Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Wednesday, April 7, 2010

உதவுங்கள்...

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBIN 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

Friday, December 11, 2009

அற்புதமான உலக இலக்கியப் புத்தகங்கள்!

சென்னை புத்தகக் கண்காட்சி

வாழ்க்கை, அறிவியல், நாடுகள், மதங்கள், வானியல், நாகரிகங்கள், வரலாறு என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் Prodigy புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் உலக இலக்கியப் புத்தகங்களை அறிமுகம் செய்கிறோம்.

Prodigy

வழங்கும்
அற்புதமான உலக இலக்கியப் புத்தகங்கள்!

சார்லஸ் டிக்கன்ஸ்
ராபர்ட் லூயி ஸ்டீவன்சன்
ஜுல்ஸ் வெர்ன்
அன்னா சிவெல்
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்
க்ரிம் பிரதர்ஸ்
H.G.வெல்ஸ்
அலெக்சாண்டர் டூமாஸ்
ஓ ஹென்றி
ருட்யார்ட் கிப்ளிங்
ஜோஹன்னா ஸ்பைரி
ஜொநாதன் ஸ்விஃப்ட்
L.ஃப்ராங்க் பாம்
மார்க் ட்வைன்
லியோ டால்ஸ்டாய்
லூயி கரோல்
ஆஸ்கர் வைல்ட்

உலகம் கொண்டாடும் எழுத்தாளர்களின் அற்புதமான படைப்புகள் சுருக்கப்பட்ட வடிவத்தில் தமிழில் வருகின்றன. மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் கதைகளுக்கு ஏற்ப பிரமாதமான ஓவியங்கள், கதை நடக்கும் இடத்துக்கே நம்மை அழைத்துச் செல்லும்விதத்தில் அமைந்துள்ளன.


கிறிஸ்துமஸ் கீதம்
தவளை இளவரசன்!
கடத்தப்பட்டவன்
நைட்டிங்கேலும் ரோஜாவும்
ஜங்கிள் புக்
கால இயந்திரம்
இரு நகரங்களின் கதை
தும்பிக்கை வந்தது எப்படி?
டேவிட் காப்பர்ஃபீல்ட்
கலிவரின் பயணங்கள்!
80 நாள்களில் உலகப் பயணம்!
பனி மனிதன்!
ஹெய்டி
ஆலிவர் ட்விஸ்ட்
கோழை சிங்கமும் பசித்த புலியும்
செவ்விந்தியர் தலைவன் கடத்தல்!
பிளாக் பியூட்டி
ஹக்கிள்பெர்ரி ஃபின்
புதையல் தீவு!
மூன்று துப்பாக்கி வீரர்கள்
பூமியின் மையத்துக்கு ஒரு பயணம்!
மூன்று கேள்விகள்
ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?
இளவரசனும் ஏழையும்
டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட்
ஆழ்கடலில் சாகசப் பயணம்!
ஆலிஸின் அதிசய உலகம்!


80 பக்கங்கள் விலை : ரூ.25/-














Monday, July 6, 2009

வானில் ஒரு தீபாவளி!

அன்று காலை சூரிய கிரகணம் என்பதால் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி விட்டனர். சாப்பிடக்கூடாது, குளிக்கக்கூடாது, வெளியில் வரக்கூடாது என்று காலம் காலமாகச் சொல்லி வந்த விஷயங்களை மக்கள் சரியாகப் பின்பற்றினார்கள். தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. வழக்கம் போல எங்கள் வீடு எப்படி இருக்குமோ அப்படித்தான் அன்றும் இருந்தது. அம்மா காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

நேரம் நெருங்கியது. அம்மா, அப்பா, தங்கைகள் அனைவரும் ஆளுக்கு ஒரு சூரியக் கண்ணாடியைத் தூக்கிக்கொண்டு, மாடிக்கு விரைந்தோம். மெதுவாக இருட்டத் தொடங்கியது. பறவைகள் மாலை வேளைகளில் கூட்டுக்குள் அடைவதைப் போல ’காச்மூச்’ என்று கத்திக்கொண்டே தங்கள் கூடுகளுக்குத் திரும்பின. (விடிந்து நாலு புழு, பூச்சிகளைப் பிடிக்கலை. அதுக்குள்ளே இருட்டி விட்டதே என்று நினைத்திருக்குமோ!)

கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது சூரியன். பட்டப்பகலில் இதுபோன்ற அனுபவம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு நிமிடத்துக்குள் தொலைந்துபோன சூரியனை யாரோ கண்டுபிடித்தது போல மீண்டும் கண்களுக்குப் புலனாகியது. ஒளிக்கீற்று கொஞ்சம் கொஞ்மாகத் தடித்துக்கொண்டே வந்தது. இறுதியில் முழு சூரியன் வானில் பிரகாசித்தது. அற்புதமான அனுபவம்! வார்த்தைகளில் கொண்டு வருவது கடினம்.

சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சந்திரன் சூரியனை சில நிமிடங்களுக்கு மறைத்து விடுகிறது. இதைத்தான் சூரியகிரகணம் என்கிறோம்.

இந்த அனுபவத்தை இன்னும் ஒரு முறை பெறுவதற்கு இயற்கை நமக்கு வாய்ப்பளித்திருக்கிறது. ஜூலை 22, 2009 அன்று முழு சூரியகிரகணம் நிகழ இருக்கிறது. நேரம் காலை 6.23. இதுவரை 3 நிமிடங்களுக்கு மட்டுமே நிகழ்ந்த இந்த அதிசயம் ஜூலை 22 அன்று 6 1/2 நிமிடங்களுக்கு நீடிக்க இருக்கிறது. சென்னை, மும்பை போன்ற இடங்களில் 80%, கொல்கத்தாவில் 90% கிரகணத்தைப் பார்க்க முடியும்.

சூரியகிரகணத்தின் போது மட்டுமே வைரமோதிரம் எனப்படும் சூரியனின் கரோனாவைக் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, சூரியகிரகணத்தைக் கண்டுகளியுங்கள். இந்த சூரிய கிரகணத்தை விட்டுவிட்டால், அடுத்த சூரியகிரகணத்தை 2087-ம் ஆண்டில்தான் பார்க்க முடியும்!

சூரியகிரகணத்தால் கண்களுக்குப் பாதிப்பா, இல்லையா என்பதை இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே பாதுகாப்பாக சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, சூரிய கிரகணத்தைக் கொண்டாடுவோம்.