Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

Tuesday, January 6, 2009

வாசிக்க... சுவாசிக்க... 1

சென்ற ஆண்டு புத்தகக் கண்காட்சியில் 68 Prodigy புத்தகங்களுடன் வாசகர்களைச் சந்தித்தோம். இந்த ஆண்டு புதிதாக 112 புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். மொத்தம் 180 புத்தகங்களுடன் களத்தில் இறங்குகிறோம். சின்னக் குழந்தை முதல் கல்லூரி மாணவர் வரை அனைவரின் விருப்பத்தையும் Prodigy ஸ்டால் பூர்த்தி செய்யும்.

இந்த ஆண்டு Prodigy புத்தகங்களில் ஒரு சில உங்களுக்காக...

அம்பேத்கர்

தனக்குக் கிடைக்காத அத்தனை உரிமைகளும் தன்னுடைய இனத்துக்கு கிடைக்க வேண்டும் என்று போராடிய ஒப்பற்ற தலைவரின் வாழ்க்கை.

கணித மேதை ராமானுஜன்

வியக்கவைக்கும் கணிதத் திறமையால் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தவர் ராமானுஜன். கணித உலகில் இந்தியா, தலை நிமிர்ந்து நிற்கக் காரணமானவரின் நெகிழ்ச்சியூட்டும் வரலாறு.

மொஸார்ட்

இசையே வாழ்க்கையாக வாழ்க்கையே இசையாக உருகிக் கரைந்தவர் மொஸார்ட். இசையால் உலகை வசப்படுத்திய உன்னதக் கலைஞனின் நெகிழ்ச்சியூட்டும் வாழ்க்கை.

லியானார்டோ டா வின்ச்சி

இவர்தான் லியனார்டோ என்று திட்டவடமாக வரையறுத்துச் சொல்வது பாய்ந்து வரும் நீர்வீழ்ச்சியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்குவதற்குச் சமமானது. லியனார்டோவின் ஆற்றலில் ஒரு துளி நம்மிடம் இருந்தாலும் போதும், உலகை வசப்படுத்திவிடலாம்.

மெகல்லன்


கடல் வழியாக உலகைச் சுற்றிவர முதன்முதலில் பயணம் மேற்கொண்ட பயணி மெகல்லனின் அசாத்தியமான வாழ்க்கை.

செஸ்வநாதன் ஆனந்த்

64 கட்டங்களின் அகில உலக ராஜாவாக விளங்கும் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை, இன்றைய இளைஞர்களுக்கு ஓர் உற்சாக டானிக்.

செவ்வாய் கிரகம்

மனிதனை ஈர்த்துக்கொண்டிருக்கும் ஒரே கிரகம் செவ்வாய். அங்கே காற்று உண்டா? தண்ணீர் உண்டா? வேற்றுகிரகவாசிகள் உண்டா? நம்மால் செவ்வாய்க்குச் செல்லமுடியுமா? குடியேற முடியுமா? செவ்வாய் கிரகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.

மெசபடோமியா நாகரிகம்

சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனித குலத்தின் முன்னோர்களின் சரித்திரம் இது. நாகரிகத்தின் தொட்டில் என்று கொண்டாடப்படும் மெசபடோமியாவை அறிமுகம் செய்துவைக்கிறது இந்தப் புத்தகம்.

பெஞ்சமின் ஃபிராங்ளின்

அமெரிக்க விடுதலைப் போரில் வெற்றிக்கு வித்திட்டவர்களுள் ஒருவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் கூட. மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அமெரிக்காவின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவராக மிளிர்ந்தவரின் வாழ்க்கை.

வீரபாண்டிய கட்டபொம்மன்

தம் வாழ்வின் எந்தக் கணத்திலும் வெள்ளையனுக்கு அடிபணியக்கூடாது என்று வாழ்ந்து காட்டிய மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள்முனை வாழ்க்கை.