வேணாம். நான் இப்ப சந்தோஷமா இருக்கேன். மத்த பிள்ளைகளோட அம்மா, அப்பா எல்லாம் அன்பா விசாரிச்சாங்க. ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க. கூட்டம் கூடி, நிலைமை கட்டு மீறிடுச்சு. இப்ப வெளியில் இருந்து ஃபாதர் எல்லாம் வரப்போறாங்க. சிறப்புப் பிரார்த்தனை நடக்கப் போகுது’ என்று சொல்லி முடித்தாள் எஸ்தர்.
நாங்கள் மூவரும் ஆச்சரியத்தில் உட்கார்ந்திருந்தோம்.
ஹாஸ்டல் மணி ஒலித்தது.
’என்னடி பார்க்கறீங்க? இன்னும் கொஞ்ச நாளைக்கு வார்டன், டீச்சர் எல்லாம் என்கிட்ட எவ்வளவு மரியாதையா நடந்துக்கப் போறாங்கன்னு பாருங்க!’ என்றபடி எழுந்தாள் எஸ்தர்.
மறுநாள் உணவு வேளையில் வழக்கம் போல இட்லிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் எஸ்தர். வார்டன் கண்டும் காணாதது போல நகர்ந்து விட்டார்! நான், அமுதா, சிலுவைச் செல்வி மூவரும் பட்டென்று சிரித்துவிட்டோம். வார்டன் திரும்பினார். நாங்கள் மூவரும் முதல் முறையாக எழுந்து நின்றோம்!
Wednesday, June 9, 2010
இவர்களா காப்பாற்றப் போகிறார்கள்?
அந்தக் கொடூரம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் மரண ஓலங்கள் நிற்கவில்லை. உயிர் அற்ற உடல்களும் எலும்புக்கூடுகளும் கண் முன்னே வந்து நியாயம் கேட்கின்றன. பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போய்விட்டனர். இந்த 26 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் இல்லை. தண்ணீரிலும் மண்ணிலும் கலந்த நஞ்சால் இன்று பிறக்கும் குழந்தை கூட அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகிக்கு இணையானது இந்தியாவின் போபால்.
யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கொள்கைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்த காரணத்தால் பல நாடுகளும் இதனை அனுமதிக்கவில்லை. ஆனால் மக்களின் உயிர் மேல் மதிப்பு இல்லாத இந்திய அரசு இருகரம் நீட்டி, அதனை அரவணைத்தது. நிறுவனம் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தபோது சோதனைக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்பு விஷயங்கள் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதை எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும் அலட்சியம் தொடர்ந்திருக்கிறது. அந்த அலட்சியத்துக்கு விலையாக ஒன்றும் அறியாத அப்பாவிகள் பலியாகியிருக்கின்றனர். பல குடும்பங்களில் ஒருவர் கூட மிச்சம் இல்லை. கை, கால் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல், கேன்சர், தோல் வியாதிகள் என்று உயிர் பிழைத்த பலரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றது. 8 பேருக்கு 2 ஆண்டு காலம் சிறைத் தண்டனை அளித்த கையோடு, ஜாமீனையும் வழங்கி சாதனை செய்திருக்கிறது நீதிமன்றம்!. மீண்டும் ஒருமுறை இந்திய மக்கள் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் தலைகுனிந்து நிற்கிறார்கள். கால் நூற்றாண்டு போராட்டத்துக்கு ஒன்றும் பலன் இல்லை.
மிகக் குறைந்த காப்பீட்டுத் தொகை வழங்கியதோடு எங்கள் கடமை முடிந்தது என்று கழன்றுகொண்டுவிட்டது யூனியன் கார்பைட் நிறுவனம். யூனியன் கார்பைடின் தலைவர் வாரன் ஆண்டர்சன்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஜாமீனில் வெளிநாடு சென்றுவிட்டார். இதுவரை இந்தியா திரும்பவில்லை. தீர்ப்பு வந்த திங்களன்று வரை சொகுசாக அவருடைய இல்லத்தில் வசித்திருக்கிறார். இப்போது அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. தீர்ப்பில் அவரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை! குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவர் மரணமடைந்து விட்டார். மீதி ஏழு பேரும் அந்த நிறுவனத்தின் இந்திய உயர் அதிகாரிகள்.
மக்களுக்காகத்தான் அரசாங்கம். ஆனால் நீண்ட கால வழக்கு இழுத்தடிப்பு, குற்றவாளிகள் தப்பித்தல் போன்ற காரணங்களுக்கு இந்திய அரசே துணை நின்றிருக்கிறது! இதில் ஒரு குற்றவாளிக்கு பத்மபூஷன் விருது (வழக்கு நடந்ததால் வழங்கப்படவில்லை) வேறு அறிவித்திருக்கிறது!
குற்றவாளிகள் பலரும் இப்போதே முதுமையில் இருக்கிறார்கள். இதற்குப் பிறகு மேல்முறையீடு செய்து, ஒருவேளை தண்டனை கிடைத்தால் அதை அனுபவிக்க யார் இருக்கப் போகிறார்கள்? ருச்சிகா கிர்ஹோத்ரா வழக்கிலும் இதுவே நடந்திருக்கிறது. பணம், அதிகாரம், அரசியல் பலம் இருந்தால் இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்கு மிகவும் கேவலமானது.
சொந்த நாட்டு மக்களின் உயிர்களையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள விரும்பாத இந்திய அரசாங்கமா ஈழத்தில் அழிந்துகொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்றப் போகிறது?
யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கொள்கைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்த காரணத்தால் பல நாடுகளும் இதனை அனுமதிக்கவில்லை. ஆனால் மக்களின் உயிர் மேல் மதிப்பு இல்லாத இந்திய அரசு இருகரம் நீட்டி, அதனை அரவணைத்தது. நிறுவனம் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தபோது சோதனைக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்பு விஷயங்கள் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதை எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும் அலட்சியம் தொடர்ந்திருக்கிறது. அந்த அலட்சியத்துக்கு விலையாக ஒன்றும் அறியாத அப்பாவிகள் பலியாகியிருக்கின்றனர். பல குடும்பங்களில் ஒருவர் கூட மிச்சம் இல்லை. கை, கால் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல், கேன்சர், தோல் வியாதிகள் என்று உயிர் பிழைத்த பலரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றது. 8 பேருக்கு 2 ஆண்டு காலம் சிறைத் தண்டனை அளித்த கையோடு, ஜாமீனையும் வழங்கி சாதனை செய்திருக்கிறது நீதிமன்றம்!. மீண்டும் ஒருமுறை இந்திய மக்கள் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் தலைகுனிந்து நிற்கிறார்கள். கால் நூற்றாண்டு போராட்டத்துக்கு ஒன்றும் பலன் இல்லை.
மிகக் குறைந்த காப்பீட்டுத் தொகை வழங்கியதோடு எங்கள் கடமை முடிந்தது என்று கழன்றுகொண்டுவிட்டது யூனியன் கார்பைட் நிறுவனம். யூனியன் கார்பைடின் தலைவர் வாரன் ஆண்டர்சன்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஜாமீனில் வெளிநாடு சென்றுவிட்டார். இதுவரை இந்தியா திரும்பவில்லை. தீர்ப்பு வந்த திங்களன்று வரை சொகுசாக அவருடைய இல்லத்தில் வசித்திருக்கிறார். இப்போது அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. தீர்ப்பில் அவரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை! குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவர் மரணமடைந்து விட்டார். மீதி ஏழு பேரும் அந்த நிறுவனத்தின் இந்திய உயர் அதிகாரிகள்.
மக்களுக்காகத்தான் அரசாங்கம். ஆனால் நீண்ட கால வழக்கு இழுத்தடிப்பு, குற்றவாளிகள் தப்பித்தல் போன்ற காரணங்களுக்கு இந்திய அரசே துணை நின்றிருக்கிறது! இதில் ஒரு குற்றவாளிக்கு பத்மபூஷன் விருது (வழக்கு நடந்ததால் வழங்கப்படவில்லை) வேறு அறிவித்திருக்கிறது!
குற்றவாளிகள் பலரும் இப்போதே முதுமையில் இருக்கிறார்கள். இதற்குப் பிறகு மேல்முறையீடு செய்து, ஒருவேளை தண்டனை கிடைத்தால் அதை அனுபவிக்க யார் இருக்கப் போகிறார்கள்? ருச்சிகா கிர்ஹோத்ரா வழக்கிலும் இதுவே நடந்திருக்கிறது. பணம், அதிகாரம், அரசியல் பலம் இருந்தால் இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்கு மிகவும் கேவலமானது.
சொந்த நாட்டு மக்களின் உயிர்களையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள விரும்பாத இந்திய அரசாங்கமா ஈழத்தில் அழிந்துகொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்றப் போகிறது?
Sunday, June 6, 2010
ஏதோ ஒன்று குறைகிறது!
இரண்டு நாள்களாகக் கவனித்து வருகிறேன். எங்கள் அபார்ட்மெண்ட் குழந்தைகளில் ஆறு பேர் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து, மாடியில் குழுமிவிடுகிறார்கள். ஒரு பெட் ஷீட் விரித்து உட்கார்கிறார்கள். யோகா, ஓடிப்பிடித்தல், பாட்டு, நடனம் என்று சில நிமிடங்களுக்குள் காட்சி மாறுகிறது. அருகில் ஒரு பெரிய பாட்டில் தண்ணீர், ஒரு ஃபேண்டா பாட்டில், சிப்ஸ், முறுக்கு...! ஓ... இவர்கள் எல்லோரும் பிக்னிக் வந்திருக்கிறார்கள்! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு தின்பண்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அடடா! அதே கான்செப்ட்!
என்னுடைய எட்டு வயதில் ஒரு முறை எங்கள் கிராமத்துக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்தோம். சினிமாவில் வரும் கிராமங்களைப் போல அவ்வளவு பசுமையான கிராமம் அல்ல. கம்மாய், ஊருணி, கோயில், இடிந்த அரண்மனை, கருவேலங்காடு, வயல்காடு என்று இருக்கும். என் வயதை ஒத்த பெண்கள் கூட அப்போதே சமைக்க, தண்ணீர் எடுக்க, வீட்டு வேலை செய்ய என்றுதான் இருப்பார்கள். அந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு விளையாட என்று அவர்களுக்குத் தனியாக நேரம் இருக்காது. ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையில் விளையாட வருவார்கள். சிறிது நேரத்திலேயே அவர்களைத் தேடிக்கொண்டு அம்மாக்கள் வந்துவிடுவார்கள். இதனால் இந்தப் பெண்கள் எல்லாம் சேர்ந்து ‘கூட்டாஞ்சோறு’ என்று ஒரு ரகசிய விளையாட்டை ஆண்டுக்குச் சிலமுறை விளையாடுவது வழக்கம்.
நான் சென்றிருந்தபோது அவர்கள் விளையாடத் திட்டமிட்டிருந்தனர். இந்தக் கூட்டத்துக்கு என் அத்தைப் பெண் நாகவள்ளிதான் தலைவி. அவர் தோழிகள் ஐந்து பேர், அவர்களுடன் நாகவள்ளியின் தங்கை மீனா. அவர்களைவிட இளையவர்களைப் பொதுவாக அவர்கள் இந்த விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. மீனாவின் சிபாரிசில் என்னைச் சேர்த்துக்கொண்டார் நாகவள்ளி. பல நாள்களாக அவர்கள் யோசித்து திட்டத்தைத் தீட்டி வைத்திருந்தார்கள்.
இந்த முறை அவர்கள் (நாங்கள்!) சமைக்கப் போவது கேசரி. ரவை, சர்க்கரை, எண்ணெய், விறகு, பாத்திரம், குடம், தீப்பெட்டி என்று ஆளுக்கு ஒரு பொருளை யார் யார் கொண்டுவருவது, எத்தனை மணிக்குக் கிளம்புவது என்று முடிவு செய்தார்கள். எந்த வீட்டிலும் அனுமதி கிடைக்காது என்பதால் இந்த விளையாட்டு ரகசியமாகவே விளையாடப்படும். நான் மட்டும் அம்மாவிடம் முறையாக அனுமதி பெற்றிருந்தேன்.
மறுநாள் காலை வேலைகளை ஓரளவு முடித்துவிட்டு ஒவ்வொருவராக இடிந்த அரண்மனைக்குப் பின்பக்கம் வந்து சேர்ந்தார்கள். கருவேல மரங்களுக்கு நடுவில் பயணம் ஆரம்பித்தது. ஆள் அரவம் இல்லாத இடமாகப் பார்த்து ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். சற்றுத் தூரத்தில் கம்மாய் இருந்தது.
ஒருவர் தண்ணீர் கொண்டுவர, இன்னொருவர் முள் எடுத்து வர என்று பரபரப்பாக இயங்கினார்கள். மூன்று கற்களை வைத்து அடுப்பை உருவாக்கி முள்ளையும் விறகையும் வைத்து எரிக்க ஆரம்பித்தார் நாகவள்ளி. ரவை நிறைய இருந்தது, ஆனால் சர்க்கரை மிகவும் குறைவாக இருந்தது. நாகவள்ளி சர்க்கரை கொண்டு வந்தவளையும் எண்ணெய் கொண்டு வந்தவளையும் திட்டினார். பிறகு ஒருவழியாகச் சமாதானமாகி, கேசரி செய்ய ஆரம்பித்தார்கள்.
எல்லோரும் அடுப்பைச் சுற்றி அமர்ந்துகொண்டு, ஊர்க் கதைகள் பேசினார்கள். ஊரில் நடக்கும் ஒரு காதல் கதையைப் பகிர்ந்துகொண்டார்கள். எனக்கு அவர்கள் பேசுவது புரியா விட்டாலும் கேட்டுக்கொண்டிருந்தேன். அரைமணி நேரத்தில் கேசரி தயாராகிவிட்டது. சூடு குறையட்டும் என்று சொல்லிவிட்டு, விளையாட ஆரம்பித்தோம். கேசரி என்பதால் விளையாட்டில் யாருக்கும் அவ்வளவு ஈடுபாடு இல்லை. (அப்போதெல்லாம் கேசரி எப்போதாவது தான் செய்வார்கள்). அருகில் இருந்த பூசணி இலைகளைப் பறிந்து வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கரண்டி கேசரி பரிமாறப்பட்டது.
வண்ணம் சேர்க்காத வெள்ளை நிறக் கேசரியாக இருந்தாலும் ஆர்வத்தைத் தூண்டியது. எல்லோரும் மிகவும் ரசித்து, ருசித்துப் பேசிக்கொண்டே, சந்தோஷமாகச் சாப்பிட ஆரம்பித்தோம். சர்க்கரை பத்தாமல், போதிய எண்ணெய் இல்லாமல், உப்புமாவுக்குச் சர்க்கரைத் தொட்டு சாப்பிடுவதைப் போலத்தான் இருந்தது அந்த கூட்டாங் கேசரி . ஆனால் எங்கள் யாருக்கும் அப்போது இப்படித் தோன்றவேயில்லை. வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாக வந்த த்ரில், அரட்டை, நாங்களே செய்த இனிப்பு என்ற பெருமிதம் எல்லாம் சேர்ந்து அப்படி ஒரு சந்தோஷத்தை அளித்திருந்தது. எல்லோரும் வயிறு நிறைய சாப்பிட்டு, தண்ணீர் குடித்து, சற்று ஓய்வெடுத்தோம். பாத்திரங்களைச் சுத்தம் செய்தோம். அவரவர் பொருள்களை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தோம்.
ஊருக்குள் நுழைந்தவுடன், எதிரில் வந்த ஓர் அம்மா, “ ஏண்டி அங்காளம், எங்கே போயிருந்தே? உங்கம்மா உன்னைக் காணாம்னு தேடிக்கிட்டு இருக்கு’ என்று சொல்லவும் எல்லோரும் தேனீ கூட்டில் கல் பட்டது போல களைந்து சென்றார்கள். நானும் எங்கள் வீடு நோக்கி ஓடி வந்தேன். வழியில் அங்காளத்தின் அம்மா அருகில் இருந்த குச்சியை எடுத்துகொண்டு, “எங்கே போனடி? தனியாளா வேலை செஞ்சிட்டிருக்கேன். தண்ணி எடுக்கப் போறேன்னு கிளம்பினவ இப்பத்தான் வர்றீயா?’ என்றபடி ஓடி வர, அங்காளம் பக்கத்துச் சந்தில் புகுந்து மறைந்தார்.
இன்று நெய் வடிய, முந்திரிப் பருப்பு மிதக்க, பச்சைக் கற்பூர வாசனையுடன் கேசரி செய்தாலும், அந்தக் கூட்டாங் கேசரியில் இருந்த சுவையில் ஏதோ ஒன்று குறைவது போலிருக்கிறது!
என்னுடைய எட்டு வயதில் ஒரு முறை எங்கள் கிராமத்துக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்தோம். சினிமாவில் வரும் கிராமங்களைப் போல அவ்வளவு பசுமையான கிராமம் அல்ல. கம்மாய், ஊருணி, கோயில், இடிந்த அரண்மனை, கருவேலங்காடு, வயல்காடு என்று இருக்கும். என் வயதை ஒத்த பெண்கள் கூட அப்போதே சமைக்க, தண்ணீர் எடுக்க, வீட்டு வேலை செய்ய என்றுதான் இருப்பார்கள். அந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு விளையாட என்று அவர்களுக்குத் தனியாக நேரம் இருக்காது. ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையில் விளையாட வருவார்கள். சிறிது நேரத்திலேயே அவர்களைத் தேடிக்கொண்டு அம்மாக்கள் வந்துவிடுவார்கள். இதனால் இந்தப் பெண்கள் எல்லாம் சேர்ந்து ‘கூட்டாஞ்சோறு’ என்று ஒரு ரகசிய விளையாட்டை ஆண்டுக்குச் சிலமுறை விளையாடுவது வழக்கம்.
நான் சென்றிருந்தபோது அவர்கள் விளையாடத் திட்டமிட்டிருந்தனர். இந்தக் கூட்டத்துக்கு என் அத்தைப் பெண் நாகவள்ளிதான் தலைவி. அவர் தோழிகள் ஐந்து பேர், அவர்களுடன் நாகவள்ளியின் தங்கை மீனா. அவர்களைவிட இளையவர்களைப் பொதுவாக அவர்கள் இந்த விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. மீனாவின் சிபாரிசில் என்னைச் சேர்த்துக்கொண்டார் நாகவள்ளி. பல நாள்களாக அவர்கள் யோசித்து திட்டத்தைத் தீட்டி வைத்திருந்தார்கள்.
இந்த முறை அவர்கள் (நாங்கள்!) சமைக்கப் போவது கேசரி. ரவை, சர்க்கரை, எண்ணெய், விறகு, பாத்திரம், குடம், தீப்பெட்டி என்று ஆளுக்கு ஒரு பொருளை யார் யார் கொண்டுவருவது, எத்தனை மணிக்குக் கிளம்புவது என்று முடிவு செய்தார்கள். எந்த வீட்டிலும் அனுமதி கிடைக்காது என்பதால் இந்த விளையாட்டு ரகசியமாகவே விளையாடப்படும். நான் மட்டும் அம்மாவிடம் முறையாக அனுமதி பெற்றிருந்தேன்.
மறுநாள் காலை வேலைகளை ஓரளவு முடித்துவிட்டு ஒவ்வொருவராக இடிந்த அரண்மனைக்குப் பின்பக்கம் வந்து சேர்ந்தார்கள். கருவேல மரங்களுக்கு நடுவில் பயணம் ஆரம்பித்தது. ஆள் அரவம் இல்லாத இடமாகப் பார்த்து ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். சற்றுத் தூரத்தில் கம்மாய் இருந்தது.
ஒருவர் தண்ணீர் கொண்டுவர, இன்னொருவர் முள் எடுத்து வர என்று பரபரப்பாக இயங்கினார்கள். மூன்று கற்களை வைத்து அடுப்பை உருவாக்கி முள்ளையும் விறகையும் வைத்து எரிக்க ஆரம்பித்தார் நாகவள்ளி. ரவை நிறைய இருந்தது, ஆனால் சர்க்கரை மிகவும் குறைவாக இருந்தது. நாகவள்ளி சர்க்கரை கொண்டு வந்தவளையும் எண்ணெய் கொண்டு வந்தவளையும் திட்டினார். பிறகு ஒருவழியாகச் சமாதானமாகி, கேசரி செய்ய ஆரம்பித்தார்கள்.
எல்லோரும் அடுப்பைச் சுற்றி அமர்ந்துகொண்டு, ஊர்க் கதைகள் பேசினார்கள். ஊரில் நடக்கும் ஒரு காதல் கதையைப் பகிர்ந்துகொண்டார்கள். எனக்கு அவர்கள் பேசுவது புரியா விட்டாலும் கேட்டுக்கொண்டிருந்தேன். அரைமணி நேரத்தில் கேசரி தயாராகிவிட்டது. சூடு குறையட்டும் என்று சொல்லிவிட்டு, விளையாட ஆரம்பித்தோம். கேசரி என்பதால் விளையாட்டில் யாருக்கும் அவ்வளவு ஈடுபாடு இல்லை. (அப்போதெல்லாம் கேசரி எப்போதாவது தான் செய்வார்கள்). அருகில் இருந்த பூசணி இலைகளைப் பறிந்து வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கரண்டி கேசரி பரிமாறப்பட்டது.
வண்ணம் சேர்க்காத வெள்ளை நிறக் கேசரியாக இருந்தாலும் ஆர்வத்தைத் தூண்டியது. எல்லோரும் மிகவும் ரசித்து, ருசித்துப் பேசிக்கொண்டே, சந்தோஷமாகச் சாப்பிட ஆரம்பித்தோம். சர்க்கரை பத்தாமல், போதிய எண்ணெய் இல்லாமல், உப்புமாவுக்குச் சர்க்கரைத் தொட்டு சாப்பிடுவதைப் போலத்தான் இருந்தது அந்த கூட்டாங் கேசரி . ஆனால் எங்கள் யாருக்கும் அப்போது இப்படித் தோன்றவேயில்லை. வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாக வந்த த்ரில், அரட்டை, நாங்களே செய்த இனிப்பு என்ற பெருமிதம் எல்லாம் சேர்ந்து அப்படி ஒரு சந்தோஷத்தை அளித்திருந்தது. எல்லோரும் வயிறு நிறைய சாப்பிட்டு, தண்ணீர் குடித்து, சற்று ஓய்வெடுத்தோம். பாத்திரங்களைச் சுத்தம் செய்தோம். அவரவர் பொருள்களை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தோம்.
ஊருக்குள் நுழைந்தவுடன், எதிரில் வந்த ஓர் அம்மா, “ ஏண்டி அங்காளம், எங்கே போயிருந்தே? உங்கம்மா உன்னைக் காணாம்னு தேடிக்கிட்டு இருக்கு’ என்று சொல்லவும் எல்லோரும் தேனீ கூட்டில் கல் பட்டது போல களைந்து சென்றார்கள். நானும் எங்கள் வீடு நோக்கி ஓடி வந்தேன். வழியில் அங்காளத்தின் அம்மா அருகில் இருந்த குச்சியை எடுத்துகொண்டு, “எங்கே போனடி? தனியாளா வேலை செஞ்சிட்டிருக்கேன். தண்ணி எடுக்கப் போறேன்னு கிளம்பினவ இப்பத்தான் வர்றீயா?’ என்றபடி ஓடி வர, அங்காளம் பக்கத்துச் சந்தில் புகுந்து மறைந்தார்.
இன்று நெய் வடிய, முந்திரிப் பருப்பு மிதக்க, பச்சைக் கற்பூர வாசனையுடன் கேசரி செய்தாலும், அந்தக் கூட்டாங் கேசரியில் இருந்த சுவையில் ஏதோ ஒன்று குறைவது போலிருக்கிறது!
Subscribe to:
Posts (Atom)