tag:blogger.com,1999:blog-44822966581498425792024-03-12T22:49:25.821-07:00தமிழ் சுஜாதாTAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-49546390742858995662012-07-23T00:15:00.000-07:002012-07-23T00:17:43.428-07:00காணாமல் போன ஆறு...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-uFcDpUXvIkU/UAz5qy-sdPI/AAAAAAAAAJM/yaNcrGNzDno/s1600/riv.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="238" src="http://4.bp.blogspot.com/-uFcDpUXvIkU/UAz5qy-sdPI/AAAAAAAAAJM/yaNcrGNzDno/s320/riv.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<b>வை</b>கை ஆற்றங்கரை ஓரம் இருந்த வீட்டில் நாங்கள் இரண்டு ஆண்டுகள் வசித்திருக்கிறோம். பொதுவாக எல்லோர் வீடுகளிலும் விளையாடுவதற்குப் பெரிய இடங்கள் இருக்கும். பகல் நேரங்களில் அங்கு விளையாடுவோம். மாலை நேரங்களில் பெரும்பாலான சிறுவர்கள் வைகை ஆற்றுக்குத்தான் விளையாடச் செல்வார்கள். வருடத்தில் சில நாள்கள் மட்டுமே வைகையில் தண்ணீர் வரும். அதனால் விளையாட மிகச் சிறந்த இடமாக வைகை ஆறு இருந்தது. இரண்டு கோயில்கள், தியேட்டர்களைத் தவிர அந்த ஊரில் பொழுதுபோக வேறு இடம் இல்லாததால், பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரும் ஆற்றுக்குச் செல்வார்கள். கரை ஓரங்களில் கருவேல மரங்களும் குப்பைகளும் இருந்தாலும், இரண்டு நிமிட நடையில் நல்ல மண் இருக்கும் பகுதியை அடைந்துவிடலாம்.<br />
<br />
வெயில் நேரங்களில் ஆற்று மணலில் நடப்பது கொடுமை. ஆனால் மாலை வேளைகளில் மணலுக்குள் கால்கள் புதைந்து, தூக்கித் தூக்கி நடக்க சுவாரசியமாக இருக்கும். விளையாட்டுக்கு இடையில் தண்ணீர் தவித்தால் என்ன செய்வது? அவரவர் விளையாடும் இடங்களுக்கு அருகில் ஓர் ஊற்று தோண்டுவோம். தோண்ட தோண்ட கை ஈரமாகும். மழைக்காலங்களில் அரை அடியிலும் கோடை காலங்களில் ஓர் அடியிலும் தண்ணீர் ஊறி வரும். ஐந்தே நிமிடங்களில் தண்ணீருடன் ஓர் ஊற்று கிடைத்துவிடும். ஆற்றுத் தண்ணீர் சுவையாக இருக்கும் என்பதால் பெண்கள் குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு வந்திருப்பார்கள். அவர்களிடம் கிண்ணம் வாங்கி, எல்லோரும் தாகம் தணிப்போம். மீண்டும் விளையாட்டு.<br />
<br />
ஓர் ஊற்றிலிருந்து சில குடங்கள் தண்ணீரை எடுக்க முடியும். சில சமயங்களில் ஊற்று பாதியிலேயே இடிந்துவிடும். அழுக்கான மேல் மண் கலந்துவிடுவதால், வேறு ஒரு புதிய ஊற்றைத் தோண்டுவார்கள். தண்ணீர் எடுத்து முடிந்ததும் தானாகவோ, மனிதர்களாலோ இந்த ஊற்றுகள் இடிந்து, மூடிவிடும். ஆனால் மூட முடியாத ஒன்றிரண்டு பெரிய ஊற்றுகளும் ஆற்றில் இருக்கும். இந்த ஊற்றுக்குள் தகரத்தில் அரண் அமைத்திருப்பார்கள். இதில் சிறிய கிணற்றில் இருக்கும் அளவுக்குத் தண்ணீர் கிடைக்கும். அந்தத் தண்ணீரை எடுத்துக் குளிப்பார்கள்; துவைப்பார்கள்.<br />
<br />
திருவிழாக் காலங்களில் ஆற்றில்தான் ஊர் மக்கள் இருப்பார்கள். மாலை நேரங்களில் தின்பண்டம், பலூன்கள், பொம்மைகள் விற்பார்கள். ராட்டினத்தில் விளையாடுவார்கள். இரவில் வெட்டவெளியில் படுத்துக்கொண்டு சினிமா பார்ப்பார்கள். நாடகம் பார்ப்பார்கள். பட்டிமன்ற பேச்சுகளைக் கேட்பார்கள். பத்தாவது நாள் சித்ரா பௌர்ணமி அன்று ஆற்றுக்குள் வைத்து, விதவிதமான உணவுகளைக் கொண்டு வந்து சாப்பிடுவார்கள்.<br />
<br />
இப்படி எல்லாம் மக்களோடு மக்களாகக் கலந்துவிட்ட வைகை ஆறு இன்று? மணல் அள்ளப்பட்டு, கட்டாந்தரையாகக் காட்சியளிக்கிறது. நடுநடுவே சில குடிசை வீடுகளும் தென்பட்டன. கருவேலை மரங்கள் வளர்ந்துள்ளன. இரு கரைகளைத் தவிர, ஆற்றுக்குரிய எந்த அம்சமும் அங்கு இல்லை. குழந்தைகளிடம் ஆற்றுக்கு விளையாடப் போவீர்களா என்றால், ‘அங்கெல்லாம் ஏன் போறோம்? என்ன இருக்கு? பொழுது போக டிவி இருக்கே!’ என்றனர்.<br />
<br />
அவர்களை எந்த விதத்திலும் ஈர்க்கக்கூடிய அம்சம் ஆற்றுக்கு இன்று இல்லை.<br />
செய்திகளில் பார்க்கும்போது பல ஆறுகளிலும் இதே நிலைதான்... அரிசோனா பள்ளம் அளவுக்கு மண்வெட்டியால் ஊற்றைத் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. அந்தப் பள்ளத்துக்குள் பள்ளம் என்று இரண்டு, மூன்று பள்ளங்களுக்குப் பிறகு கொஞ்சம் தண்ணீர் கசிகிறது. ஒரு நீண்ட அகப்பையை வைத்து நான்கு, ஐந்து ஸ்பூன் தண்ணீரை எடுத்து குடத்தில் ஊற்றுகிறார்கள். ஒரு குடம் நிறைய ஒருமணி நேரத்துக்கு மேல் ஆகிறது என்றார்கள். வெயில் நேரம் என்பதால் குடை எல்லாம் பிடித்துக்கொண்டு தண்ணீர் எடுக்கும் காட்சி வருத்தத்தைத் தந்தது.<br />
<br />
எந்த விஷயமும் தனக்கு வந்தால்தான் மனிதன் எதிர்ப்பு காட்டுகிறான். இப்போது மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டபிறகு, மணல் அள்ள வருபவர்களை விரட்டியடிக்கிறார்கள். ஆனால் இழந்த இயற்கை செல்வத்தை ஒரு மந்திரம் போட்டு, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியுமா? <br />
<br />
<br />
<br />
<br />
<div>
<br /></div>
</div>TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-78260182963515164972012-06-09T03:46:00.001-07:002012-06-09T03:46:15.879-07:00ஆலா மிஸ்... ஆலா மிஸ்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<b>இ</b>ன்று காலை அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்தில் இந்தப் புத்தகத்தைப் பார்த்தேன். கெட்டி அட்டை, வழவழப்பான தாளில் மிகவும் நேர்த்தியாக இருந்தது. கல்யாண்ஜியின் முன்னுரை, சாலை செல்வத்தின் உரை எல்லாம் தாண்டி யாழினியின் கதைக்கு வந்தேன்...<br />
<br />
<b>ஆ</b>லா மிஸ் ... இந்த மிஸ் படிக்கச் சொல்ல மாட்டாங்க. எழுதச் சொல்ல மாட்டாங்க. வகுப்பு முழுவதும் கதை சொல்வதாகவும் விளையாட்டாகவும்தான் இருக்கும்! பக்கத்தில் ஆறு ஓடும். ஆலா மிஸ்ஸின் கைகளைப் பிடித்து தொங்கியபடியே விளையாடுவோம். மழை வந்தால் எல்லோரும் சேர்ந்து நனைவோம். கடலுக்குக் கூட்டிட்டுப் போவாங்க ஆலா மிஸ். அங்கே எங்களை மீன்களாக மாற்றி கடலில் விடுவாங்க. நாங்கள் கடலில் உள்ள மீன்கள், டால்பின்கள் எல்லாவற்றையும் பார்த்துட்டு வருவோம்! எங்கள் எல்லோருக்கும் பிடித்த ஆலா மிஸ்ஸை உங்களுக்கும் பார்க்க ஆசையா? ஆற்றங்கரையில் இருக்கும் ஆல மரம்தான் எங்கள் ஆலா மிஸ்!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMDJ0LQlplyhC5yShWc_B7QkPA2ug3veSjAiMz_h_A33VP-srrKejgtUU1YDL5NV1R-WXVazuL27NIqyPr5doVefb-CFmM7p4r4jL0xHX8hhsMlY_rw_bFOyvugXGfM-_-FmQdeyPE_eW5/s1600/book1+net.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMDJ0LQlplyhC5yShWc_B7QkPA2ug3veSjAiMz_h_A33VP-srrKejgtUU1YDL5NV1R-WXVazuL27NIqyPr5doVefb-CFmM7p4r4jL0xHX8hhsMlY_rw_bFOyvugXGfM-_-FmQdeyPE_eW5/s320/book1+net.jpg" width="308" /></a></div>
<br />
<br />
<b>தீ</b>பாவளிக்கு புதுத் துணிகள், பட்சணங்களை எடுத்துட்டு யாழினியும் மற்ற குழந்தைகளும் காட்டுக்குப் போகிறார்கள். அங்கே குரங்கு, மான், புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு உடைகளைக் கொடுக்கிறார்கள். எல்லோரும் விளையாடுகிறார்கள். சாப்பிடுகிறார்கள். இரவு வந்தவுடன் கிளம்புகிறார்கள்.<br />
<br />
“காட்டு மிருகங்கள் பாய் சொல்லவே இல்லப்பா! மிருகங்கள் இப்படிப் பண்ணினா எப்படி? அழுவாச்சி வராதா? கொஞ்சம் சிரிக்கச் சொல்லி எல்லோரும் போட்டோ எடுத்துட்டோம். அப்போ ஒரு குட்டி குரங்கு என் தலை மேல உக்காந்து வெவ்வ்வ்வ்வேன்னு போஸ் கொடுத்துச்சு.’<br />
<br />
<b>அ</b>ம்மா, அப்பா எல்லாம் வேலைக்குப் போய்விடுகிறார்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பூனை, நாய், பல்லி, பூச்சிகள்தான் நண்பர்கள். அவர்களுடன் தான் விளையாட்டு. ஒருநாள் குழந்தைகளைச் சந்தோஷப்படுத்த பூனை, நாய், பூச்சிகள் எல்லாம் டிராகன்களாக மாறிவிடுகின்றன. டிராகனின் தலையில் ஏறி வால் வரைக்கும் வழுக்கிக்கிட்டே வருகிறார்கள்! பெரியவர்கள் யாராவது வந்துவிட்டால் பழையபடி நாய், பூச்சிகளாக மாறிவிடுகின்றன. வீட்டில் போர் அடித்த குழந்தைகளும் டிராகன்களும் ஒருநாள் பார்க்குக்குப் போகிறார்கள். அங்கே பெரியவர்கள் டிராகன்களைச் சுடுவதற்கு வருகிறார்கள். குழந்தைகள் பெரியவர்களுக்கு அவற்றின் அருமையை எடுத்துச் சொல்லி, காப்பாற்றுகிறார்கள். இப்போது எல்லோரும் சந்தோஷமாக டிராகன்களுடன் விளையாடுகிறார்கள்!<br />
<br />
<b>பெ</b>ற்றோர் இருவரும் வேலை செய்யும் வீடுகளில் குழந்தைகளை கம்ப்யூட்டரிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களின் தலை பெரிதாகிக்கொண்டே போகிறது. அதைக் கூட பெற்றோர் கவனிக்கவில்லை. சில குழந்தைகள் தலை வெடித்து இறக்கிறார்கள். ஏன்? கம்ப்யூட்டர் அறிவு எல்லாம் குழந்தைகளுக்கு வந்துவிட்டது! அறிவாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கு சந்தோஷமில்லை. விளையாட்டு இல்லை. பூக்களின் வாசனை உணரவில்லை. காடு, மலைகளின் அழகை ரசிக்கவில்லை. இதனால் வருத்தத்தில் குழந்தைகள் தலை வெடித்து இறக்கிறார்கள்.<br />
<br />
<b>கி</b>றிஸ்துமஸ் தாத்தா குல்லாவில் இருந்து ஒரு பாம்பு வருகிறது. உண்மையில் அது பாம்பு இல்லை. பாம்பு வேஷம் போட்ட ஓர் ஆள். அதை நிஜப் பாம்பு என்று நினைத்துப் பெரியவர்கள் எல்லாம் அடிக்கிறார்கள். பாம்பு இறந்துவிட்டதாக நினைத்து சென்றுவிடுகிறார்கள். சிறிது நேரத்தில் நிஜப் பாம்பு வந்து வேஷம் போட்டவரைக் கடித்துவிடுகிறது. அவரை டாக்டர் காப்பாற்றி விடுகிறார். நிஜப் பாம்பை அடிக்கப் பெரியவர்கள் முயற்சி செய்கிறார்கள். குழந்தைகள் எல்லோரும் அதைத் தடுத்து, விரட்டி விட்டால் ஓடிடும் என்று யோசனை தருகிறார்கள். உடனே குட்டிப் பாம்பும் அம்மா பாம்பும் சந்தோஷமாகப் போகின்றன.<br />
<br />
இப்படி யாழினி நிறைய கதைகளை எழுதியிருக்கிறாள். அவளுடைய கதைகளில் குழந்தைகள் நியாயமாக நடந்துகொள்கிறார்கள். மரம், விலங்கு, பறவைகள் மீது அன்பு செலுத்துகிறார்கள். இயற்கையின் அருமையை உணர்ந்திருக்கிறார்கள். சுற்றுச்சூழலைப் புரிந்துவைத்திருக்கிறார்கள். சக குழந்தைகளுடன் சந்தோஷமாக விளையாடுகிறார்கள். ஆர்வமாகக் கதை கேட்கிறார்கள்.<br />
<br />
மாறாக, பெரியவர்கள் மீது யாழினி நிறைய குற்றங்களைச் சுமத்தியிருக்கிறாள். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் குழந்தைகளிடம் செலவு செய்யும் நேரம் குறைவு, வீட்டிலும் வெளியிலும் பணிச் சுமை காரணமாக குழந்தைகளிடம் காட்டும் எரிச்சல், குழந்தைகளைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளாதது, குழந்தைகளை டிவி, கம்ப்யூட்டர் முன்பு சரணாகதி அடையச் செய்வது, உயிரினங்களின் அருமையைப் புரிந்துகொள்ளாமல் கொல்ல வருவது, காடுகளை அழிப்பது, முக்கியமாக குழந்தைகளுக்குக் கதை சொல்லாமல் இருப்பது...<br />
<br />
யாழினி சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. இதுவரை குழந்தைகள் புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் ஒரு குழந்தை இவற்றை எல்லாம் விரும்பும் என்ற எண்ணத்தில் பெரியவர்களால் உருவாக்கிக் கொடுக்கப்பட்டவைதான். உண்மையிலேயே அவை எல்லாம் குழந்தைகளுக்கானவைதானா? குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றனவா? என்ற எண்ணம் அடிக்கடி வந்துபோகும். அந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கிறாள் யாழினி.<br />
<br />
யாழினியின் கற்பனை வளம் பிரமிக்க வைக்கிறது. ஓர் ஆல மரத்தை டீச்சராக மாற்றி அவள் விவரிக்கும் கதை அட்டகாசம்! குழந்தைகளின் தலை பெரிதாகிக்கொண்டே இருக்கின்றன என்ற கதையில் கற்பனையும் கலந்து கருத்தும் சொல்லியிருக்கிறாள். இப்படித்தான் கதை ஆரம்பிக்க வேண்டும், இப்படித்தான் முடிக்க வேண்டும் என்ற சட்டதிட்டமெல்லாம் இந்தக் கதைகளுக்கு இல்லை. அதனால்தான் இந்தக் கதைகள் கூடுதல் சுவாரசியத்தைத் தருகின்றனவோ! பெரும்பாலான கதைகளில் யாழினியும் இருக்கிறாள். ஒரு கதையில் யாழினி என்று குறிப்பிட்டு, அது நான் இல்லை, வேறொரு யாழினி என்று விளக்கம் சொல்லும்போது குழந்தைத்தனம் ரசிக்க வைக்கிறது.<br />
<br />
பெரியவர்களின் மொழியில், பேச்சு வழக்கில் இந்தக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கதை, நடை, கருத்து என்று ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்துவிடுகிறது! முக்கியமாக நாம் கடந்து வந்த பால்ய காலத்தை மீண்டும் கொண்டுவந்துவிடுகிறது. <br />
<br />
நான் பள்ளி இறுதி படிக்கும் வரை மா, தென்னை, பலா, முருங்கை, மாதுளை மரங்கள்தான் என்னுடைய மிகச் சிறந்த நண்பர்கள். என் தங்கைகளுடன் சண்டை போட்டாலோ, மதிப்பெண்கள் குறைந்தாலோ, ஏதாவது மனக் கஷ்டம் வந்தாலோ நான் இந்த மரங்களிடம்தான் வாய் விட்டுப் பேசுவேன். கஷ்டமான நேரங்களில் மரங்கள் இலைகள் மூலம் அரவணைத்திருக்கின்றன! பரீட்சைக்குச் செல்லும்போது ஆசிர்வதித்து அனுப்பியிருக்கின்றன! சந்தோஷமான தருணங்களை மேலும் அழகாக மாற்றியிருக்கின்றன!<br />
<br />
போட்டி நிறைந்த இந்த உலகத்தில் படிப்பு, நடனம், பாட்டு, ஓவியம் என்று சகலத்திலும் தங்கள் குழந்தைகள் முதலாவதாக வரவேண்டும், அவர்களின் பெற்றோர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் இன்றைய பெற்றோரிடமிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்கள் யாழினியின் பெற்றோர். யாழினிக்குக் கதை சொல்லி, அவள் சொல்வதைக் கேட்டு, எழுதி, திருத்தி, புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது யாழினியின் இரண்டாவது புத்தகம். முதல் புத்தகம் 4 வயதில் வெளிவந்திருக்கிறது. கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களுடன் தரமான தயாரிப்பாக இருக்கிறது புத்தகம்.<br />
<br />
யாழினியைப் பார்க்கவும் அவளுடன் பேசவும் கதை கேட்கவும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன்!<br />
<br />
காடு பெருசா அழகா இருந்துச்சு ரூ.30/-<br />
யாழினி<br />
இயல்வகை பதிப்பகம்,<br />
எண்: 25, மாந்தோப்பு,<br />
ப.உ.ச.நகர்,<br />
போளூர் சாலை,<br />
திருவண்ணாமலை - 1 <br />
போன்: 9840932755<br />
</div>TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-18164667080048215612012-05-09T00:08:00.000-07:002012-05-09T01:19:40.181-07:00அறிவியல் குப்தா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-xZaBX0w2FeY/T6oQXyDWagI/AAAAAAAAAI0/8djQx4RLcWg/s1600/arvindh.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-xZaBX0w2FeY/T6oQXyDWagI/AAAAAAAAAI0/8djQx4RLcWg/s320/arvindh.jpg" width="320" /></a></div>
<br />
<br />
“தீக்குச்சி விளையாட்டு’ என்ற புத்தகத்தின் மூலம்தான் அரவிந்த் குப்தா அறிமுகமானார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் எளிய அறிவியல் பரிசோதனைகள், தீக்குச்சி விளையாட்டுகள் என்று பல சுவாரசியமான அரவிந்த் குப்தாவின் புத்தகங்கள் வெளிவந்தன. வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு, உபயோகமாக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த காலகட்டம். பூக்கள், ஓவியங்கள், பொம்மைகள் என்று செய்துகொண்டிருந்தபோது, ஆர்வத்தை அறிவியல் பக்கம் திருப்பி, நேரத்தையும் கற்பனையையும் உபயோகமாகச் செலவழிக்க வைத்தவர் அரவிந்த் குப்தா.<br />
<br />
தீக்குச்சிகளையும் ரப்பர் டியூபையும் வைத்து நூற்றுக்கணக்கான வடிவங்களைக் கொண்டுவருவது ரொம்ப சுவாரசியமானது. பிய்ந்து போன செருப்பு, உபயோகமில்லாத பேட்டரி, குச்சி, ரப்பர் பேண்ட், பலூன், பேனா.. இப்படி வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து ரயில் எஞ்சின், மோட்டார் படகு, இயற்பியல்-வேதியியல் பரிசோதனைகள் என்று ஏராளமான விஷயங்களைக் கற்றதுடன், நாங்களே செய்தும் பார்த்தோம். துளிர் இல்லங்கள், பள்ளிகளில் இவற்றைச் செயல்படுத்திக் காட்டி, அறிவியல் இயக்கத்தில் ஏராளமான குழந்தைகளையும் ஆசிரியர்களையும் இணைய வைத்தோம்.<br />
<br />
அரவிந்த் குப்தா பெயர்தான் தெரியுமே தவிர, அவரை நேரில் பார்த்ததில்லை. ஒருமுறை டெல்லியில் அறிவியல் இயக்க பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது, அவர் ரிசோர்ஸ் பர்சனாக வந்திருந்தார். கதர் ஜிப்பாவில் மிக மிக எளிய மனிதராகக் காட்சியளித்தார். அவரது விரல்கள் எப்பொழுதும் எதையாவது செய்துகொண்டே இருந்தன. அவரைச் சுற்றி மாணவர்கள், ஆசிரியர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருந்தது. எதைப் பற்றிக் கேட்டாலும் கொஞ்சம் கூட களைப்பின்றி, உற்சாகமாக, அழகாக விளக்குவார். செய்து காட்டுவார். நம்மையும் செய்யச் சொல்வார். எந்தப் பொருளும் அவர் கை பட்டவுடன் இரண்டு நிமிடங்களில் வேறு ஒன்றாகப் பரிணமிப்பது பிரமிப்பாக இருக்கும்!<br />
<br />
கான்பூர் ஐஐடியில் பொறியியல் படித்த அரவிந்த் குப்தா, சமூகத்துக்கு வேலை செய்வதில் மிகவும் விருப்பம் உள்ளவர். அறிவியலை மக்களிடம் பரப்புவதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்தியா முழுவதும் 3000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியலைப் பரப்பி வருகிறார். அறிவியல், கணிதம் போன்றவற்றில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய புத்தகங்கள் தமிழ் உள்பட 13 இந்திய மொழிகளில் வெளிவந்துள்ளன. மாற்றுக் கல்வியைக் கொண்டு வருவதிலும் அதிக அக்கறை செலுத்தி, வேலை செய்து வருகிறார் அரவிந்த் குப்தா.<br />
<br />
அவருடைய புத்தகங்கள், பரிசோதனைகள் அனைத்தும் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் அவருடைய இணையதளத்தில் கிடைக்கின்றன. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பரிசோதனையும் எளிமையாகவும் நாமே செய்துபார்க்கும்படியும் இருக்கிறது. பெரியவர்களைக்கூட கட்டிப்போட்டு வைத்திருக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்ட அந்தப் பரிசோதனைகளை குழந்தைகள் நிச்சயம் கொண்டாடுவார்கள். இந்த இணையதளத்தில் அரவிந்த் குப்தாவின் புத்தகமாகட்டும், பரிசோதனைகளாகட்டும், படங்களாகட்டும் எதற்கும் காப்பி ரைட் கிடையாது. மக்களுக்காகத் தன் படைப்புகளைஅர்பணித்திருக்கிறார் அரவிந்த் குப்தா. யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்! இங்கிருந்து ஒவ்வொரு நாளும் 6000 புத்தகங்கள் டவுன்லோட் செய்யப்படுகின்றன.<br />
<br />
பொருளாதாரத்தில் பின்தங்கிய, படிக்காத பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் அரவிந்த் குப்தா. “அவர்கள் படிக்கவில்லை என்றாலும் எங்களை எல்லாம் நன்றாகப் படிக்க வைத்தனர். ஒருபோதும் நாங்கள் இப்படி வரவேண்டும், அப்படி வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை. எங்களை எங்கள் விருப்பப்படி வளர்த்தார்கள். அறிவை வளர்த்துக்கொள்வதற்குத்தான் கல்வி. என்னுடைய இந்தப் பணியில் மிகவும் மகிழ்ச்சியாகச் செயல்படுகிறேன்’ என்கிறார்.<br />
<br />
யுனெஸ்கோ, யூனிசெஃப், இண்டர்நேஷனல் டாய் ரிசர்ச் அசோசியேஷன், பாஸ்டன் சைன்ஸ் செண்டர், வால்ட் டிஸ்னி ஆய்வுக்கூடம் போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டவர், இந்திய அளவில் அறிவியலை மக்களிடம் பரப்பியதற்காகப் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.<br />
பொறியாளர், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என்று பல்வேறு விதங்களில் செயல்பட்டு வரும் அரவிந்த் குப்தா, அன்பிலும் அமைதியிலும் அதிக நம்பிக்கைக் கொண்டவர்!<br />
<br />
<a href="http://www.arvindguptatoys.com/">http://www.arvindguptatoys.com/</a><br />
<br />
த்ரீ இடியட்ஸ் - நண்பன் ஆமீர் கான் / விஜய் கதாபாத்திரங்கள் அரவிந்த் குப்தாவைத் தழுவி உருவாக்கப்பட்டவை என்று தோன்றுகிறது!<br />
<br />
<br />
<br />
<div>
<br /></div>
</div>TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-18394754076034876732012-02-25T00:28:00.002-08:002012-02-26T21:11:11.910-08:00இதுதான் காதல் என்பதா!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
காதல். இந்த வார்த்தை எப்போது எனக்குத் தெரியவந்தது என்று நினைவில்லை. அப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லை. சினிமாவுக்கு எல்லாம் அடிக்கடி அழைத்துப் போக மாட்டார்கள். ஒன்றிரண்டு திரைப்படங்களில் காதல் என்ற வார்த்தை கேள்விப்பட்டிருந்தாலும் அது கவனத்தைக் கவரவில்லை. திடீரென்று ஒருநாள் அம்மா, ஆச்சி, பக்கத்துவீட்டுக்காரர்கள் எல்லோரும் கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.<br />
<br />
“மேல் சாதிக்காரி அந்தக் கீழ் சாதிக்காரனை இழுத்துட்டு ஓடிட்டாளாம். எங்கே போனாங்கன்னு தெரியலை. இவங்க ரெண்டு சாதிக்காரங்களும் இங்கே அடிச்சிக்கிறாங்க. காலம் கெட்டுப் போச்சு... “ <br />
<br />
நான் அவர்களுக்கு நடுவில் சென்று, “யாரையும் கடத்திட்டுப் போயிட்டாங்களா?’ என்று கேட்டேன். என்னை எல்லோரும் முறைத்துப் பார்த்தார்கள்.<br />
<br />
“கடத்திட்டுப் போகலை. காதலிச்சவங்க தனியா போய் கல்யாணம் பண்ணிட்டாங்க’ என்றார் அம்மா.<br />
<br />
“எல்லாரும்தான் கல்யாணம் பண்ணறாங்க. இதுல என்ன தப்பு?’<br />
<br />
“ம்.. முதல் தப்பு சாதி விட்டு சாதி மாறி காதலிச்சது. ரெண்டாவது தப்பு யாருக்கும் தெரியாமல் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டது...’ என்றார் பக்கத்து வீட்டு அத்தை.<br />
<br />
“ஆமாம், அவ பெரிய மனுஷி, கேள்வி கேட்கறா. நீ விளக்கிச் சொல்லு’ என்றார் ஆச்சி.<br />
<br />
காதல் என்றால் தப்பான விஷயம் என்றும் சாதி விட்டு சாதி மாறி காதலிப்பது<br />
மகா தவறு என்றும் நினைத்துக்கொண்டேன்.<br />
<br />
**<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-Td_JCNDN8r8/T0ibM0YCPBI/AAAAAAAAAIs/i7870-CKmag/s1600/bird.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-Td_JCNDN8r8/T0ibM0YCPBI/AAAAAAAAAIs/i7870-CKmag/s320/bird.jpg" width="250" /></a></div><br />
<br />
சில காலம் கழித்து எங்கள் தெருவில் ஒருவர் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்தார். அந்தப் பெண் வீட்டில் பயங்கர எதிர்ப்பு. இவர் கையில் “ஜெனிபர்’ என்று சூடு வைத்துக்கொண்டார். சில நாள்களில் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.<br />
<br />
காதல் என்றால் உயிர் போகும் அளவுக்கு மிகுந்த துன்பமான செயல் என்றும் சாதி மட்டுமின்றி மதமும் தடை என்றும் நினைத்துக்கொண்டேன்.<br />
<br />
**<br />
<br />
ஏக் துஜே கேலியே, அலைகள் ஓய்வதில்லை போன்ற காதல் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.<br />
<br />
“கார்த்திக்கும் ராதாவும் சேருவாங்களா, மாட்டாங்களான்னு எனக்கு ரொம்பக் கவலையாக இருந்துச்சு’ என்று பக்கத்து வீட்டு அத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.<br />
<br />
“காதல்ன்னா தப்புன்னு சொன்னீங்க. இப்ப சேரணும்னு சொல்றீங்களே?’ என்று கேட்டேன்.<br />
<br />
“படத்துல காதலிச்சவங்க சேரணும். அப்பத்தானே நல்லா இருக்கும்.’<br />
<br />
“படத்துல சரின்னா நிஜத்துலயும் காதலிக்கறவங்க சேரலாமே?’<br />
<br />
“கதையில் காக்கா பாடுது, நரி தந்திரம் பண்ணுது. ஆனா அதெல்லாம் உண்மையா? அந்த மாதிரி கதையில் என்ன வந்தாலும் ரசிச்சிட்டு விட்டுடணும். வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடாது.’<br />
<br />
நான் அம்மாவைப் பார்த்தேன்.<br />
<br />
“காதலிப்பது தவறு இல்லை. சரியான வயதில், சரியான ஆளைக் காதலிக்கலாம். இல்லைன்னா வாழ்க்கையே தொலைஞ்சு போயிரும்’ என்றார் அம்மா.<br />
<br />
‘ஏங்க, குழந்தைகளுக்கு எதிரில் காதலை சப்போர்ட் பண்ணாதீங்க. அப்பறம் அதுங்க காதலிக்கிறேன்னு வந்து நின்னா நமக்குத்தான் கஷ்டம்’ என்றார் பக்கத்து வீட்டு அத்தை.<br />
<br />
கதையில் காதலிக்கலாம். நிஜத்தில் காதலிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.<br />
<br />
**<br />
<br />
நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். அது ஆண்களும் பெண்களும் படிக்கும் பள்ளி. ஒரு பக்கம் ஆண்கள், இன்னொரு பக்கம் பெண்கள். கொஞ்ச நாள்களில் எங்கள் வகுப்பில் இருந்த ரேவதியும் சசிகுமாரும் காதலிப்பதாக, வகுப்புத் தோழிகள் பேசிக்கொண்டார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் இருவரும் பேசி நான் பார்த்ததில்லை. எப்படிச் சொல்கிறார்கள்? சசிகுமார் லீடராக இருந்தான். வகுப்பில் பேசியவர்களின் பட்டியலை போர்டில் எழுதும்போது ரேவதியின் பெயரை மட்டும் எழுத மாட்டானாம். இருவரும் அடிக்கடி பார்த்து, சிரித்துக்கொள்வார்களாம்!<br />
<br />
கரிசனமும் சிரிப்பும்தான் காதலா!<br />
<br />
**<br />
<br />
எங்கள் வீட்டில் பெரிய நீல வண்ண ஆல்பம் இருந்தது. அந்த ஆல்பத்தின் முதல் பக்கத்தில் ஒல்லியான உருவத்தில், அட்டகாசமாகச் சிரித்துகொண்டிருப்பார் ஒரு பெண். அந்தப் பெண் எங்கள் பெரியம்மா என்று அம்மா சொல்லியிருந்தார். வீட்டுக்கு யார் வந்து ஆல்பம் பார்த்தாலும் இவர் எங்கள் பெரியம்மா என்று சொல்வோம்.<br />
<br />
அப்படி ஒருமுறை பார்த்தபோது, “அம்மா, பெரியம்மாவை எந்த விசேஷத்திலும் பார்த்ததில்லையே, எங்கே இருக்காங்க? நமக்கு எப்படி உறவு?’ என்று கேட்டேன்.<br />
<br />
சிரித்த அம்மா, “இந்தப் பெரியம்மா உங்க அப்பாவோட கேர்ள் ஃபிரெண்ட்’ என்றார்.<br />
<br />
வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அப்பா திருமணம் செய்யத் தயாராக இருந்திருக்கிறார். ஆனால் பெரியம்மா வீட்டில் பொருளாதாரப் பிரச்னை. அவர் சம்பாதித்து பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சூழல். சாதி, பொருளாதாரம், அவர் அப்பாவின் தற்கொலை மிரட்டல் போன்ற காரணங்களால் காதல் கைகூடவில்லை என்று அம்மா சொன்னார். எனக்கு வருத்தமாகிவிட்டது. அதே நேரத்தில் இந்த விஷயத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொண்ட என் அம்மாவின் இயல்பு என்னை ஆச்சரியப்படுத்தியது.<br />
<br />
எங்கள் பெரியப்பா அந்தக் காலத்திலேயே 'பேசாமலே' காதலித்தவர். அவர் காதலும் கைகூடவில்லை. (ஆனால் அந்தப் பெரியப்பாவைக் கல்யாணம் செய்த பெரியம்மாவின் காதல் கைகூடிவிட்டது! அம்மியில் மிளகாய் அரைக்கும்போது பெரியப்பா பெயரை எழுதிக்கொண்டே இருப்பாராம் பெரியம்மா!) என் சித்தப்பாவும் அத்தையும் சொந்தத்திலேயே காதலித்தனர். அவர்கள் காதலும் கைகூடவில்லை.<br />
<br />
காதலுக்கு சாதி, மதம், பொருளாதாரம் மட்டுமின்றி, இன்னும் கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்களும் தடையாக இருப்பதை உணர்ந்துகொண்டேன்.<br />
<br />
**<br />
<br />
அப்பாவின் நண்பர் கண்ணப்பன் மாமா. அவர் மனைவி லிஜியா அத்தை. ஒன்பதாம் வகுப்பில் இருந்து இருவரும் காதலித்து, படித்து, வேலைக்குப் போய், வீட்டிலுள்ளவர்களின் எதிர்ப்புகளை மீறி, சாதி, மதம் கடந்து திருமணம் செய்திருந்தனர். என்னை மிகவும் கவர்ந்த காதல் தம்பதி கண்ணப்பன் மாமாவும் லிஜியா அத்தையும்தான். மற்ற தம்பதியரை விட இவர்கள் வித்தியாசமாகத் தெரிந்தார்கள். அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், ஒருவரை ஒருவர் மதித்தல் போன்ற பல விஷயங்களை அவர்களிடம் நான் பார்த்தேன். <br />
<br />
இருவர் மனங்களும் உறுதியாக இருந்தால் நான் இதுவரை நினைத்திருந்த எந்த விஷயமும் காதலுக்குத் தடையாக இருக்க முடியாது என்று புரிந்துகொண்டேன்.<br />
<br />
**<br />
<br />
ஒன்பதாம் வகுப்பில் ஹாஸ்டல் தோழி ஒருத்தி, ஊரிலிருந்து வந்ததில் இருந்து மிகவும் உற்சாகமாக இருந்தாள். பலமுறை வற்புறுத்திக் கேட்டபோது, அவள் ஊரில் ஒருவன் காதலிப்பதாகச் சொன்னானாம். இதைக் கேட்ட இன்னொரு தோழி, “அடப்பாவி! காலை பஸ்ஸுக்கு காத்திருந்தபோது உன்னைக் காதலிக்கிறதா சொன்னவன், மூணு மணி பஸ்ஸுக்கு நான் காத்திருந்தபோது, என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னான். செருப்பு பிஞ்சுரும்னு திட்டினேன்’ என்றாள். அவள் உடைந்துபோனாள்.<br />
<br />
பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் பிரின்ஸி. மிக மிக அமைதியானவர். அன்பானவர். நன்றாகப் படிக்கக்கூடியவர். அவருடைய தங்கை மூலம் பிரின்ஸியின் காதல் தெரிந்தது. அவர்கள் ஊரைச் சேர்ந்த இந்து பையனைக் காதலிப்பதால் வீட்டில் பிரச்னை. அதனால் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார்கள். பிரின்ஸிக்கு வரும் கடிதங்கள் கூட வார்டன் படித்த பிறகே கொடுக்கச் சொல்லியிருந்தனர். பிரின்ஸி மிகவும் பொறுமை காத்தார். இஞ்சினியரிங் படிக்கும் அந்தப் பையனுக்குக் கடிதம் எழுதுவதில்லை. போன் செய்வதில்லை. ஒரே ஊராக இருந்தாலும் பார்க்க முயற்சி செய்வதில்லை. யாரிடமும் அவரைப் பற்றிப் பேசுவதும் இல்லை. அவர் நோக்கமெல்லாம் டீச்சர் டிரெயினிங் முடிக்க வேண்டும். அதற்குள் அந்தப் பையன் படித்து, வேலைக்குச் சென்று விடுவார். பிறகு யார் எதிர்த்தாலும் திருமணம் செய்துகொள்ளலாம்! இவ்வளவு பொறுமையாக, அழுத்தமாக, தெளிவான சிந்தனையுடன் இருந்த பிரின்ஸியும் பார்க்காத அந்தப் பையனும் ஆச்சரியமான காதலர்கள்!<br />
<br />
**<br />
<br />
கல்லூரியில் படிக்கும்போது மெகருன்னிசா என்ற பேராசிரியர் இருந்தார். கல்லூரியில் அன்றைய ஐஸ்வர்யா ராய் அவர்தான். அவர் வகுப்பு எடுக்கும் மாணவியரிடம் அவரைப் பற்றி விசாரித்தபோது, “பார்க்கத்தான் அழகு. சரியா படிக்கலைன்னா அவங்க திட்டுறதை வார்த்தையால சொல்ல முடியாது. எவன் ஞாபகத்துல இருக்க, எவனையாவது இழுத்துட்டு ஓட வேண்டியதுதானே, இங்க வந்து என் உயிரை எடுக்கறே’ என்ற ரீதியில் திட்டுவாராம். ஐஸ்வர்யாவாகத் தெரிந்தவர் டெரராகிப் போனார்! பிறகு ஒருநாள் அவர் எங்கள் கல்லூரியில் வேலை செய்யும் இன்னொரு பேராசிரியரைக் காதல் திருமணம் செய்தவர் என்று தெரியவந்தபோது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது! <br />
<br />
<br />
** <br />
<br />
ஆண்கள் அப்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகளை காதலிப்பது போல சில பெண்களும் நடிகர்களைக் காதலித்தனர். கமல், மோகன், முரளி, பிரசாந்த், அரவிந்தசாமி போன்றவர்கள் இந்த லிஸ்டில் இருந்தனர். சில பெண்கள் நடிகர்களுக்கு, ‘உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். கண் விழிக்காதீர்கள். நன்றாகச் சாப்பிடுங்கள்’ என்றெல்லாம் கடிதம் எழுதினார்கள்!. அப்படி எழுதிய ஒரு பெண்ணுக்கு, பிரசாந்த்திடம் இருந்து, அவர் கையெழுத்து போட்ட போட்டோ ஒன்று வந்தது. அவள் வானில் சிறகடித்துப் பறந்தாள்! (படிப்பு முடித்தவுடன் முதல் திருமணம் அவளுடையதுதான்!)<br />
<br />
** <br />
<br />
யாரும் எதிர்பார்க்காத சூழலில் மிகச் சிறிய வயதில் அத்தைப் பெண்கள் இருவர் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் இருவரின் கணவர்களும் மிக மோசமாக நடந்துகொண்டார்கள். குடி, அடி, பணக் கஷ்டம்... எல்லாம் பட்டு ஒரு கட்டத்தில் கணவர்கள் இறந்து போனார்கள். அதில் ஒருத்தி சொன்னாள்: ‘அவர் மோசம்னு எனக்கு முன்னாலேயே தெரியும். அவரைத் திருத்தறேன்னு என் தோழிகளிடம் சவால் விட்டேன். ஆனால் தோத்து போகப் போறேன்னு அப்ப தெரியலை’ என்றாள். துயரமான காதல்கள்.<br />
<br />
**<br />
<br />
காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமோ, எதுவாக இருந்தாலும் காதல் இருக்க வேண்டும் என்று பிறகு புரிந்தது. எங்கள் குடும்பத்துக்கு காதல் ராசி (!) இல்லை என்ற அவப் பெயர் போகும் விதத்தில் பெரியப்பா வீட்டிலும் எங்கள் வீட்டிலும் சித்தப்பா வீட்டிலும் காதல்கள் பூத்தன. திருமணங்களில் முடிந்தன.<br />
<br />
என் தம்பி தன் அம்மாவிடம் அனுமதி பெற்ற பிறகே, தன் காதலை வெளிப்படுத்தினான். அப்போது ஆமோதித்த சித்தி, அவன் திருமணம் என்றதும் பின்வாங்கிய காரணம் இன்றுவரை புரியவில்லை! முப்பது வயதுக்குப் பிறகே, செட்டில் ஆனவுடன் திருமணம் என்றார் சித்தி. வாழ்க்கையில் செட்டிலாகும்போது எல்லாம் இருக்கும், ஆனால் அந்தப் பெண் இருக்கமாட்டாள். அவளுக்குத் திருமணம் ஏற்பாடு நடக்கிறது என்றான் தம்பி. இறுதியில் திருமணம் நடந்தது. சித்தப்பா இல்லாததால் சின்ன வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவன், திருமண வாழ்க்கையை காதலால் நிரப்பி வருவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது! <br />
<div><br />
</div></div>TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-77640625345778519322011-10-21T01:57:00.000-07:002011-10-21T01:57:14.115-07:00காணாமல் போகும் கதைகள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-MGMt1DFcMGU/TqEzSKcAqoI/AAAAAAAAAIk/RAOPn4cWvk4/s1600/children-reading.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-MGMt1DFcMGU/TqEzSKcAqoI/AAAAAAAAAIk/RAOPn4cWvk4/s1600/children-reading.gif" /></a></div><br />
ஸ்நேகா நான்கு வயதாக இருந்தபோது கதை கேட்பது, சொல்வது, படிப்பது என்றால் மிகவும் விருப்பம். ஒரு கதை சொன்னால், அதைத் திருப்பிச் சொல்லும்போது நாம் சொன்ன கதையிலிருந்து கொஞ்சம் மாற்றி, புதுக் கதையாக வேறொன்றைச் சொல்வாள். <br />
“ஏன் ஸ்நேகா, நான் இப்படிச் சொல்லலையே?’ என்று கேட்டால், ‘உங்களுக்குத் தெரிந்த கதையையே நான் சொன்னால் போரடிக்குமே. அதான் மாத்திச் சொன்னேன்’ என்று சிரிப்பாள். <br />
<br />
ஆனால் அந்தக் கதை சரியாக இருக்கும்... அந்தக் கதையை வேறு யாராவது சொல்லச் சொன்னால், அது இன்னொரு புதிய கதையாக மலரும்... இப்படி ஸ்நேகாவின் கற்பனை விரிய விரிய கதைகளுக்குப் பஞ்சமே இருக்காது. <br />
<br />
கதை கேட்பதிலும் சொல்வதிலும் பட்டுவுக்கும் பிரமாதமான திறமை இருக்கிறது. நான்கு வயதிலேயே ஸ்படிகம் போல அத்தனை தெளிவான உச்சரிப்போடு கதை சொல்வதைக் கேட்டால், தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஹனுமன் கதையாக இருக்கட்டும் கிருஷ்ணன் கதையாக இருக்கட்டும் நல்ல பாவத்துடன் சொல்வாள். கதை மட்டும் அல்லாமல், காந்தி என்ற ஒரு மனிதரின் வாழ்க்கையைக் கூட அத்தனை அழகாகக் கதை போலச் சொன்னதில் அசந்து போயிருக்கிறோம். சென்ற ஆண்டு அவள் “நோவா’ கதை சொல்லப் போகிறேன் என்றாள். அந்தக் கதைக்கு அதிக நேரம் எடுக்கும் என்று அவள் அப்பா எச்சரித்தார். “சீக்கிரம் முடிச்சுடறேன்’ என்று பத்து நிமிடங்களில் சொல்லி முடித்தாள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் 20 நிமிடங்கள் சொல்ல வேண்டிய கதையை அழகாக எடிட் செய்து, பத்து நிமிடங்களில் பட்டு சொல்லியிருந்தாள். எடிட் செய்த போர்ஷனைக் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு குழந்தையால் சொல்ல முடியும் என்பது இன்று வரை வியப்பாகவே இருக்கிறது. (பாராவின் மகள் என்பதால் எடிட்டிங்கும் தானாகவே வருகிறதோ! பாரா கதை சொல்லும்போது அவரே ஒரு குழந்தையாக மாறி, குரலை மாற்றி, சத்தம் எழுப்பி அழகாகச் சொல்வார். பூமி உருண்டையை வைத்துக்கொண்டு, பட்டுவுக்கு கதையோடு நாடுகளை அவர் அறிமுகம் செய்யும்போது, பட்டு அத்தனை ஆர்வமாகக் கேட்பாள்! பல கதைகளில் பட்டுவும் ஒரு கேரக்டராக இருப்பாள்!)<br />
<br />
சில சிறுவர்களிடம் கதை சொல்லச் சொன்னால், “டமால்... டுமீல்... பட் படார்... பவர்ரேஞ்சர்... ஊ... ஆ.... ஸ்பீடா போனான்... பத்துப் பேரைச் சுட்டான்.. ஜம்முனு மேலயிருந்து குதிச்சான்...’ என்று ஆக்ஷனுடன் மிரட்டி விடுகிறார்கள். <br />
...<br />
கோகுலத்துக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு குழந்தைகளிடமிருந்து ஏராளமான கதைகள் வரும். ஏற்கெனவே படித்த கதைகள், பெரியவர்கள் சொல்ல எழுதிய கதைகள் எல்லாம் போக, கதையாக எழுதத் தெரியாவிட்டாலும் நல்ல கதைக் கரு கிடைக்கும். ரீ ரைட் செய்து பயன்படுத்திவிடலாம். கதை, படக்கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் இன்று உள்ள குழந்தைகள் கதை கேட்பதை, படிப்பதை விட, பார்ப்பதையே விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது.<br />
<br />
கோகுலம் சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் மிகச் சுமாரான கதைகள் வெகு சிலவே. இதில் பெரும்பாலான கதைகள் அறிவுரை சொல்வதாகவே இருந்தன. பொதுவாக யாருக்குமே அறிவுரை சொல்வது பிடிப்பதில்லை. ஆனால் குழந்தைகளுக்கான கதைகள் என்றால் பெரியவர்களும் சரி, குழந்தைகளும் சரி அறிவுரை சொல்வதாகவே எழுதுகிறார்களே... காரணம் என்ன? அறிவுரை சொல்லும் கதைகளைத்தான் தேர்வு செய்வார்கள் என்று நினைக்கிறார்களா? “திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, தீய நட்பு கூடாது, பெரியவர்களை எதிர்த்துப் பேசக்கூடாது...’ இப்படிப் பட்டியல் நீள்கிறது. இதில் சுற்றுச் சூழல், திருநங்கை போன்ற புதிய களத்தை ஓரிரு கதைகள் தொட்டுச் சென்றிருப்பது நல்ல விஷயம். <br />
<br />
‘வானத்தில் தாரிகா காணாமல் போனதைப் பற்றி நட்சத்திரங்களிடையே சர்ச்சை கிளம்பியது’ என்று அழகாக ஆரம்பித்த அஹமது பைசல், கதையை எழுதத் தவறிவிட்டார்.<br />
<br />
“புறா பீட்சாவுக்கு ஆர்டர் செய்தது. ஸ்கூட்டியில் ஒரு பெண் வந்து புறாவிடம் பீட்சாவை டெலிவரி செய்தாள்’ என்று சுவாரசியமாக ஆரம்பித்த சங்கர குமாரும் கதை எழுதவில்லை. <br />
<br />
இருவரும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல கதைகள் கிடைத்திருக்கும்.<br />
<br />
நகரத்தில் வசிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் கதைப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்துதான் படைப்புகள் வந்திருந்தன. <br />
<br />
பொதுவாகவே கதை வாசிக்கும், எழுதும் வழக்கம் குறைந்து வருகிறது என்றே தோன்றுகிறது. தமிழுக்குத்தான் இந்தப் பிரச்னையோ என்று யோசித்தேன். ஆங்கில கோகுலத்துக்கு இந்தியா முழுவதும் வாசகர்கள் இருக்கிறார்கள். சில காலத்துக்கு முன்பு வரை குழந்தைகளின் படைப்புகளைப் போட்டு மாளாது. ஆனால் இன்று படைப்புகள் மிகவும் குறைந்துவிட்டதாகவே சொல்கிறார் யாமினி. <br />
<br />
கதை கேட்கும்போதும் படிக்கும்போதும் தோன்றும் கற்பனை, இன்று கதையாகத் தொலைக்காட்சியில் காணும்போது தொலைந்து போய்விடுகிறது. கற்பனை வற்ற வற்ற கதைக்கும் பஞ்சம் ஏற்பட்டுவிடுகிறது. <br />
</div>TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-76009019898201823732011-10-06T01:21:00.000-07:002011-10-06T01:25:06.852-07:00உள்ளாட்சித் தேர்தலும் சில துண்டுகளும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-7ddmyRQHkJE/To1kf_DI0MI/AAAAAAAAAIg/jSZ4j3phhog/s1600/Towels.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-7ddmyRQHkJE/To1kf_DI0MI/AAAAAAAAAIg/jSZ4j3phhog/s320/Towels.jpg" width="320" /></a></div><br />
சட்டசபை தேர்தலின்போது தேர்தல் குறித்து நேரடியான அனுபவம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் எங்கள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை சீமந்த விழா, காது குத்து விழா, பெயர் சூட்டுவிழா, திருமண விழா, நிச்சயதார்த்த விழா, சுதந்தர தினம், வருடப் பிறப்பு என்று ஒட்டு மொத்த விழாக்களையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, விதவிதமான கெட்டப்களில் பேனர்களில் கலங்கடித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்!<br />
<br />
எங்கள் குடியிருப்புகளுக்கு இரவு 9 மணிக்கு மேல்தான் ஓட்டு கேட்டு வருகிறார்கள். குடியிருப்பைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள் சூழ மூன்று மாடிகளையும் மூச்சிரைக்க ஏறி வருகிறார் வேட்பாளர். கூட்டத்தில் ஒருவர் கையில் வேட்பாளரின் நோட்டீஸ். இன்னொருவர் கையில் துண்டுகள். அழைப்பு மணி அடித்ததும் எட்டிப் பார்த்தால், ‘சாரைக் கூப்பிடுங்கள்’ என்கிறார்கள். (பெரும்பாலும் பெண்களின் ஓட்டைத் தீர்மானிப்பது ஆண்கள்தான் என்பதால் இப்படிக் கேட்கிறார்கள் போலிருக்கிறது!)<br />
<br />
சார் இல்லை என்றால், என்ன பேசுவது என்று ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். பிறகு ஒரு நோட்டீஸையும் துண்டையும் வைத்து, ’சார் கிட்ட சொல்லிடுங்க. என் சின்னம் பூட்டு, இவர் வார்டுக்கு நிக்கறார், இவர் சின்னம் சீப்பு. எங்களுக்கு மறக்காமல் ஓட்டுப் போடுங்க’ என்கிறார்கள்.<br />
<br />
’துண்டு வேண்டாம்’ என்றதும் திடுக்கிடுகிறர்கள். பிறகு சமாளித்து, சிரித்துவிட்டுச் செல்கிறார்கள். <br />
<br />
எதிர் வீட்டில் அவர்கள் கேட்ட ’சார்’ இருந்தார். உடனே அவருக்குத் துண்டைப் போர்த்தினார் வேட்பாளர். கூட வந்தவர்கள் கை தட்டினார்கள். ஓட்டு கேட்டுவிட்டுச் சென்றார்கள்.<br />
<br />
துண்டுகளிலும் பல தினுசு. இரண்டு வோட்டுகள் என்றால் காட்டன் துண்டு. நான்கு ஓட்டுகள் என்றால் டர்கி டவல். <br />
<br />
அடுத்த அரை மணி நேரத்தில் வேறொரு வேட்பாளர். அவரிடமும் துண்டு. ‘நான் இளைஞர். நல்லது நடக்கணும்னா உங்க வோட்டு இளைஞருக்குப் போடணும்.’<br />
<br />
பத்தரை மணிக்கு மீண்டும் அழைப்பு மணி. <br />
<br />
துண்டு இல்லை. கூட்டம் இல்லை. இருவரும் மஞ்சள் ஆடை அணிந்து, மாலை போட்டிருந்தனர்.<br />
<br />
‘இவங்க என் மனைவி. பொது வேட்பாளரா நிக்கறாங்க. ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஆதரிப்பீங்கன்னு நம்பறேன்’ என்று வண்ண நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றார். <br />
<br />
எங்கள் பகுதி வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய, நூறு கார்களில் ஆள்களை அழைத்துச் சென்றாராம். பெண்களுக்கு இருநூறு ரூபாயும் ஆண்களுக்கு ஐந்நூறு ரூபாயும் தந்தார்களாம். சில இடங்களில் ஓட்டுக்கே பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள்.<br />
<br />
’எங்களுக்கு ஓட்டே இங்க இல்லை. நாங்களே இந்த வருஷத்துக்குத் தேவையான துண்டுகளை வாங்கிக்கிட்டோம். நீங்க என்ன விவரம் பத்தாதவங்களா இருக்கீங்க? நம்ம கிட்ட எடுத்த காசைத்தானே அவங்க துண்டா தர்றாங்க?’ என்று கேட்டார் எதிர் வீட்டுப் பெண்.<br />
<br />
<br />
ஊரில் இருப்பவர்களில் பாதிக்கு மேல் வேட்பாளர்களாகக் கலத்தில் இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகள். </div>TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-17109741280892379782011-09-26T03:13:00.000-07:002011-09-26T03:14:59.055-07:00மரங்களின் தாய்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-oX9pj2sthnw/ToBP1Q0cAeI/AAAAAAAAAIc/Eu5Mt0oCJLg/s1600/wangari.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-oX9pj2sthnw/ToBP1Q0cAeI/AAAAAAAAAIc/Eu5Mt0oCJLg/s320/wangari.jpg" width="213" /></a></div>இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிக முக்கியப் பிரச்னை சுற்றுச்சூழல் சீர்கேடு. காடுகள் அழிப்பு, மழை வளம் குறைதல், பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்தல் போன்ற காரணங்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருகிறது. அதனால் துருவப்பிரதேசங்களில் இருக்கும் பனி உருகத் தொடங்கிவிட்டது. பனி உருகி கடலில் கலந்தால் நீர் மட்டம் உயரும். நிலப்பகுதிகள் மூழ்கக்கூடிய அபாயம். இதை எப்படித் தடுக்கலாம் என்று உலகம் முழுவதும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இது பற்றி 1980களிலேயே யோசிக்க ஆரம்பித்து, செயலில் இறங்கியவர் வாங்கரி மாத்தாய். 1977-ம் ஆண்டு முதல் 12 ஆப்பிரிக்க நாடுகளில் இவர் ஆரம்பித்த பசுமைப்பட்டை இயக்கம் மூலம் 3 கோடி மரங்கள் நடப்பட்டிருக்கின்றன! <br />
<br />
<br />
70 வயது வாங்கரி மாத்தாய் பிறந்தது கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில். கிராமங்களில் பள்ளிகள் இல்லாத காரணத்தால் 8 வயதில்தான் அவர் கல்வி கற்க ஆரம்பித்தார். 1960-ம் ஆண்டில் கென்யாவிலிருந்து 300 மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதில் ஒருவராகப் படிக்கச் சென்றார். உயிரியல் துறையில் இளநிலை, முதுநிலை பட்டங்களை முடித்தார். அப்போது அவருக்குச் சுற்றுச் சூழல் மீது ஈடுபாடு வந்தது.<br />
படிப்பை முடித்தவுடன் தாய் நாட்டில், நைரோபி பல்கலைக்கழகத்தில் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்துகொள்ள அழைப்பு வந்தது. ஆர்வத்துடன் வந்து சேர்ந்தார் வாங்கரி. ஆனால், அவருடைய வேலையை வேறொருவருக்கு அளித்திருந்தனர். பெண் என்பதாலும் பழங்குடி என்பதாலும்தான் அந்த வேலை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டார். இரண்டு மாதங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தபோது, ஜெர்மன் பேராசிரியர் ஒருவரிடமிருந்து மைக்ரோஅனாடமி என்ற புதிய துறையில் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்துகொள்ள அழைப்பு வந்தது. பேராசிரியரின் தூண்டுதலில் ஜெர்மன் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்துக்காகப் படித்தார்.<br />
<br />
<br />
1966-ம் ஆண்டு அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த வாங்கரி, மத்தாய் என்ற கென்யரைச் சந்தித்தார். இருவருக்கும் நட்பு உருவானது. 1969-ம் ஆண்டு இருவரும் நைரோபியில் திருமணம் செய்துகொண்டனர். வாங்கரியின் கணவர் அரசியலில் நுழைந்தார். முதல் மகன் பிறந்தான். 1971-ம் ஆண்டு அனாடமியில் பிஹெச்டி பட்டம் பெற்றார் வாங்கரி. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பிஹெச்டி பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.<br />
<br />
வாங்கரி வேலை செய்த பல்கலைக்கழகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமைகள் வழங்க வேண்டும் என்று போராடினார். சுற்றுச்சூழல் இயக்கங்கள், கென்ய செஞ்சிலுவைச் சங்கம், பெண்கள் இயக்கம் என்று ஏராளமான இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார் வாங்கரி. அப்போது கிராமப்புறப் பெண்களிடம் பழகியபோதுதான், அவர்களின் பொருளாதாரத் தேவைகள், விவசாயப் பிரச்னைகள், நிலத்துக்கான தேவைகள் எல்லாவற்றையும் அவரால் அறிந்துகொள்ள முடிந்தது.<br />
<br />
<br />
இதற்கிடையில் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தார் வாங்கரி. அப்போது நடைபெற்ற தேர்தலில் வாங்கரியின் கணவர் வெற்றி பெற்றார். கென்யாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டபோது, வாங்கரிக்கு ஒரு யோசனை தோன்றியது. கிராமப்புறப் பெண்களுக்கு வருமானம்தான் முதல் பிரச்னை. அவர்களுக்கு வருமானம் அளிக்கும் நேரத்தில் மண்ணையும் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்குச் சரியான வேலை மரம் வளர்ப்பது. கிராமம் கிராமமாகச் சென்று பெண்களைச் சந்தித்தார். மரக்கன்றுகளைக் கொடுத்து தங்கள் நிலங்களில் நடச் சொன்னார். ஓரளவு வருமானத்தையும் அளித்தார். தங்கள் நிலங்களில் மரங்கள் வைத்து முடித்த பிறகு, பிற இடங்களிலும் மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்தார். பெண்களே மரக்கன்றுகளை உருவாக்கும் பண்ணைகளை ஆரம்பித்தனர். இதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தனர்.<br />
<br />
இதைப் பார்த்து அரசாங்கம் பயந்தது. மக்களுக்கு விழிப்புணவு வந்து, மண்ணையும் மரத்தையும் காப்பாற்றினால், தங்களுடைய காடு அழிப்பு, ஊழல் போன்றவற்றுக்கு முடிவு வந்துவிடுமோ என்று அஞ்சியது. கூட்டம் போடக்கூடாது, ஒன்பது பேருக்கு மேல் கூடி நின்று பேசக்கூடாது என்று தடை விதித்தது. ஒவ்வொன்றையும் தைரியமாக எதிர்கொண்டார் வாங்கரி.<br />
1977-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தில் பசுமைப்பட்டை இயக்கம் உதயமானது. வாங்கரி ஓய்வின்றி போராடிக்கொண்டிருக்கும் போது, சொந்த வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. கணவர் தனியாகச் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.<br />
<br />
<b>‘அவள் அதிகம் படித்தவள். மிகவும் தைரியமானவள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பவள். உறுதியானவள். என்னால் அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை</b><b>’</b> – விவாகரத்துக்கு வாங்கரியின் கணவர் சொன்ன காரணம் இதுதான்!<br />
<br />
விவாகரத்துக்காக நிறைய செலவாகியிருந்தது. அத்துடன் மூன்று குழந்தைகளை வளர்ப்பதில் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளானார் வாங்கரி. 6 ஆண்டுகள் குழந்தைகளை, கணவர் பொறுப்பில் விட்டிருந்தார். அடிக்கடிச் சென்று குழந்தைகளைக் கவனித்து வந்தார். பொருளாதாரச் சிக்கல் தீர்ந்த பிறகு, குழந்தைகளை அழைத்து வந்துவிட்டார்.<br />
<br />
79-ம் ஆண்டு நேஷனல் கவுன்சில் ஆஃப் உமன் ஃபார் கென்யா என்ற அமைப்புக்குத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் வாங்கரி. இதன் கீழ் பல்வேறு பெண்கள் இயக்கங்கள் இயங்கின. வாங்கரியின் தொடர் போராட்டங்களால் அரசாங்கம் எரிச்சல் அடைந்தது. பல்வேறு இடையூறுகளைத் தந்தது. அப்போதுதான் ஜனநாயக அரசாங்கம் அமைய வேண்டிய தேவையை உணர்ந்தார் வாங்கரி. 1988-ம் ஆண்டு சுற்றுச்சூழல் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்.<br />
<br />
<br />
1989-ம் ஆண்டில் வாங்கரியின் பசுமைப்பட்டை இயக்கம் அரசாங்கத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. உஹுரு பூங்காவில் பெரிய வணிக வளாகம் அமைக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. மரங்களை அழித்து, வளாகம் அமைப்பதை எதிர்த்து கடிதங்கள் எழுதினார். போராட்டங்களை நடத்தினார். எதற்கும் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. வாங்கரியை பைத்தியக்காரப் பெண் என்று பட்டம் சூட்டியது. கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு 1990-ம் ஆண்டு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.<br />
<br />
அரசியல்வாதிகள், அரசாங்கம் போன்றவற்றைப் பகைத்துக்கொண்டதால் பலமுறை வாங்கரியும் அவருடைய இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலமுறை சிறை சென்றிருக்கிறார்கள்.<br />
<br />
1992-ல் ரியோடிஜெனிரோவில் நடந்த ஐ.நாவின் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வாங்கரி சென்றார். கென்ய அதிபரும் அதில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பேசுவதற்கு வாங்கரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.<br />
<br />
அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மிக மோசமான ஊழல் பேர்வழிகளாக இருந்தனர். அவர்களால் சுற்றுச்சூழலுக்கும் சீர்கேடு. காட்டில் உள்ள மரங்களை அழித்தனர். காட்டையே அழித்தனர். ஊழல் செய்யக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் விடுவதாக இல்லை. வாங்கரி யோசித்தார். அரசியல் அமைப்பை மாற்றினால் தவிர, வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்டார். பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்தார். கென்யாவின் மக்களாட்சி ஆதரவு இயக்கத்தில் இணைந்துகொண்டார்.<br />
<br />
1997 தேர்தலில் வாங்கரி போட்டியிட்டார். அவரைப் பற்றிய வதந்திகள் மக்களிடம் பரப்பப்பட்டன. சில வோட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஆனால் அவருடைய மனம் சோர்வடையவில்லை. பசுமைப்பட்டை இயக்கம் மூலம் அமைதிக்காக மரங்களை நடும் பணிகளில் கவனம் செலுத்தினார்.<br />
<br />
2002-ம் ஆண்டு தேர்தல் வந்தது. வாங்கரி மாத்தாய் ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெற்றது. வாங்கரி 98% வோட்டுகளைப் பெற்றார். சுற்றுச்சூழலுக்கான இணை அமைச்சராக 2005-ம் ஆண்டு வரை செயல்பட்டார். பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திவந்தார்.<br />
<br />
2004-ம் ஆண்டு அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு வாங்கரிக்கு அளிக்கப்பட்டது. நோபல் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்க பெண் மற்றும் முதல் சுற்றுச்சூழல் ஆர்வலர் இவர். ’இந்தப் பரிசு எளிய மக்களாகிய எங்களின் கூட்டு உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எங்கள் உழைப்பு ஒருநாள் உலகை மாற்றும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டார் வாங்கரி மாத்தாய்.<br />
<br />
கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள், அரசாங்கங்களிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்றும் அவருடைய இயக்கம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.<br />
<br />
’மரங்களால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மழை கிடைக்கிறது. பழங்கள், மருந்து, விறகு, மரம் போன்றவை கிடைக்கின்றன. சுத்தமான காற்று கிடைக்கிறது. மரங்களை விட மிக அற்புதமான விஷயம் உலகில் இல்லை. மரங்களை நேசியுங்கள். மரங்கள் இந்தப் பூமியையே காப்பாற்றும். இயற்கையை அழித்து முன்னேற வேண்டும் என்ற போக்கு நிறைய நாடுகளிடம் உள்ளது. இது அபாயகரமானது. இயற்கை வளங்களைப் பாதுகாத்து, செய்யப்படும் முயற்சிகளே உண்மையான முன்னேற்றங்களுக்கு அழைத்துச் செல்லும்’ என்கிறார் மரங்களின் தாய்.<br />
<br />
(தமிழ் பேப்பரில் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரை)<br />
<br />
<br />
</div>TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-48918322067882753052011-06-18T03:03:00.000-07:002011-06-18T03:07:54.520-07:00பிருந்தாவனம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-03dAP-igjQw/Tfx3ikiEdnI/AAAAAAAAAIU/1Mb-MxMrWLM/s1600/DSCN0413.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-03dAP-igjQw/Tfx3ikiEdnI/AAAAAAAAAIU/1Mb-MxMrWLM/s320/DSCN0413.JPG" width="320" /></a></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">தஞ்சாவூரில் தோட்டங்களுடன் கூடிய தனித்தனி வீடுகளாகத்தான் இருக்கும். தென்னை, மா, பலா, வாழை, கொய்யா, முருங்கை, கறிவேப்பிலை போன்ற மரங்கள் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் கண்டிப்பாக இருக்கும். சப்போட்டா, நெல்லி, எலுமிச்சை போன்றவை சில வீடுகளில் இருந்தன. </span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">செம்மண் பூமி என்பதால் எதை வைத்தாலும் நன்றாக வளர்ந்து, பூத்து, காய்த்துக் குலுங்கிவிடும்.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">நாங்கள் அந்த வீட்டுக்கு வந்தபோது, வலது மூலையில் நந்தியாவட்டை மரமும், பின்புறத்தில் ஆயுள் முடிந்த இரண்டு வாழை மரங்களும்தான் இருந்தன. எங்கள் வீட்டில் அனைவருக்குமே செடி, கொடி, மரங்கள் மீது தீராத ஆர்வம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தோட்டத்துடன் கூடிய வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு அப்போதுதான் கிடைத்திருந்தது. குப்பைகள், முள்செடிகள் எல்லாம் அப்புறப்படுத்தி, நான்கு தென்னங்கன்றுகள் வாங்கி நடப்பட்டன.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">அப்பாவின் நண்பர்கள் எல்லாம், ‘எதுக்கு வாடகை வீட்டில் தென்னை மரங்களை எல்லாம் நடறீங்க? கொஞ்ச வருஷத்துல காலி பண்ணிட்டுப் போயிடுவீங்க? யாரோ அனுபவிக்கப் போறாங்க. ஏதாவது காய்கறிச் செடி, கொடிகள் வச்சா, நீங்களே அனுபவிக்கலாம்</span><span lang="TA">’ </span><span lang="TA" style="font-family: Latha;">என்றார்கள்.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">‘நீங்க சொல்றதில் நியாயம் இருக்கு. ஆனா எங்களுக்கு மரம் வளர்க்கறதுலதான் ஆர்வம். அதை யார் அனுபவிச்சாலும் வருத்தமில்லை</span><span lang="TA">’ </span><span lang="TA" style="font-family: Latha;">என்றார் அப்பா.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">வாழைக் கன்று, கறிவேப்பிலைக் கன்று, கொய்யா, பப்பாளி என்று வரிசையாகக் குடிவந்தன. ‘நிறையத் தண்ணீர் ஊற்றினால்தான் தென்னை நல்லா காய்க்கும்</span><span lang="TA">’ </span><span lang="TA" style="font-family: Latha;">என்று யாரோ சொல்ல, குடம் குடமாகத் தண்ணீரைக் கொட்டினோம்.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">விவசாயப் பண்ணையில் இருந்து கத்தரி, வெண்டை, மிளகாய், பாகற்காய், புடலை, தக்காளி, பூசணி என்று விதைகள் வாங்கி வந்து, ஊன்றி வைத்தோம். பொன்னாங்கண்ணி (இது வயலட்டும் பச்சையும் கலந்த நிறத்தில் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும், சாப்பிடவும் செய்யலாம்!), கொத்தமல்லி, புதினா என்று ஒருபக்கம் கீரைகளும் வளர ஆரம்பித்தன.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">விதை ஊன்றியதில் இருந்து தினமும் கவனிப்போம். நான்கு நாள்களில் முளை தெரியும். கொடிகள் வளரும் வேகம் மலைப்பைத் தரும். முதல்நாள் பார்த்தது போல மறுநாள் இருப்பதில்லை. நேற்றுப் பிஞ்சாகத் தெரிந்த பாகற்காய், இன்று பறிக்கும் பதத்துக்கு வந்திருக்கும். (இரவு முழுவதும் விழித்திருந்து செடி, காய் வளர்வது, பூ மலர்வது எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்ததெல்லாம் உண்டு.)</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">கொடிகள் வளருவதற்கு நேர் எதிராகக் கத்தரி, வெண்டை போன்றவை மெதுவாக வளரும். குறைவாகவே காய்க்கும். இரண்டு கத்தரிக்காய்கள் காய்த்தாலும், குழம்பில் வேறு காய்களைச் சேர்க்காமல் சமைத்து, ஆளுக்கொரு துண்டு வைத்துவிடுவார் அம்மா.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">நாமே விதை ஊன்றி, தண்ணீர் ஊற்றி வளர்த்து, காயைப் பறித்து, சமைத்துச் சாப்பிடும் சந்தோஷத்துக்கு நிகர் வேறில்லை. சொந்த உழைப்பில் விளைவித்த பொருளுக்குக் கூடுதல் சுவை இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். </span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">கத்தரி, வெண்டை போன்றவை மிகக் குறைவாகக் காய்த்தாலும் பாகற்காய், புடலங்காய், தக்காளி, பூசணி போன்றவை காய்த்துத் தள்ளின. அதுவும் சிறிய பாகற்காயும் பெரிய பாகற்காயும் தினமும் பறிக்கும் அளவுக்குக் காய்த்தன. பாகற்காய் பிரியர்கள் என்றாலும் தினமும் சாப்பிட முடியாது. அக்கம்பக்கம், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குக் கொடுத்து விடுவோம். </span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">சிறிய பாகற்காய் ஆழம் குறைந்த குழியில்தான் பயிரிட்டிருந்தோம். தினமும் காலை எழுந்ததும் சின்னப் பாகற்காய்களைப் பறிப்பதற்காகக் கொடியோடு கொடியாக ஐக்கியமாகியிருப்போம்.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">‘பாம்பு ஏதாவது இருக்கப் போகுது... செடி கிட்ட இப்படிப் போய் உட்காராதீங்க</span><span lang="TA">’ </span><span lang="TA" style="font-family: Latha;">என்று சொல்லிக்கொண்டே இருப்பார் அம்மா. ஆனால் எங்கள் காதில் அது விழாது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருநாள் பாகற்காய் கொடியையே வெட்டி எறிந்துவிட்டார்கள். கண்ணீரே வந்துவிட்டது.</span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIJT6DAkXlxBP5LJz2B3IvX3DX2qL2WbmieUoQtKfvZofhzf4K2giQuywWsNrjhkUi8lV9N4DRUcDg8fj9jD7yl8D1fLq2JhwXRudJ4DpcecI-02Pg4RismgXOPNcy9xGVtliPU3jum4SV/s1600/DSCN0349.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIJT6DAkXlxBP5LJz2B3IvX3DX2qL2WbmieUoQtKfvZofhzf4K2giQuywWsNrjhkUi8lV9N4DRUcDg8fj9jD7yl8D1fLq2JhwXRudJ4DpcecI-02Pg4RismgXOPNcy9xGVtliPU3jum4SV/s320/DSCN0349.JPG" width="320" /></a></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">நண்பர்கள் வீடுகளில் இருக்கும் பூச்செடிகள், குரோட்டன்ஸ்களை எங்களிடம் இருக்கும் செடிகளைக் கொடுத்து, பண்டமாற்று செய்துகொள்வோம். இதனால் எங்கள் தோட்டத்துக்கு நிறைய தாவரங்கள் குடிவந்தன. நடுவில் வெள்ளை நிறப் பூக்கள் கொண்ட செடிகள். அடுத்த ரவுண்ட் வயலட் வண்ணப் பூக்கள். அதற்கடுத்த ரவுண்ட் வெள்ளை... ஒருபக்கம் சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை நிற ரோஜாக்கள், சாமந்திப் பூக்கள், அடுக்கு மல்லி, செம்பருத்தி... இப்படி எங்கள் தோட்டத்தின் அழகு கூடிக்கொண்டே சென்றது. </span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">நூற்றுக்கு மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகளை அறிமுகம் செய்து வைத்ததும் எங்கள் தோட்டம்தான். தோட்டத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. படிப்பது, எழுதுவது, சகோதரிகளுடன் சண்டை வந்து புலம்புவது எல்லாம் மரங்கள், செடி கொடிகளுடன்தான்! </span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">எங்கள் தோட்டத்தைப் பார்ப்பதற்காகவே அப்பாவின் நண்பர்கள் தினமும் வருவார்கள். ரசிப்பார்கள். ‘பிருந்தாவனத்துக்கு வந்துட்டுப் போற மாதிரி இருக்கு. செடிகள் மேல இருக்கற உங்க ஆர்வத்துக்குப் பரிசா இந்த வீட்டையே நீங்க வாங்கிட்டீங்க</span><span lang="TA">’ </span><span lang="TA" style="font-family: Latha;">என்பார்கள்.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">சில ஆண்டுகளுக்குப் பிறகு தென்னை, மா, பலா, கொய்யா, சாத்துக்குடி மரங்கள் எல்லாம் காய்க்க ஆரம்பித்திருந்தன. </span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">அம்மாவுக்கு ஒரே வருத்தம். ‘கஷ்டப்பட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்த பிள்ளைகள் எல்லாம் கல்யாணம் ஆகிப் போயிட்டாங்க. அவங்களால பலனை அனுபவிக்க முடியலை...</span><span lang="TA">’</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">ஒவ்வொரு வீட்டுக்கும் பார்சலில் பலாப்பழம் அனுப்பிவைக்கப்பட்டன.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">‘அவங்க பணம் கட்டி இங்கே அனுப்பி, அதைப் போய் வாங்கிட்டு வந்து சாப்பிடறதுக்கு ஆகற செலவுல, இங்கேயே ஒரு பழத்தை வாங்கிச் சாப்பிட்டுடலாம்...</span><span lang="TA">’</span><span lang="TA" style="font-family: Latha;"> என்றனர் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள்.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">அவர்களுக்கு என்ன தெரியும்! </span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;">.</span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha;"> </span></div></div>TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-199561324545940282011-01-24T04:31:00.000-08:002011-01-24T04:31:04.724-08:00ஹாஸ்டல் கதைகள் - 5 தண்ணீர்... தண்ணீர்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
இன்று வரை ராமநாதபுரத்தை வாட்டிக்கொண்டிருக்கும் பிரச்னை குடி தண்ணீர். சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிடும்போதும் அடிக்கடி தண்ணீர் குடிக்கும் மோசமான பழக்கம் எனக்கு இருந்தது. ஹாஸ்டலில் சேர்ந்த முதல் நாள் தண்ணீர் கேனுடன் சாப்பிடச் சென்றேன். என்னை எல்லோரும் வித்தியாசமாகப் பார்த்தார்கள். சிறிது நேரத்தில் எல்லோரும் ஆளுக்கு ஒரு வாய் குடித்துவிட்டு, வெறும் கேனைத் திருப்பித் தந்தார்கள். அப்போதுதான் கவனித்தேன், உணவறையில் தண்ணீர்ப் பானையும் இல்லை; யாரும் தண்ணீர் கேனையும் கொண்டுவரவில்லை என்று! கனிமொழி அக்காவிடம் கேட்டேன்.<br />
<br />
“நீ தங்கத்தைக் கேட்டால் ஒருவேளை யாராவது கொடுத்துடலாம். ஆனா, தண்ணியைக் கேட்டா ஒருத்தியும் தரமாட்டாளுக. உன்கிட்ட வாங்கிக் குடிச்சவங்க கூடத் தரமாட்டாங்க. இனிமே தண்ணியைக் கொண்டு வர்ற வேலை எல்லாம் வச்சுக்காதே...’<br />
<br />
‘என்னக்கா, இப்படிச் சொல்றீங்க! எனக்கு விக்கல் எடுத்தா...?’<br />
<br />
“அதெல்லாம் எடுக்காது. நாங்க எத்தனை வருஷமா இப்படிச் சாப்பிட்டுட்டு வர்றோம். ரொம்ப விக்குச்சுனா சட்னி, ரசம், மோர் எதையாவது குடிச்சுக்க வேண்டியதுதான்!’<br />
<br />
அதிர்ந்து போனேன்.<br />
<br />
வாரத்துக்கு ஒருமுறை லாரியில் தண்ணீர் வரும். சமையலுக்குப் பிடித்தது போக, மீதித் தண்ணீரைக் குடிப்பதற்குப் பிடித்துக்கொள்ளலாம். அடுத்த வாரம் வரை தினமும் மூன்று வேளைக்கு ஒரு மூடி வீதம் தண்ணீரைக் குடிக்க வேண்டும். வீட்டிலிருந்து வரும் சில தாராள மனம் படைத்த மாணவியர், தோழியராகக் கிடைத்தால், கூடுதலாகத் தண்ணீரைக் குடிக்கும் பாக்கியம் கிடைக்கலாம்!<br />
சில வாரம் லாரி தண்ணீர் வராது. அப்போது நிலைமை பாலைவனத்தில் வசிக்கும் அனுபவத்தைத் தந்துவிடும். கனிமொழி அக்காவுக்கு சில ஆசிரியர்களிடம் நல்ல பழக்கம் இருந்ததால், அவர்கள் அறைகளில் இருந்து தண்ணீர் வாங்கித் தருவார். அதுவும் வாய்க்காதவர்கள் கிணற்றுத் தண்ணீரை வழியின்றி குடித்து, அவதிப்படுவார்கள்.<br />
<br />
எதை வாங்கி வருகிறார்களோ இல்லையோ, பார்வையாளர்கள் தினத்தில், பார்க்க வருகிறவர்கள் கண்டிப்பாக கேன் நிறைய தண்ணீர் கொண்டுவருவார்கள்!<br />
<br />
லாரி தண்ணீர் வராவிட்டால் சமைப்பது எப்படி?<br />
<br />
சனி, ஞாயிறாக இருந்தால் பகலில் எப்போது வேண்டுமானாலும், பள்ளி நாள்களாக இருந்தால் மாலையிலும் அவரவர் வாளியைத் தூக்கிக்கொண்டு வரிசையில் நிற்க வேண்டும். பதினைந்து நிமிட தூரத்தில் இருக்கும் தேவாலயத்தில் தண்ணீர்ப் பிடித்து வர வேண்டும். பெரிய மாணவியர் வாளி நிறைய தண்ணீர் எடுத்து வருவார்கள். நானும் அமுதாவும் முக்கால் வாளியை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்தபடி வருவோம். நடக்க நடக்க தண்ணீர் தளும்பி, கீழே போனது போக எஞ்சிய தண்ணீரைத்தான் பயன்படுத்தமுடியும்! <br />
<br />
குடி தண்ணீர் தான் இப்படி என்றால்... கிணற்று நீர்?<br />
<br />
பம்ப்செட் போட்ட பெரிய கிணறு. அந்தக் கிணற்றுக்கு அருகில் பெரிய தொட்டி ஒன்று. ஐந்து மணிக்கு மோட்டார் போடுவார்கள். தண்ணீர் தபதபவென்று கொட்டும். அந்த அரைமணி நேரத்துக்குள் குளித்து, துவைத்து விட வேண்டும். சில நேரங்களில் பதினைந்து நிமிடங்களிலேயே தண்ணீர் நின்று விடுவதும் உண்டு. இருட்டு நேரத்தில், மெல்லிய விளக்கு வெளிச்சத்தில், கடமையே கண்ணாக இருந்தால் மட்டுமே காரியத்தில் வெற்றி பெற முடியும்! இல்லாவிட்டால் யாரிடமாவது கயிறும் வாளியும் வாங்கி, தண்ணீர் இறைக்க வேண்டும். ராட்டினம் இல்லாமல் தண்ணீர் இழுக்கத் தெரியாத என் போன்றவர்களுக்கு பம்ப்செட் விட்டால் வேறு வழியில்லை. எப்போதாவது மழை பெய்தாலும் நனைந்துகொண்டே குளிர்த்து முடிக்க வேண்டும்.</div>TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-13784883087908307622011-01-19T06:10:00.000-08:002011-01-19T06:10:41.193-08:00ஹாஸ்டல் கதைகள் - 4 உணவும் வேலைப் பங்கீடும்காலை உணவு பெரும்பாலும் இட்லிதான். ஒரு நாள் தேங்காய் சட்னி, மறுநாள் தக்காளி சட்னி. மாதத்துக்கு இரண்டு தடவை தோசை. மிக அரிதாக உப்புமா. <br />
<br />
கோஸ், பீன்ஸ், கேரட், அவரை, பீட்ரூட் என்று ஏதாவது இரண்டு பொரியல்கள், சாம்பார், ரசம், மோர் மதிய உணவு. இதில் இரண்டு நாள்கள் மட்டன் கிரேவி, அப்பளம் இருக்கும். மட்டன் சாப்பிடாதவர்களுக்கு இரண்டு அப்பளங்கள். இரண்டு நாள்கள் கீரை, முட்டை, புளிக்குழம்பு, ரசம், மோர். <br />
<br />
மாலை (இரவு) உணவு சாதம், ரசம், ஒரு காய். <br />
<br />
நான் விடுதியில் சேர்ந்த ஒரு மாதம் வரை மிகவும் கஷ்டப்பட்டேன். கழுநீர் தண்ணீர் போன்ற காபியும் புளிப்பேறிய இட்லியையும் பார்க்கும்போதே அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒன்று தொண்டைக்கு வந்து, வாந்தி எடுக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிடும். கண்கள் கலங்கி நிற்கும். கூடவே அம்மாவின் அற்புதமான சமையலும், அதை உதாசீனப்படுத்திய காட்சிகளும் கண் முன்னே விரியும். சட்டென்று இரண்டு சொட்டு கண்ணீர் வெளியே வந்துவிடும். சட்னி பிடிக்கவில்லை என்று, இட்லிப் பொடியுடன் சென்றாலும், அந்தப் புளிப்புக்குப் பொடி விஷமாக மாறியது போல ஒரு கசப்பைத் தரும். சாப்பிடாமல் இருக்கவும் முடியாது. இட்லிகளை வாங்கி, கனிமொழி அக்காவிடம் கொடுத்துவிட்டு, ஒரே ஓர் இட்லியுடன் அமர்ந்திருப்பேன். சிறிய தட்டில் பொடி இருக்கும். ஓரிரு துண்டுகளைக் கஷ்டப்பட்டு உள்ளே தள்ளிவிட்டு, சிறிய தட்டில் இட்லியை வைத்து, பெரிய தட்டால் மறைத்தபடி சென்று, கொட்டி விடுவேன்.<br />
<br />
மதியம் உணவு சாப்பிடும்படி இருக்கும். ஆனால் எனக்குத்தான் அதிலும் பிரச்னை. கோஸ், புடலங்காய், பீர்க்கங்காய், சௌசௌ... இவை எல்லாம் எனக்குப் பிடிக்காத காய்கள். ஆனால் இவைதான் பெரும்பாலும் இருக்கும். காலையில் சாப்பிடாததால், மதியம் பசி அதிகமிருக்கும். பசிக்குச் சாப்பிடும் அருமை அப்போதுதான் புரிந்தது. சாம்பார் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, ரசத்தைக் குடித்துவிட்டு எழுந்துவிடுவேன். <br />
<br />
இரவு உணவைப் பொறுத்தவரை என்னை அதிகம் இம்சிக்கவில்லை. வாரத்தில் ஒருநாள் சௌசௌ கூட்டை மட்டும் அமுதாவிடம் தள்ளிவிடுவேன். ஊறுகாய் வைத்து சமாளித்துக்கொள்வேன். மறுநாள் அமுதாவுக்குப் பிடிக்காத சேனைக்கிழங்கு வறுவல் எனக்கு வந்து விடும். <br />
<br />
எங்கள் ஹாஸ்டலில் மூன்று பிரிவுகள் இருந்தன. ஒன்று நான் சாப்பிடக்கூடிய, மாதக் கட்டணம் ரூ.120/- . இன்னொன்று ரூ.90/-. (இதில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் இட்லி, மற்ற நாள்களில் சுடு கஞ்சி. மதியம் ஒரே ஒரு காய். வாரத்துக்கு ஒரு நாள் மட்டன், ஒரு நாள் முட்டை. மாலை உணவு எங்ககளைப் போன்றதே.) முப்பது ரூபாய் அதிகம் கொடுத்தால், ஓரளவு நல்ல உணவு கிடைத்துவிடும். ஆனால் அதைக் கூட கொடுக்க முடியாதவர்கள் அதிகம் இருந்தனர். இதில் அக்கா, தங்கை இருவர் இருந்தால், ஒருவர் இந்த மெனுவிலும் இன்னொருவர் அந்த மெனுவிலும் இருக்கக்கூடிய விநோதம் எல்லாம் இருக்கும்! மூன்றாவது வகையில் சற்றுக் குறைவான எண்ணிக்கையில் மாணவியர். ஆதரவு அற்றவர்கள், மிக மிக ஏழைமையில் இருக்கக்கூடியவர்கள். <br />
<br />
*<br />
<br />
ஹாஸ்டலில் பெருக்குதல், உணவு பரிமாறுதல் போன்ற வேலைகளை மாணவியரை வைத்தே செய்துவிடுவார்கள். ஆரம்பத்தில் இந்த வேலைகளைச் செய்யும்போது கோபமாக வரும். ஆள் வைத்து செய்துகொள்ளாமல், மாணவியரை இப்படி வேலை வாங்குகிறார்களே என்று! அவரவருக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளைப் பெருக்கிவிட்டு, பிறகுதான் படிக்க வரவேண்டும். அது ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இல்லை. ஆனால் இந்தப் பரிமாறுதல்?<br />
<br />
நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட, 9 -12 வகுப்பு மாணவியர்தான் பரிமாறும் வேலைகளைச் செய்ய வேண்டும். உணவறைக்கும் சமையலறைக்கும் தூரம் அதிகம். அங்கிருந்து அவரவர் குழு ஆள்களுடன் பெரிய பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவை எடுத்து வர வேண்டும். தட்டை உணவறையில் வைத்துவிட்டு, உணவுகளைக் கொண்டு வர வேண்டும். அப்படி நான் போவதற்குள் இட்லி, பொரியல், முட்டை, கீரை போன்ற சிறிய பாத்திரங்கள் எல்லாம் ஏற்கெனவே போயிருக்கும். சாதம், குழம்பு, ரசம், மோர் போன்ற ஏதோ ஒன்றைப் பரிமாறிவிட்டு, அந்தப் பாத்திரத்தைச் சுத்தம் செய்துவிட்டு, உணவறைக்கு வந்து சாப்பிட வேண்டும். எப்படி மற்றவர்கள் இவ்வளவு சாமர்த்தியமாக இருக்கிறார்கள் என்று நான் யோசித்துப் பார்த்தும் சூட்சுமம் புரியவில்லை.<br />
<br />
கனிமொழிதான் என்னைக் கவனித்து அந்த டெக்னிக்கைச் சொல்லித் தந்தார்.<br />
<br />
“நீ ஒன்பதாம் வகுப்பு படிக்கிற சின்னப் பொண்ணு. பெரிய பாத்திரங்கள் எல்லாம் தூக்காத. இனிமேல் நீ பரிமாறுகிற வாரத்தில் நானே தட்டை எடுத்துட்டு வந்துடறேன். நீ பெல் அடிச்சதும் நேரா கிச்சனுக்குப் போயிரு. ஈஸியா என்ன இருக்கோ, அதை மத்தவங்களோட சேர்ந்து எடுத்துட்டு வந்துரு. சாதம் போடறதுக்குள்ள உன் வேலையை முடிச்சிட்டு வந்துடலாம்’ என்றார்.<br />
<br />
அடடா! அதற்குப் பிறகு நானும் அதுபோலச் செய்தேன். அப்படியும் என்னை விட சாமர்த்தியசாலிகள் எப்படியோ சில நேரங்களில் என்னை முந்திவிடுவார்கள்! <br />
<br />
பெரும்பாலும் 11, 12 படிப்பவர்கள்தான் பரிமாறுவார்கள். நாங்கள் எல்லாம் தட்டுகளை வாங்கிக் கொடுக்கும் பணியைத்தான் செய்வோம். இப்படி அவர்கள் அந்த வேலையைக் கையில் வைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. எல்லோருக்கும் பரிமாறிய பிறகு, மீதி எது இருந்தாலும் இன்னொரு ரவுண்ட் பரிமாறிவிடலாம். அப்படிப் பரிமாறும்போது யார் பரிமாறுகிறாரோ அவருடைய தட்டில் இருந்துதான் இரண்டாவது சுற்று ஆரம்பிக்கும்! காய்களைக் கண்டுகொள்ளாமல் விடும் மற்றவர்கள், மட்டன் பரிமாறும்போது மட்டும் எரிச்சலைக் காட்டுவார்கள். ஆனாலும் அவர்கள் பரிமாறும்போதும் இப்படித்தா ன் செய்வார்கள்.<br />
<br />
என்னைப் போல் ஒன்றிரண்டு பேரைத் தவிர, மற்றவர்கள் யாரும் உணவு பிடிக்கவில்லை என்று கொட்ட மாட்டார்கள். இட்லி பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே, நான்கு இட்லிகளைச் சாப்பிட்டு விடுவார்கள். எஸ்தர், தேன் மொழி போன்றவர்கள் தட்டு நிறைய இட்லிகளை வைத்து, மிகவும் ரசனையாக சட்னிக்குள் நனைத்து, உறிஞ்சி சாப்பிடுவார்கள். <br />
இவர்களைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஹாஸ்டலில் இருக்கக்கூடியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிராமங்களிலிருந்து, ஏழைமையில்<br />
வந்தவர்கள் என்று பிறகுதான் புரிந்தது.<br />
<br />
ஹாஸ்டலில் எந்த வித பாகுபாடுமின்றி ஒரு விஷயம் எல்லோரிடமும் இருந்தது. அது சத்து மாவு. மாதம் முழுவதும் நொறுக்குத் தீனிகளை வைத்திருக்க முடியாது. கடையில் தின்பண்டம் வாங்கிச் சாப்பிடுவதற்கு வசதியும் இருக்காது. இந்தச் சத்துமாவை மாதக்கணக்கில் வைத்திருக்கலாம். வேர்க்கடலை, பச்சைப்பயறு, அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு, பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் என்று அவரவர் பக்குவத்துக்கும் வசதிக்கும் ஏற்ப சத்துமாவு வைத்திருப்பார்கள். சிலர் தண்ணீரில் பிசைந்து உருண்டையாகச் சாப்பிடுவார்கள். சிலர் ஒரு கிண்ணத்தில் கொட்டி, அவ்வப்போது ஒரு ஸ்பூன் மாவை வாயில் போடுவார்கள். இது சில நேரங்களில் புரை ஏற்றிவிடும் என்பதால், கொஞ்சம் எண்ணெய் கலந்து சாப்பிடுவார்கள். தேசிய உணவு போல சத்துமாவுதான் ஹாஸ்டல் வட்டார உணவு!TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-36293405028733797092010-12-29T04:55:00.000-08:002010-12-29T04:55:26.625-08:00தமிழன் என்று சொல்லடா!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3kwKWHXjT0FTupmXdmqhtyoV2e0Xplu5lpt_R_mG9Pa2w-tXBcQz6SZ3yd19hvWlcZe5-ucaDPQiqwqi2rZLuOhRRy7l5pD-ewUAZqlS1VCvBEGwNl3wq5yXt58kUD8RO8-wnnLLePNT7/s1600/DSCN2168.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3kwKWHXjT0FTupmXdmqhtyoV2e0Xplu5lpt_R_mG9Pa2w-tXBcQz6SZ3yd19hvWlcZe5-ucaDPQiqwqi2rZLuOhRRy7l5pD-ewUAZqlS1VCvBEGwNl3wq5yXt58kUD8RO8-wnnLLePNT7/s320/DSCN2168.JPG" width="240" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirMAy3D5AhvbBoeSHzA5gsR6fsfBW0Oj1viRcKuIOZdCnmJmWu-0yV03_iKtNBG5YXvdcRcg5xcppLmsqy4mWqhVDXiZGthpGzHrX91hpQt37DL9jQWCgFmCvnceBRzuulpe5ps4m9v9bv/s1600/DSCN2170.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirMAy3D5AhvbBoeSHzA5gsR6fsfBW0Oj1viRcKuIOZdCnmJmWu-0yV03_iKtNBG5YXvdcRcg5xcppLmsqy4mWqhVDXiZGthpGzHrX91hpQt37DL9jQWCgFmCvnceBRzuulpe5ps4m9v9bv/s320/DSCN2170.JPG" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8RVTHblaaAs4pH0cwHRLSGoa8IdJ30sEvTKPTBV1Y-FxWFhvcQ4fVTBr77bJA8awSC_rwxDIP7wmST6sCK1YnFqPsvLO0gR_9pD0VdxhSuVtwJ1rD6Fh5et2TdN9DFgMCwfv9KD4v-eXQ/s1600/DSCN2179.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8RVTHblaaAs4pH0cwHRLSGoa8IdJ30sEvTKPTBV1Y-FxWFhvcQ4fVTBr77bJA8awSC_rwxDIP7wmST6sCK1YnFqPsvLO0gR_9pD0VdxhSuVtwJ1rD6Fh5et2TdN9DFgMCwfv9KD4v-eXQ/s320/DSCN2179.JPG" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTJso4ki_YOmb7LmVXfIkplCO93S2os8M7VMcUBBSqb80BmCAQ7W_buS05VJzfmRFpXyhahd3lmoTn9-zHzp7_EqMnskdJ9J2j0ru_pAMKdJKfwMNob3P3K6TpxQhirI2pqKy7cGdo4D4V/s1600/DSCN2195.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTJso4ki_YOmb7LmVXfIkplCO93S2os8M7VMcUBBSqb80BmCAQ7W_buS05VJzfmRFpXyhahd3lmoTn9-zHzp7_EqMnskdJ9J2j0ru_pAMKdJKfwMNob3P3K6TpxQhirI2pqKy7cGdo4D4V/s320/DSCN2195.JPG" width="320" /></a></div><br />
மலேஷியாவுக்குச் சென்றதும் அங்குள்ள நண்பர்கள் பத்து மலையை முதலில் பார்க்கும்படி வற்புறுத்தினார்கள். உலகிலேயே மிக உயரமான முருகனை உருவாக்கிய பெருமிதம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. பிரதான சாலையை ஒட்டி அமைந்திருந்தது கோயில். சற்றுத் தூரத்திலேயே தங்க நிறத்தில் ஜொலித்த முருகன் கண்களில் பட்டார். அகலமான நீண்ட தார்ச்சாலைகளை தவிர்த்து, பத்து மலையைப் பொருத்தவரை வெளிநாட்டில் இருக்கக்கூடிய உணர்வு இல்லை. கோயில் அருகே சென்றதும் தமிழ் நாட்டுக் கோயிலுக்குள் நுழைந்து விட்டோமோ என்று சந்தேகம் வந்தது.<br />
<br />
நுழைவாயிலுக்கு முன்பு ஏகப்பட்ட கார்கள் குறுக்கும் நெடுக்குமாக, ஓர் ஒழுங்கின்றி நின்றுகொண்டிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார்களுக்கு இடையில் தள்ளு வண்டி கடைகள் இருந்தன. பத்து நாள்களுக்கு முன்புதான் தைப்பூசம் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்தக் கொண்டாட்டங்களின் மிச்ச சொச்சம் இன்னும் இருப்பதால் இப்படி இருக்கிறது என்று விளக்கம் அளித்தார்கள். கார்களில் இருந்து இறங்குபவர்கள் அப்படியே இருக்கும் இடத்தில் காரை வைத்து விட்டு உள்ளே செல்கிறார்கள். மணிக்கணக்கில் பிரார்த்தனை முடித்துவிட்டு வருகிறார்கள். சிலர் அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டு, காருக்கு அருகில் வந்து, நடு ரோட்டில் உடை மாற்றுகிறார்கள். <br />
<br />
நுழை வாயிலில் இருந்து வரிசையாகக் கடைகள். பிளாஸ்டிக் பொம்மைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள், இளநீர் கடைகள், ரோஸ், மெஜந்தா, பச்சை வண்ணங்களில் மைசூர் பா, முறுக்கு, ராட்சஷ சைஸில் லட்டு, மிக்சர் என்று ஏகப்பட்ட தின்பண்டங்கள். ஒரு பக்கம் ’வேலய்யா வேலய்யா’ என்று பில்லா படப் பாடல் கந்த சஷ்டி ரேஞ்சுக்குப் பக்தியை ஊட்டிக் கொண்டிருந்தது! இரண்டு, மூன்று ஹோட்டல்கள் இருந்தன. இட்லி, இடியாப்பம், பூரி, தோசை, காபி, டீ என்று இங்கு கிடைக்கும் அத்தனை உணவுகளும் அந்த ஹோட்டல்களில் கிடைக்கின்றன. கூட்டம் வந்துகொண்டே இருக்கிறது. <br />
<br />
முருகனை நெருங்க நெருங்க பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. 140 அடி உயரத்தில் முருகன் சாந்தமாக நின்றுகொண்டிருக்கிறார். இந்திய மதிப்புப்படி 2.4 கோடி ரூபாய் இந்தச் சிலைக்குச் செலவாகியிருக்கிறது. முருகனுக்குப் பின்புறம் பத்து மலை குகை இருக்கிறது. 272 படிகளில் ஏறி அந்தக் குகைக்குச் செல்ல வேண்டும். வழியில் குரங்குகளைக் கொஞ்சம் சமாளிக்க வேண்டும். அவ்வளவு களைப்புற்று மேலே வந்து சேர்ந்தால், ஆச்சரியம் காத்திருக்கிறது. மிக மிக பிரம்மாண்டமான குகை. பல்லாயிரக்கணக்கான மக்களைத் தாங்கும் விதத்தில் விசாலமாக இருக்கிறது. குகையை நிமிர்ந்து பார்த்தால், நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது, குழம்பாக வடிந்து, உறைந்துபோன பகுதிகள் காட்சியளிக்கின்றன. ஒரு பக்கம் வானம் தெரிகிறது. காற்றுப் போவதற்கு இயற்கை அளித்த வசதி. <br />
<br />
குகைக்குள் ஒரு பக்கம் மீண்டும் முருகன், பிள்ளையார், சிவன், பார்வதி என்று வரிசையாகக் கோயில்கள். இன்னும் ஒரு 50 படிக்கட்டுகள் ஏறினால் அங்கு இன்னொரு குகை. அங்கும் சில தெய்வங்கள். வெளியில் வெயிலாக இருந்தாலும் குகைக்குள் நல்ல குளிர்ச்சி. குகை வாயிலில் நின்று பார்த்தால் மலேஷியா தெரிகிறது. வாயிலுக்கு அருகில் பத்து மலை முருகன் சிலைகள், மலேஷியாவின் அடையாளமான ட்வின் டவர் பொம்மைகள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். படியில் இறங்கும் போது, நன்றாக உடை அணிந்திருந்த ஓர் அம்மா, திடீரென்று கை நீட்டி, பிச்சை கேட்டார். அதிர்ச்சியாக இருந்தது. <br />
<br />
கோயில் வளாகத்திலேயே குளியலறை, கழிப்பறை, ஓய்வறைகள் எல்லாம் இருக்கின்றன. சிலர் மொட்டை போடுகிறார்கள். சிலர் காது குத்துகிறார்கள். பாவாடை, தாவணி, சுடிதார், சேலை, வேஷ்டிகளில் மக்களைப் பார்க்க முடிந்தது. உடை, பழக்க வழக்கங்கள், கோயில் என்று பலவற்றை தமிழ் நாட்டுப் பாணியில் பின்பற்றினாலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் நாட்டைப் பார்த்ததில்லை. தாத்தா காலத்திலேயே ரப்பர் தோட்டத்தில் வேலை செய்வதற்கு மலேஷியாவுக்கு வந்தவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, உறவுகளை மறந்து, அங்கேயே செட்டில் ஆனவர்கள். அரசாங்கப் பதவிகள், உயர் பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். சிலர் கடைகள், பிசினஸ் என்று சம்பாதிக்கிறார்கள். சொந்த வீடு, இரண்டு கார்கள் என்று வசதியாக இருக்கிறார்கள். தங்களை மலேஷியன் தமிழர் என்றுதான் அறிமுகம் செய்துகொள்கிறார்கள். நீங்கள் தமிழ் நாட்டுத் தமிழரா அல்லது ஈழத் தமிழரா என்று கேட்கிறார்கள். <br />
<br />
தைப்பூசம் என்பது மலேஷியாவின் தேசிய விடுமுறை தினம். சிங்கப்பூர், மலேஷியாவிலிருந்து பலரும் அந்த நாளில் பத்து மலையை முற்றுகையிடுவார்களாம். காவடி, கரகம், அலகு குத்துதல் என்று ஊரே களை கட்டுமாம். மலேஷியாவில் தமிழர்கள் பகுதியில் மட்டும்தான் இதுபோன்ற போக்குவரத்து அத்துமீறல்கள் நடப்பதாக அங்குள்ள நண்பர்கள் சொன்னர்கள். <br />
<br />
வாசலுக்கு வந்தோம். ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ் செல்வதற்கான பேருந்து நிறுத்தம் சற்றுத் தூரத்தில் இருந்தது. அருகில் ஒரு டாக்சி வந்து நின்றது. 'என்ன, தமிழா? எங்கே போகணும்?’ என்று கேட்டார் டிரைவர். நாங்கள் இடத்தைச் சொன்னதும், ‘பத்து ரிங்கட் கொடுத்துடுங்க, தமிழர்ங்கிறதால குறைவா சொல்றேன்’ என்று ஏற்றிக்கொண்டார். இடத்தை விசாரித்து, இறக்கி விட்டார், 'எல்லாத்துலயும் நாணயம் வேணும். நாளைக்கு மலேஷிய தமிழன் ஏமாத்திட்டான்னு உங்க ஊர்ல சொல்லக்கூடாது இல்லையா?’ என்றபடி கிளம்பினார். <br />
<br />
திரும்பி வரும்போது இரவு நேரம். அந்த இடத்திலிருந்து நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு ஒரு காரில் ஏறினோம். 5 ரிங்கட் பெற்றுகொண்டு கிளம்பினார் பேரம் பேசாத மலாய்க்காரர்! இங்கிருந்து போகும்போதே ஒரு நண்பர் சொன்னார், ’ தமிழன்னு எந்த வண்டியிலேயும் ஏறாதீங்க, ஏமாத்திருவாங்க’ என்று. அது அப்போதுதான் நினைவுக்கு வந்தது! TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-34757713377066675902010-12-15T04:18:00.000-08:002010-12-15T04:18:00.220-08:00மார்கழி<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/_ZhvKETGnDKQ/TQixwytwS8I/AAAAAAAAAHY/6ce07FNePrk/s1600/1262942631kolam-patterns-b30.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_ZhvKETGnDKQ/TQixwytwS8I/AAAAAAAAAHY/6ce07FNePrk/s320/1262942631kolam-patterns-b30.jpg" width="320" /></a></div><br />
<br />
இலைகளில் ஈரம் கவிந்திருக்கும். பக்கத்து வீட்டைக் கூடப் பார்க்க முடியாத அளவுக்குப் புகை மூட்டம். சிலிர்க்கும் குளிர். மார்கழியில்தான் இவற்றை எல்லாம் ரசிக்கவும் உணரவும் முடியும். அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்து விடுவோம். இருட்டை விரட்ட வீட்டைச் சுற்றிலும் விளக்குகள் எரியும். ஜில் என்ற தண்ணீரில் வாசல் தெளித்து, பெருக்கி முடித்ததும் கோலம் போடும் வேலை. முதல் நாளே திட்டமிட்டு வைத்திருப்பதால் வேலை தங்குதடையின்றி ஆரம்பமாகி விடும். <br />
<br />
கற்பனை, நினைவுத்திறன், ரசனை எல்லாம் அடக்கியதுதான் கோலங்கள். சில கோலங்களைப் புள்ளி வைத்து, பொம்மை, பழங்கள், பூக்கள் எல்லாம் போட்டு, அடிக்கும் நிறங்களைத் தூவினால் அன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சில கோலங்கள் வண்ணங்கள் தூவ அவசியமின்றி, கோடுகளாலேயே போடப்படும். கோடுகளால் ஆன கோலத்தைச் சிறிய அளவிலிருந்து ஒரு தெருவையே அடைத்துக்கொண்டு போடும் அளவுக்குப் பெரிதாகப் போட்டுக்கொண்டே செல்லலாம். பொறுமையும் ஆர்வமும்தான் முக்கியம்.<br />
<br />
எங்கள் அம்மா கோல மாவால் கோடு இழுத்தாலே அத்தனை அழகாக இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு கோடுகளைப் பிசிறில்லாமல் போடுவார். அம்மா போடும் நாள்களைத் தவிர, மீதி நாள்களில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் எங்கள் விருப்பப்படி கோலம் போடுவோம். பெரும்பாலும் எங்களுடைய கோலங்கள் எந்தப் புள்ளிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் சிக்காதவையாகவே இருக்கும். பூக்கள் நிறைந்த தொட்டி, கார்ட்டூன்கள், இயற்கைக் காட்சிகள் என்று எங்கள் கற்பனை விரிவடையும். (எங்கள் கோலங்களுக்கு நிறைய விசிறிகள் உண்டு!) இந்தக் கோலங்களுக்குக் கண்டிப்பாக வண்ணங்கள் வேண்டும். ஒருவர் வரைய வரைய மற்றவர்கள் வண்ணம் தீட்டிக்கொண்டே வருவார்கள். விரைவில் வேலை முடிந்துவிடும். <br />
<br />
தலையில் ஸ்கார்ஃப், அருகில் கொசுவத்திச் சுருள், குளிருக்கு இதமாக அம்மாக்கள் காபியை ஆற்றிக்கொண்டு நிற்கும் காட்சியைப் பெரும்பாலும் எல்லோருடைய வீடுகளிலும் பார்க்க முடியும். <br />
<br />
வெளிச்சம் வரும்போது எல்லோரும் கோலத்தை முடித்திருப்போம். பிறகு அந்தத் தெரு முழுவதும் ஒரு நடை செல்வோம். ஒவ்வொருவரும் என்ன கோலம் போட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து ரசிப்போம். என்னதான் ஓவியம் தீட்டி, வண்ணம் கொடுத்து அழகு சேர்த்தாலும், கோடுகளில் வித்தைகாட்டும் எதிர் வீட்டு மாமிதான் அதிகம் ஸ்கோர் செய்துவிடுவார்.<br />
<br />
கோலத்தை அழிக்காமல் வண்டியை எடுப்பது அப்பாவுக்குச் சவால் நிறைந்த காரியமாக இருக்கும். சைக்கிள், வண்டிகளைக் கண்மண் தெரியாமல் அதுவரை ஓட்டிக்கொண்டிருந்த இளைஞர்கள் மார்கழி மாதங்களில் கோலத்தை அழித்து விடாமல் இருக்க, பார்த்துப் பார்த்துச் செல்வார்கள். <br />
<br />
கிறிஸ்துமஸ், நியு இயர், பொங்கல் போன்ற விசேஷ நாள்களில் வழகத்தைவிடச் சிறப்பாகக் கோலம் போடப்படும். மாட்டுப் பொங்கலுடன் ஸ்பெஷல் கோலங்களுக்கு குட்பை. <br />
<br />
ஈரம் காயாத தரையில் போட்ட கோலங்களையும் அதில் நடுவில் இருக்கும் பறங்கிப் பூக்களையும் பார்த்து பல ஆண்டுகளாகி விட்டன. தெருக்கள் அப்படியேதான் இருக்கின்றன... மனநிலைதான் மாறிவிட்டது. <br />
TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-48538943496383375412010-11-30T02:22:00.000-08:002010-11-30T02:22:58.339-08:00குதிரைக்கால் அரண்மனையும் பாஞ்சாலங்குறிச்சியும்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLuqK3BZcYJPjJMelnHOsExJchatj7B37NUZS8TsESIV0oKJeOPvpJpDezf2e1oEhoxZWPrCSB49aG_CzhyphenhyphenOc6WogFESI4OegPFLkqfId9ZJc53hdjAIfbJ8Xfzj_A8GqaOEKopYMzdQRu/s1600/DSCN3884.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLuqK3BZcYJPjJMelnHOsExJchatj7B37NUZS8TsESIV0oKJeOPvpJpDezf2e1oEhoxZWPrCSB49aG_CzhyphenhyphenOc6WogFESI4OegPFLkqfId9ZJc53hdjAIfbJ8Xfzj_A8GqaOEKopYMzdQRu/s320/DSCN3884.JPG" width="320" /></a></div>மிகவும் நேசத்துக்குரிய மாநிலம் கேரளா. சில ஆண்டுகளுக்கு முன்பு குமரகம் சென்றபோதும் சரி, இப்போது திருவனந்தபுரம் சென்றபோதும் சரி பெரிய அளவில் மாற்றம் இல்லை. கேரளாவில் பேருந்தில் பயணம் செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது. காத்திருக்க அவசியமின்றி, பேருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. மூன்று நாள்களில் நாங்கள் பயணம் செய்த பேருந்துகளில் பெரும்பாலும் பெண்களே கண்டக்டர்களாக இருந்தனர். பேருந்து கட்டணம் தமிழ்நாட்டைப் போல்தான் இருக்கிறது. ஆனால் ஆட்டோ கட்டணங்களில் ஆச்சரியம்! ஸ்டேஷனிலிருந்து கிழக்கு கோட்டை செல்வதற்கு ஆட்டோவில் பன்னிரண்டு ரூபாய் ஐம்பது காசு என்று மீட்டர் காட்டியது. டிரைவர் பன்னிரண்டு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டார்!<br />
<br />
திருவனந்தபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் கோவளம் கடற்கரை. கடற்கரையை ஒட்டி மலைப் பிரதேசம். அடர்த்தியாகவும் மிக மிக உயரமாகவும் இருந்தன தென்னை மரங்கள். ஆங்காங்கே ஒன்றிரண்டு வீடுகள். கடற்கரையை ஒட்டி சிமெண்ட் நடைபாதை. நடைபாதையை ஒட்டி உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், துணிக்கடைகள், அலங்காரப் பொருள்கள் கடைகள்... வெளிநாட்டினர் மாதக்கணக்கில் தங்கி, சன்பாத் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆவேசமாக வரும் அலைகளுக்கு நடுவில் தைரியமாக குளிக்கிறார்கள்... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கரையில் அமர்ந்து மீண்டும் மீண்டும் அதே அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஏனோ அலுப்பே வருவதில்லை!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgVV0YRV95Oa3kIOctxgnFfOkvitmj3qxdyjxLw_rdOuAd7lFc3dvKOa8hX4z1ipW4tNMuLGI9SgdLwFBOsTbH8gQJ6YSgOJFQpj6xrLBtm499Zx3vPt6UisAPAi28fHngnTqNowZIc17z/s1600/DSCN3924.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgVV0YRV95Oa3kIOctxgnFfOkvitmj3qxdyjxLw_rdOuAd7lFc3dvKOa8hX4z1ipW4tNMuLGI9SgdLwFBOsTbH8gQJ6YSgOJFQpj6xrLBtm499Zx3vPt6UisAPAi28fHngnTqNowZIc17z/s320/DSCN3924.JPG" width="320" /></a></div><br />
<br />
கோவளத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கிறது விழிஞ்ஜம். இது ஒரு மீன் பிடித் துறைமுகம். துறைமுகத்தைச் சுற்றிலும் எளிய மக்களின் கூட்டம். நீலம், பச்சை, சிவப்பு என்று பல வண்ணங்களில் துறைமுகம் முழுவதும் ஏராளமான படகுகள் அணிவகுத்திருந்தன. ஒன்றிரண்டு மீன் பிடிக் கப்பல்களும் நின்றிருந்தன. துறைமுகத்துக்கு மறுபுறம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது கடல். துறைமுகத்தைச் சுற்றி இரண்டு தேவாலயங்கள், மசூதிகள் காணப்பட்டன.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQagj4TUW6cAXKpzVl3OaxGJ5XdrNH4mhvF2pHC8RhyphenhyphenkdtUjKCLNeUnY33t2mLO92Gy1fC2h94petS5kHgtQOHYy-lOk3lIKnwxrVFMgPRL_jXsD4YUINtpA02J_4Zq8WJLEiJTfQPY7WT/s1600/DSCN3946.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQagj4TUW6cAXKpzVl3OaxGJ5XdrNH4mhvF2pHC8RhyphenhyphenkdtUjKCLNeUnY33t2mLO92Gy1fC2h94petS5kHgtQOHYy-lOk3lIKnwxrVFMgPRL_jXsD4YUINtpA02J_4Zq8WJLEiJTfQPY7WT/s320/DSCN3946.JPG" width="320" /></a></div><br />
<br />
அங்கிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது பூவார். இது அலையாத்திக்காடுகள், பூவாறு, கடல் மூன்றும் சங்கமிக்கும் இடம். இரண்டு மணிநேரம் இந்தப் பகுதியில் பயணம் செய்வது அலாதியானது. பருந்து, கொக்கு, நாரை, மீன் கொத்தி, மரங்கொத்தி, நீர்க்காகம், பல வண்ண வாத்துகள் என்று பறவைகளை அருகில் பார்க்கலாம். ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சுத்தமான கடற்கரை. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு கடலின் ஆக்ரோஷம் அதிகம். இருபுறமும் தென்னை மரங்களுக்கு நடுவில் மீண்டும் படகில் பயணம். வழியில் ஒரு படகில் இளநீர் கடை. அபார ருசி!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQbeKIUxi6F7xHh3-f_OcDiJdQ13QVI04pXOtM9XjhMtVag6peo8KoiIG7_iLjY7EpbGarFuvksScSkrmjUKs1OX6IRGD-RPDxGtTArDEF642mYAy8n3q2nBZYC4WG4FaRmloeLbab8jNm/s1600/DSCN4045.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQbeKIUxi6F7xHh3-f_OcDiJdQ13QVI04pXOtM9XjhMtVag6peo8KoiIG7_iLjY7EpbGarFuvksScSkrmjUKs1OX6IRGD-RPDxGtTArDEF642mYAy8n3q2nBZYC4WG4FaRmloeLbab8jNm/s320/DSCN4045.JPG" width="320" /></a></div><br />
<br />
குதிரைக்கால் அரண்மனை பத்மநாபபுரம் கோயில் அருகில் உள்ளது. மிக பிரம்மாண்டமான அரண்மனை. தேக்கு மரங்களில் அற்புதமான வேலைப்பாடுகள். இருநூறு வயது பழைமையான அரண்மனை என்று நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆயுதங்கள், ஆளுயரக் கண்ணாடிகள், கண்ணாடிப் பொருள்கள், யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட சிம்மாசனங்கள், ஸ்லைடிங் டோர்கள் அமைந்த ஜன்னல்கள், இசைக்கருவிகள், ஓவியங்கள், புத்தகங்கள் என்று ஆச்சரியமாக இருந்தன. நூறு அறைகள் கொண்ட இந்த அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதித்தது இருபது அறைகளைத்தான். அதுவே இத்தனை பிரம்மாண்டம். இசை... நடனம்... என்று வாழ்க்கையை அனுபவித்து, வாழ்ந்து தீர்த்திருக்கிறார்கள் இந்த ராஜாக்கள். <br />
<br />
எல்லாம் முடிந்து வெளியே வந்தபோது ஒரு கேள்வி எழுந்தது. அது இந்திய சுதந்தரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலகட்டம். திருவனந்தபுரத்துக்கு அருகில் தமிழ்நாட்டில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியை தலைநகராகக் கொண்டு, 90 கிராமங்களை ஆண்டுகொண்டிருந்தவர் வீரபாண்டிய கட்ட பொம்மன். சென்ற மாதம் அங்கு சென்றிருந்தபோது ஒரு பெரிய வீடு அளவுடைய அவருடைய அரண்மனை தரைமட்டமாகி, வேலி போடப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. மக்களைக் காப்பாற்றுவதுதான் மன்னரின் வேலை. மீண்டும் மீண்டும் கட்டப்பட்ட கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, ஆயிரக்கணக்கான உயிர்களையும் எடுத்துவிட்டு, நன்றாக விளைந்துகொண்டிருந்த மண்ணில் கருவேலம், காட்டாமணக்கு விதைகளை வீசிச் சென்றிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். <br />
<br />
சமகாலத்தில் இப்படி வீரப் போர் புரிந்து உயிரை விட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னொரு பகுதியில் இசையையும் நடனத்தையும் ரசித்துக்கொண்டு, ஆங்கிலேயர்களுக்குச் சலாம் போட்டுக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்கள் மன்னர்கள்! உண்மையில் பிரம்மாண்டமாக மனத்தில் உயர்ந்திருந்தது தரைமட்டமாகியிருந்த பாஞ்சாலங்குறிச்சியே!<br />
<br />
பாலில் மிதக்கும் ரஸமலாய் போல கேரளாவில் தண்ணீருக்கு நடுநடுவே நிலப்பகுதிகள் அமைந்திருக்கின்றன. ரயில் பயணமாக இருந்தாலும் சரி, பேருந்து பயணமாக இருந்தாலும் சரி, இயற்கைக் காட்சிகள் இமைக்க மறந்துவிடச் செய்கின்றன. ஆறுகள், கழிமுகங்களில் சுற்றுலாப்பயணிகள் வீசிய ஒன்றிரண்டு தண்ணீர் பாட்டில்களைத் தவிர, வேறு பிளாஸ்டிக் பைகளை எங்கேயும் பார்க்க முடியவில்லை! <br />
<br />
குமரகத்தில் பிரத்யேக கேரள உணவுகளைச் சாப்பிட்டோம். அதேபோல திருவனந்தபுரத்தில் எதிர்பார்த்ததில் ஏமாற்றமே. தமிழ்நாட்டு உணவுகள் கேரளாவை ஆக்கிரமித்து விட்டன. கண்ணை உறுத்தும் சுவர் விளம்பரங்களோ, பெரிய பெரிய ஃப்ளெக்ஸ்களோ, பிரம்மாண்ட போஸ்டர்களோ இல்லாதது ஆறுதலாக இருந்தது. விஜய், அஜித், சூர்யாவுக்கு நிறைய ரசிகர் மன்றங்கள் அங்கு இருந்தன. <br />
<br />
<br />
<br />
<br />
TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-77051355118373650872010-10-11T04:41:00.000-07:002010-10-11T04:44:27.772-07:00தமிழ் பேப்பர் : பெண் மனம் - 1ஐயோ, தாத்தா! இது என்ன கால் விரல்ல காயம்?’<br />
<br />
‘ ……….’<br />
<br />
‘தாத்தா, உங்களைத்தான் கேட்கறேன். கீழே விழுந்துட்டீங்களா?’<br />
<br />
‘இல்லம்மா. கோமளாவைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தேன். என்னைவிட ரொம்பச் சின்னவளா இருந்தும் ஒரு மரியாதை இல்லாம, ரெண்டு நிமிஷம் கழிச்சு நிதானமா வந்து என்னன்னு கேட்டா. வந்துச்சே பாரு ஒரு கோவம்! அப்படியே காலைத் தூக்கி ஒரு எத்து எத்தினேன்…’<br />
<br />
‘என்ன சொல்றீங்க தாத்தா! பாட்டி இறந்து 30 வருஷம் ஆச்சு!’<br />
‘ம்… கால் வலிச்சப்பறம்தான் தெரிஞ்சது நான் கண்டது சொப்பனம்னு. கட்டில் கம்பில நல்லா கால் இடிச்சிடுச்சு…’<br />
<br />
85 வயது தாத்தா. அவர் மனைவி இறந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அவர் கனவில் கூடத் தன் மனைவியை இப்படி நடத்தியிருக்கிறார் என்றால், அவர் உயிருடன் இருந்த காலங்களில் எப்படி இருந்திருப்பார்!<br />
<br />
*<br />
<br />
பூமியில் உள்ள உயிரினங்களை எல்லாம் அடக்கி ஆண்டுகொண்டிருப்பது மனித இனம். அறிவிலும் நாகரிகத்திலும் மேம்பட்ட இனமாக இருப்பதும் இந்த இனம்தான். இரண்டே வகை உள்ள இனம். அதில் ஒரு வகை இன்னொரு வகையை இரண்டாம் தரத்தில் வைத்திருக்கும் வேலையைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது பல்லாயிரம் ஆண்டுகளாக. பலர் சொல்லி போரடித்துப் போச்சென்று ஓரினம் தொடர்ந்து சொல்லும். எள்ளலும் துள்ளலும் நக்கலுமாக எகத்தாளமிடும். பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இனம் தோன்றிய நாளாக.<br />
<br />
இங்கு பெண்களுக்கு என்று தனியான சிந்தனைகள் இல்லை. செயல்கள் இல்லை. விருப்பங்கள் இல்லை. லட்சியங்கள் இல்லை. ஆசைகள் இல்லை. எல்லாமே காலம் காலமாக ஆண்களால் உருவாக்கப்பட்டவைதான். அடக்கமாக இருக்க வேண்டும். நிமிர்ந்து நடக்கக்கூடாது. உரக்கப் பேசக்கூடாது. சிரிக்கக்கூடாது.<br />
<br />
வசதியாக இல்லா விட்டாலும் பெண் என்றால் இப்படித்தான் உடை அணிய வேண்டும். இப்படித்தான் சிந்திக்க வேண்டும். இப்படித்தான் செயல்பட வேண்டும். குறிப்பாக, தங்களுக்குக் கீழாகத்தான் நடக்க வேண்டும் என்று ஆண்களின் ஜீனுக்குள் பொதிந்துகிடக்கும் அபிப்பிராயமே பொதுவான சமூகக் கருத்தாகவும் நிலவுகிறது.<br />
<br />
பெண்களைப் பற்றிய ஆண்களின் இத்தகைய மதிப்பீடுகள் அவர்களே உருவாக்கிய மதங்கள், சட்டங்கள், காப்பியங்கள், போதனைகள் மூலமாக வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு, பரப்பப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.<br />
பெண்கள் பிரச்னை என்பது உண்மையிலேயே உள்ளதுதானா? அத்தனை பெரிய பிரச்னையா? பெண்கள் எல்லோரும் அடிமையாகவா இருக்கிறார்கள்? எதில் இல்லை சுதந்தரம்? பெண்களே பெண்களுக்கு எதிரி?… இப்படிப்பட்ட கேள்விகளைத் தினமும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.<br />
<br />
பிரச்னை என்றபிறகு பெரிய பிரச்னை என்ன, சிறிய பிரச்னை என்ன? எல்லோரும் அடிமையாக இல்லாவிட்டாலும் பெரும்பாலும் அடிமைகளாக இருக்கத்தான் செய்கிறார்கள். அடிமைப்பட்டுக் கிடப்பவர்களுக்குத்தான் சுதந்தரத்தின் பொருள் புரியும்.<br />
<br />
‘ஒரு காலத்தில் பெண்களை அடக்கி வைத்திருந்தார்கள், சரி… இப்போதுதான் பெண்கள் படிக்கிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இதற்கு மேல் என்ன?’ என்று கேட்கிறார்கள்.<br />
<br />
படிப்பு, வேலை என்பதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு பகுதி என்பதை மறுக்க முடியாது. படிப்பு, வேலை இருப்பதாலேயே பிரச்னை தீர்ந்து விடும் என்றும் சொல்லிவிட முடியாது. பெண்களைச் சுற்றியுள்ள கூண்டுகளின் கம்பிகள் சற்றுத் தள்ளி நகர்ந்து போயிருக்கின்றன. அவ்வளவுதான்! உண்மையில் சுதந்தரத்தை நோக்கி பெண்கள் செல்லக்கூடிய தூரம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.<br />
<br />
பெண்கள் பிறக்கும்போதே சந்திக்கும் போராட்டம் அவள் வாழ்வின் இறுதி வரை தொடர்கிறது. ஏழைகள், பணக்காரர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், கிராமத்தில் இருப்பவர்கள், நகரத்தில் இருப்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், வீட்டிலிருப்பவர்கள் என்ற பேதங்கள் எல்லாம் பெண்கள் பிரச்னைகளுக்குக் கிடையாது.<br />
<br />
சுமார் 1650 ஆண்டுகளுக்கு முன்…<br />
<br />
பண்டைய எகிப்தில் அலெக்ஸாண்டிரியாவில் கி.பி. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஹைபேஷியா. கிரேக்கம், இத்தாலி, மத்திய தரைக்கடல் நாடுகளுக்குச் சென்று கற்றவர். இலக்கியம், கணிதம், தத்துவம், அறிவியல் போன்ற பல துறைகளில் தலைசிறந்தவராகத் திகழ்ந்தவர். அவரிடம் கல்வி கற்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்தனர். பண்டைய கணித நூல்களை எளிமைப்படுத்தி விளக்க உரைகள் எழுதினார். இவர் எழுதிய நூல்கள் பிற்காலத்தில் வந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தன.<br />
<br />
அறிவும் துணிவும் நிரம்பிய ஹைபேஷியா, ஆண்களைப் போலவே உடை அணிவார். தாமாகவே தேர் ஓட்டிச் செல்வார். எனவே, ஹைபேஷியாவை அன்றைய மதவெறியர்களுக்குப் பிடிக்கவில்லை. தேரில் வந்துகொண்டிருந்தவரை இழுத்து அடித்து உதைத்தனர். ஆடைகளைப் பிய்த்து எறிந்தனர். உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினர்.<br />
<div class="wp-caption alignleft" id="attachment_179" style="width: 233px;"><a href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2010/09/Hypatia_Raphael_Sanzio_detail.jpg" rel="lightbox[178]"><img alt="" class="size-full wp-image-179 " height="288" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2010/09/Hypatia_Raphael_Sanzio_detail.jpg" title="ஹைபேஷா" width="223" /></a><br />
<div class="wp-caption-text">ஹைபேஷியா [16ம்நூற்றாண்டு ஓவியம்</div></div><br />
போனது ஹைபேஷா என்ற உன்னதமான ஒரு பெண்ணின் உயிர் மட்டுமல்ல; உலகத்துக்குச் சொல்ல வேண்டிய எவ்வளவோ விஞ்ஞான ரகசியங்களும் கண்டுபிடிப்புகளும்தான்!<br />
<br />
சுமார் 1650 ஆண்டுகளுக்குப் பின் …<br />
<br />
1987. இந்தியாவில் உள்ள ராஜஸ்தான். 18 வயது இளம் பெண் ரூப் கன்வருக்கு மால் சிங் என்ற 24 வயது நபரைத் திருமணம் செய்த 8 மாதங்களில், கணவர் இறந்து போனார். ரூப் கன்வரின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் ஏற்கெனவே ஒழிக்கப்பட்ட ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறுதலை அரங்கேற்றி, தங்கள் கோர முகத்தை இன்னொரு முறை உலகத்துக்குக் காட்டிக்கொண்டனர். வேடிக்கை பார்க்க வந்த ஆயிரக்கணக்கானவர்களின் கண்களுக்கு எதிரே, காப்பாற்ற யாருமின்றி, கதறியபடியே ரூப் கன்வர் நெருப்பில் எரிந்து, கருகிப் போனார்.<br />
<br />
ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாகச் சாகடித்த பிறகு, ‘சதி மாதா’ என்று கொண்டாடும் உலகம் இது.<br />
<br />
இன்றைக்குச் சதி இல்லை. ஆணைப் போல் உடை அணிவதில் பிரச்னை இல்லை. இன்னும் பல இல்லைகள், மேலும் பல உண்டுகள். ஆணுக்கு நிகர் என்று ஆண்களில் சிலரேகூட எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடத் தயார்.<br />
<br />
அவ்வளவுதானா? எல்லாமே இருக்கிறதா? பெண்ணடிமைக் காலம் இப்போது / இனி இல்லையா? உண்மைதானா?<br />
<br />
இன்று பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகள் அனைத்தும் ஆண்களுக்கும் உண்டு. சந்தேகமில்லை. ஆனால் ஆண்களுக்கு இல்லாத ஒரு பிரச்னை பெண்ணுக்கு உண்டு. அதுதான் இன்னும் தன் ஆக்டோபஸ் கைகளால் இறுக்கமாக அழுத்திப் பிடித்து வைத்திருக்கிறது.<br />
<br />
அது…<br />
<br />
0<br />
<br />
தமிழ் பேப்பர் இணைய இதழில் நான் எழுதி வெளியாகும் <b>பெண் மனம்</b> தொடரின் முதல் அத்தியாயம் இது: <a href="http://www.tamilpaper.net/">இணைய இதழுக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.</a>TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-34257577278103730962010-09-12T23:48:00.000-07:002010-09-12T23:50:06.136-07:00வேண்டாம் அனுராதா...15 வயதில் திருமணமாகி, இரு குழந்தைகளுக்குத் தாயாகி, வரதட்சணை பிரச்னையில் விவாகரத்து பெற்றவர் அனுராதா. இன்சூரன்ஸ் ஏஜெண்டாக வேலை பார்த்த அனுராதாவை டாக்டர் மனோஜ் நட்பு ஏற்படுத்தி, மயக்க மருந்து கொடுத்து, போட்டோ எடுத்திருக்கிறான். பிறகு அதையே காரணம் காட்டி மிரட்டி, உறவு வைத்திருக்கிறான். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அவனுடன் குடும்பம் நடத்தியிருக்கிறார் அனுராதா. இருவருக்கும் அடிக்கடி பிரச்னைகள். போட்டோவை இணையத்தில் போட்டுவிடுவேன் என்று சொல்லியிருக்கிறான் மனோஜ். வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் அனுராதா. மனோஜ் கைது செய்யப்பட்டிருக்கிறான்.<br />
<br />
அவர் கொடுத்த புகாரில் மேலும் சில அதிர்ச்சிகள்:<br />
<br />
<b>மருத்துவமனையில் பிரசவ வார்டில் வேலையைக் கேட்டு வாங்கிக்கொள்வார். இரவு நேரங்களில்தான் பணிக்குச் செல்வார். பிரசவத்துக்கு வரும் பெண்கள் மயக்க நிலையில் இருக்கும்போது ஆபாசமாக வீடியோ எடுத்துவிடுவார். நானே அந்தப் படங்களைப் பார்த்துச் சண்டை போட்டிருக்கிறேன். </b><br />
<br />
<b>என்னுடைய மகனை அடித்து உதைத்து, கொடுமைப்படுத்துவார். என் பெற்றோரிடம் இருந்து என்னைப் பிரித்து விட்டார். </b><br />
<br />
இப்படி நடந்த விஷயங்களைத் தெளிவாக, பதற்றம் இல்லாமல் தொலைக்காட்சியில் சொல்லும்போது அனுராதாவின் தைரியத்தைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. கடவுளுக்கு அடுத்த நிலையில் நம் மக்கள் மருத்துவர்களைத்தான் நினைக்கிறார்கள். மருத்துவர் என்று வரும்போது அவர் ஆணா, பெண்ணா என்று பார்ப்பதில்லை. இப்படிப்பட்ட தொழிலைச் செய்யும் மருத்துவர் மனத்தில் இப்படியொரு கீழ்த்தரமான எண்ணம். அருவருப்பாக இருக்கிறது. <br />
<br />
அனுராதா தான் ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்த உடனேயே காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்க வேண்டும். மானம் போய் விடும் என்ற ஒரு காரணத்துக்காக ஒரு கேடுகெட்டவனோடு பல ஆண்டுகள் குடும்பம் நடத்தியிருக்கிறார். மிரட்டலுக்கு அடி பணிந்தால் அது என்றென்றைக்கும் இன்னும் பெரிய பிரச்னைகளுக்கு வழி வகுத்துக்கொண்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். <br />
<br />
காலம் கடந்தாவது சமூகத்தைச் சீரழிக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்த ஒருவனை, வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்திய அனுராதாவை பாராட்டத் தோன்றிய நேரத்தில், அவர் இன்னோர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டார்.<br />
<br />
“என்னை எப்படியாவது அவருக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு கேட்டிருக்கேன். இனிமேல் நான் எப்படி வாழ முடியும்?’<br />
<br />
அவருடைய வக்கீல் ஜீவகுமாரும், “பெண்கள் பெரும்பாலும் இப்படித்தான் விரும்புகிறார்கள். கல்யாணம் செய்து வைக்கச் சொல்லியிருக்கிறார் அனுராதா’ என்றார்.<br />
<br />
இது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்! தன்னையும் பிற பெண்களையும் கேவலமாகப் படம் எடுக்கும் வக்கிரப்புத்திக் கொண்டவனிடம் மீண்டும் சேர்ந்து வாழ்வது என்பது எவ்வளவு கேவலம்! அனுராதாவுக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எதிர்காலத்தில் அவனால் ஆபத்து வராது என்று என்ன நிச்சயம்? ஏற்கெனவே மகன் அவனால் துன்பப்பட்டிருக்கும்போது யாருக்காகச் சேர்ந்து வாழ நினைக்கிறார்? அனுராதா கொடுத்த இந்தப் புகாருக்கே மனோஜால் வெளி வர முடியாது எனும்போது, மருத்துவமனையில் அவன் எடுத்த வீடியோவால் வேலையே பறிபோகாதா? சாதாரணமாகவே சைக்கோவாக இருந்த மனோஜ், தான் தண்டனைக்கு உள்ளாகி, ஊர் முழுவதும் தெரிந்த பிறகு அனுராதாவை எப்படித் திருமணம் செய்துகொள்வான்?<br />
<br />
இதுபோன்ற கேள்விகளைக் கூட யோசிக்க விடாமல் ஊடகங்கள், சினிமாக்கள், சமூக அமைப்பு போன்றவை செயல்பட வைக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. கிராமத்து பஞ்சாயத்துகளும் சினிமாக்களும் கெடுத்தவனுக்கே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கும் அற்புதமான நீதியை அல்லவா வழங்கிக்கொண்டிருக்கின்றன! இங்கு தவறு செய்தவனுக்குப் பரிசும் பாதிக்கப்பட்டவளுக்குத் தண்டனையும் வழங்கும் வினோதமும் தொடர்கதையாக இருக்கின்றன. இப்படிப் பார்த்துப் பார்த்து வளரும் பெண்கள், பிரச்னைகளில் இருந்து வெளிவர நினைக்காமல், எப்படியாவது கணவன் திருந்தி, அவனுடன் வாழ மாட்டோமா என்றுதான் நினைக்கிறார்கள். சமூகப் பார்வை மாறும்வரை அனுராதாக்கள் மீண்டும் மீண்டும் புதைகுழியில் விழுந்துகொண்டுதான் இருப்பார்கள். <br />
<br />
TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-35180468226654314192010-09-06T01:45:00.000-07:002010-09-06T01:48:13.083-07:00ஹாஸ்டல் கதைகள் 3 : கன்னியர் தீவு!<a href="http://tamilsujatha.blogspot.com/2010/06/blog-post_24.html">ஹாஸ்டல் கதைகள் 1</a><br />
<a href="http://tamilsujatha.blogspot.com/2010/07/blog-post_09.html">ஹாஸ்டல் கதைகள் 2</a><br />
<br />
பெண்கள்... பெண்கள்... எங்கும் பெண்கள் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஓர் இடமாகத்தான் இருந்தது எங்கள் பள்ளி. சுமார் இரண்டாயிரம் பெண்கள் படிக்கும் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசியர்கள், உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள், வார்டன்கள் என்று அத்தனை பேரும் பெண்களாகவே இருந்தார்கள். மொத்தத்தில் அது ஒரு கன்னியர் தீவு!<br />
<br />
இதில் இரண்டே இரண்டு ஆண்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஒருவர் வாட்ச்மேன். கடுகடு ஆசாமி. எப்போதும் யாரையேனும் திட்டிக்கொண்டே இருப்பார். அவரைக் கண்டாலே அலறியடித்து ஒதுங்கிவிடுவார்கள். இன்னொருவர் அந்தோணி அண்ணன். பள்ளிக்குள் சிறிய கடை வைத்திருந்தார். கடையில் இல்லாத பொருள்களைக் கேட்டாலும் மறுநாளே வாங்கிக் கொடுத்து விடுவார். அன்பாகப் பேசுவார். <br />
<br />
பதின்ம வயதுப் பெண்களுக்கு இருக்கும் எதிர்பாலின ஈர்ப்பாலோ அல்லது ஹார்மோன்கள் அதிகம் சுரந்ததாலோ ஹாஸ்டல் அக்காக்களுக்கு ஆண்களைப் பற்றிப் பேசுவது என்றால் கொண்டாட்டமாக இருந்தது. <br />
<br />
“ மேரி, ஊர்ல இருந்து நான் பதினோரு மணி பஸ்ஸைப் பிடிக்க அம்மாவோட வந்துக்கிட்டிருந்தேன். சைக்கிள்ல வந்துக்கிட்டிருந்த டேவிட், திடீர்னு என்னைப் பார்த்து கண்ணடிச்சான். எனக்கு ஒரே படபடப்பா இருந்துச்சு. பஸ் ஏறி ஜன்னல் வழியா மெதுவா பார்த்தேன், டாடா காண்பிச்சான்... “<br />
<br />
“ அந்த மேலத் தெரு டேவிட்டா? அந்தச் சனியன் நான் ரெண்டரை மணி பஸ் பிடிக்க வந்தப்ப என்னைப் பார்த்தும் கண்ணடிச்சான், கை ஆட்டினான்... நான் நல்லா வஞ்சுப்புட்டேன்...’<br />
<br />
“நெசமாத்தான் சொல்றீயா மேரி?’<br />
<br />
“இல்ல. உன் மேல உள்ள பொறாமையில அவனைப் பத்திச் சொன்னேன். கனவுல மிதக்காம கணக்குப் போடற வழியைப் பாருடி...’<br />
<br />
இப்படித் தங்களைப் பாதித்த விஷயங்களையும் ஊரில் பார்த்த, கேட்ட காதல் கதைகளையும் அலுக்காமல் பேசிக்கொண்டிருப்பார்கள். (வேறு என்னதான் செய்ய முடியும்? பாடப் புத்தகங்கள், பைபிள் தவிர வேறு புத்தகங்களுக்கு அனுமதி இல்லை. படிப்பு, பிரார்த்தனை தவிர்த்து கிடைக்கும் நேரங்களில் இப்படிப் பேசித்தான் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியிருந்தது!)<br />
<br />
இந்தச் சிறை வாழ்க்கையில் வாரம் ஒருமுறை மட்டும் நான்கு மணி நேரம் விடுதலை கிடைக்கும். அது ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்குப் போகும் நேரம். அன்று மட்டும் எல்லோருக்கும் கூடுதல் சுறுசுறுப்பு வந்து விடும். ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிப்பார்கள். அன்று மட்டும் எப்படி வேண்டுமானாலும் தலை வாரிக்கொள்ளலாம். பளிச் நிறங்களில் உடைகள் அணிவார்கள். சர்ச்சுக்குச் செல்லாத மாணவிகளிடமிருந்து பாவாடை, தாவணி எல்லாம் இரவல் வாங்கிக்கொள்வார்கள். இத்தனை நாள் நாம் பார்த்தவர்களா இவர்கள் என்று நினைக்கும் அளவுக்கு வசீகரிப்பார்கள்.<br />
காற்றில் அலையும் கூந்தலுடன் இடது கையில் பைபிளைப் பிடித்தபடி அவர்கள் செல்வதைப் பார்க்கும் போது பாரதிராஜா ஹீரோயின்கள் போல இருக்கும்! இரண்டு வரிசைகளாகச் செல்வார்கள். தெருக்கள், வீட்டு ஜன்னல்கள், மாடிகளில் இருந்து இளைஞர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள்! வரிசையில் செல்லும் ஒவ்வொருவரும் தன்னைத்தான் பார்ப்பதாக நினைத்து, சந்தோஷமடைவார்கள். கூட்டத்தில் தன்னை மட்டும் தனித்துக் காட்ட நினைக்கும் பெண்கள், வரிசையை விட்டு விலகி, “ஏய், ஒழுங்காகப் போங்க’ என்று குரல் கொடுப்பார்கள்.<br />
<br />
அடுத்த ஞாயிறு வரை பச்சை சட்டைக்காரன், ஒட்டடக்குச்சி, குண்டு பூசணி என்று ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் வைத்து, இதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள்.<br />
<br />
ஆண்கள் இல்லாத பாலைவனமாக இருந்த ஹாஸ்டல் வாழ்க்கையில், திடீரென்று ஒரு சோலை பூத்தது. தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்துக்குள்ளேயே குடி வந்து விட்டார். அவருக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். மூன்று பேருமே உயர் கல்விக்காக வெளியூர்களில் படித்து வந்தார்கள். <br />
<br />
தலைமை ஆசிரியரின் நெருங்கிய உறவினர்களின் பெண்களும் ஹாஸ்டலில் இருந்தார்கள். ஆனால் உறவினர் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் தலைமை ஆசிரியர் சிறிய சலுகைக்கூட காட்ட மாட்டார். அதேசமயம் உறவினர்கள் யாராவது சிறிய தவறு செய்தாலும் பெரிய அளவில் தண்டனை கொடுத்து விடுவார். அவ்வளவு கண்டிப்பானவர். <br />
<br />
ஒருநாள் ஜீன்ஸ், டிஷர்ட் அணிந்து, தோளில் ஒரு பையுடன் ஸ்டைலாக ஓர் இளைஞர் பள்ளி மைதானத்துக்குள் வந்துகொண்டிருந்தார். யார் அவர்? எல்லோரும் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். <br />
<br />
“கனி, ஜான் வர்றாங்க... ஜான்...’ என்று பதற்றத்தோடு ஓடி வந்தார் ரத்னா அக்கா.<br />
<br />
“ஜான் மட்டும் இல்லை, பின்னாலேயே பெரியம்மாவும் வர்றாங்க...’ என்று கனிமொழி சொன்னதும் ரத்னாவின் முகம் வாடிவிட்டது.<br />
<br />
இருவரும் வீட்டுக்குள் சென்று விட்டார்கள்.<br />
<br />
“ காலேஜ் போனதும் ஜான் ரொம்ப ஸ்மார்ட்டா ஆயிட்டாங்க இல்ல! நான் நல்லா மேட்ச் ஆவேனா கனி?’ என்று கேட்டார் ரத்னா.<br />
<br />
“ஜான் உனக்கு மட்டும் அத்தை மகன் இல்ல. ரீட்டா, பிரின்ஸி கூட முறைப் பெண்கள்தான் ஞாபகம் வச்சுக்க. என் அண்ணன் மனசுல எவ இருக்காளோ’ என்றார் கனிமொழி.<br />
<br />
“எனக்குத்தான் சொந்த அத்தை மகன்... எவளும் என் கூடப் போட்டிப் போட முடியாது...’ <br />
<br />
ஹாஸ்டலுக்கு அருகில் இருந்த தலைமை ஆசிரியர் வீட்டுப் பக்கம் வேண்டுமென்றே மாணவிகள் அடிக்கடிச் செல்வார்கள். ஜன்னல் வழியாக ஜானின் தலை தெரியாதா, தோட்டத்தில் வந்து அமர மாட்டாரா என்று ஏங்குவார்கள். ஆனால் ஒருநாளும் ஜான் யாருக்கும் தரிசனம் தரவில்லை.<br />
<br />
அன்று வெளியில் சென்றிருந்த ஜான் பள்ளிக்குள் நுழைந்தார். தலைமை ஆசிரியர் வெளியே போயிருந்த தைரியத்தில் பெண்கள் அவர் கவனத்தைப் பெற நினைத்தார்கள். கொலுசை ஆட்டினார்கள். சத்தம் போட்டுப் பேசினார்கள். ரத்னா அக்கா கொஞ்சம் தைரியமாக இரண்டடி இடைவெளியில் ஜான் கூடவே நடந்து வந்தார். ம்ஹும்... குனிந்த தலை நிமிரவே இல்லை ஜான். எந்த விஷயமும் அவரை அன்னிச்சையாகக் கூடத் திரும்பிப் பார்க்க வைக்கவில்லை! அத்தனைப் பெரிய மைதானத்தையும் கடந்து, வீட்டுக்குள் புகுந்துவிட்டார்.<br />
<br />
“என்னங்கடி! என் அண்ணன் கிட்ட உங்க பாச்சா எல்லாம் பலிக்காது. அண்ணன் மேல வச்சிருக்கிற நம்பிக்கையாலதானே பெரியம்மா இங்கே குடி வந்திருக்காங்க! இது கூடத் தெரியாமல் என்னவெல்லாம் பண்ணறீங்கடி! போங்க... போய் தனியா உட்காந்து கனவு காணுங்க...’ என்றார் கனிமொழி.<br />
<br />
மாலை ஹாஸ்டல் பக்கமாக வந்தார் தலைமை ஆசிரியர். ரத்னாவைப் பார்த்து, “ என்ன போன மாதத் தேர்வுல மார்க் எல்லாம் குறைஞ்சிருச்சு போல. ஒழுங்கா படிப்புல மட்டும் கவனம் செலுத்து...’ என்று சொல்லிவிட்டுப் போனார்.<br />
<br />
“நான் ஜான் கூட நடந்து வந்ததை வாட்ச்மேன் போட்டுக்கொடுத்துருச்சு போல...’ என்று ரத்னா பல்லைக் கடித்தார்.TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-24885253075535347932010-08-16T00:00:00.000-07:002010-08-16T00:05:45.423-07:002020ல் இந்தியாவும் மாணவர்களின் கனவும்· இந்தியா வல்லரசு ஆகியிருக்கும். கூரை வீடுகளே இருக்காது. அனைவரும் மாடி வீடுகளில் குடியிருப்பார்கள். <br />
· நான் எஞ்சினியராகி இந்தியாவின் கடனை அடைப்பேன். பிறகு இந்தியாவை உயர்த்துவேன்!<br />
· இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் முறியடிக்கப்பட்டிருக்கும்.<br />
· அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.<br />
· பெண்கள் சமமாக நடத்தப்படுவார்கள். வரதட்சணை ஒழிக்கப்பட்டிருக்கும். (மாணவிகள் மட்டுமே இந்தப் பிரச்னைகளைக் குறிப்பிட்டிருந்தனர்)<br />
· இந்தியா பசுஞ்சோலையாக மாறியிருக்கும்.<br />
· இன்று இலங்கை தமிழர்களைப் பாத்துக்கொண்டு சும்மா இருப்பது போன்ற நிலை இருக்காது. தமிழர்கள் தலை நிமிர்ந்திருப்பார்கள்.<br />
· மக்கள் தொகையில் நாம் சீனாவை முந்தியிருப்போம்!<br />
· இன்று ஒரு காபி ரூ.10. தங்கம் ஒரு பவுன் ரூ. 15,000. 2020-ல் இன்னும் பொருளாதாரம் வளர்ந்து கற்பனைக்கு எட்டாத அளவுக்குச் சென்று விடும். (ஐயோ விலை ஏற்றத்தை பொருளாதார வளர்ச்சி என்று நினைத்துவிட்டார்களே!) <br />
· பாகிஸ்தான் அடக்கப்பட்டிருக்கும். <br />
· சீனாவின் வளர்ச்சியோடு இந்தியா சரிசமமாகப் போட்டியிடும்.<br />
· எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்கும்.<br />
· வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பியிருப்பார்கள்!<br />
· நல்ல அரசியல்வாதிகள் உருவாகியிருப்பார்கள்.<br />
<br />
இவை எல்லாம் மாணவர்கள் சொன்ன சில கருத்துகள்.<br />
<br />
பூம்புகார் பள்ளியில் ’இந்தியா 2020 என் கனவு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி 6 முதல் 12-ம் வகுப்பு வரை நடத்தப்பட்டது. பரிசுக்கான கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வகுப்பு வாரியாகப் போட்டி நடத்தப்பட்டிருந்தாலும் மாணவர்களின் சிந்தனையில் பெரிய மாற்றம் இல்லை என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஆறாம் வகுப்புக்கும் பன்னிரண்டாம் வகுப்புக்கும் இடையே மொழியில், விரிவாக எழுதுவதில் வித்தியாசம் இருந்ததே தவிர, அவர்கள் சொன்ன விஷங்களில் மாற்றம் இல்லை!<br />
<br />
அப்துல் கலாம், புவி வெப்பம், மக்கள் தொகை கட்டுப்பாடு, வேலை வாய்ப்பு, கல்வி போன்ற விஷயங்களைச் சுமார் 80 சதவிகித கட்டுரைகளில் காண முடிந்தது. 100 சதவிகிதம் இருந்த ஒரு விஷயம் ’வல்லரசு’. வல்லரசு என்றால் அனைவரும் மாடி வீட்டில் வசிப்பது என்று பெரும்பாலும் குறிப்பிட்டிருந்தனர். யார் கொடுத்த விளக்கமோ தெரியவில்லை!TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-10414788489223381992010-07-09T01:35:00.000-07:002010-07-10T00:03:18.408-07:00ஹாஸ்டல் கதைகள் - 2 : வசந்தி அக்கா!<span style="background-color: red;"></span>திருட்டு. இந்த வார்த்தைக்கு அர்த்தம் ஹாஸ்டலில்தான் தெரிந்தது. நான் ஹாஸ்டலில் சேர்ந்த மூன்றாம் நாளே சிவப்பு நிறப் புது பிளாஸ்டிக் வாளி காணாமல் போனது. வாளி இல்லாமல் என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. யாரிடம் கேட்பது, எப்படிக் கண்டுபிடிப்பது? கனிமொழி அக்காவிடம் சென்றேன். அவர்தான் சேர்ந்த அன்றிலிருந்து என்னிடம் நட்பு வைத்திருப்பவர். <br />
<br />
’பள்ளிக்கூடம் திறந்ததுமே ஆரம்பிச்சிட்டாளுகளா? வா, நான் கண்டுபிடிக்கிறேன்’ என்று அழைத்துப் போனார். <br />
<br />
அங்கு என்னுடைய வாளியைப் போல நான்கு வாளிகள் இருந்தன. நான்கு புது வாளிகள். அதில் மூன்று வாளிகளின் அடியில் பெயிண்ட் மூலம் பெயர் எழுதப்பட்டிருந்தது. கடைசியில் இருந்தது ஒரு வாளி. அடையாளம் எதுவும் இருந்தால் சொல்லச் சொன்னார் கனிமொழி. இப்படி எல்லாம் நடக்கும் என்பதை நான் நினைத்துக்கூடப் பார்க்காததால் வாளியை அவ்வளவு துல்லியமாக கவனித்திருக்கவில்லை. எடுத்தவள் சாதாரணமாக நிற்க, தொலைத்தவள் திருதிருவென்று நின்றேன். கனிமொழிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. <br />
<br />
’என்ன கூட்டம்?’ என்று கேட்டபடி இன்பா அக்கா வந்தார்.<br />
<br />
விஷயத்தை அறிந்தவர், “மாதவி உன் கிட்ட பக்கெட் இல்லைன்னுதானே நேத்து மேரி கிட்ட வாங்கிட்டுப் போனே? அதுக்குள்ள எப்படி பக்கெட் வாங்கினே?’<br />
<br />
’டேஸ்காலர் பிள்ளை கிட்ட சொல்லி வாங்கிட்டு வந்தேன். அவளோட பக்கெட்டுன்னு அடையாளம் சொல்லச் சொல்லு பார்க்கலாம்!’ என்றாள் மாதவி.<br />
<br />
கண் முன்னே வாளி இருந்தும் என்னிடம் நிரூபிக்க முடியவில்லை. <br />
<br />
பேனா, பென்சில், ரப்பர், உள்ளாடைகள், பணம் என்று திருட்டுப் போகாத பொருள்களே இல்லை என்பது அன்றுதான் தெரிந்தது. பொருள்களில் பெயர் எழுதி வைப்பது, பணத்தை வார்டனிடம் கொடுத்து வைப்பது, உள்ளாடைகளை உள்ளுக்குள் போட்டு, அதன் மீது பாவாடை, தாவணியைக் காய வைக்கும் உத்தி எல்லாம் பிறகு கற்றுக்கொண்டேன். <br />
<br />
இப்படி அவ்வப்போது யாருக்காவது பொருள்கள் காணாமல் போவது தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் விஷயம் பெரிதாகவில்லை.<br />
<br />
**<br />
<br />
வசந்தி கிறிஸ்டிபாய். பெயரைப் போலவே அவரும் வசீகரிப்பார். நானும் அவரும் ஒரே ஊர் என்பது நான் ஹாஸ்டலுக்கு வந்து ஒருமாதம் கழிந்தபிறகுதான் தெரிந்தது. அதற்குள் நான் கனிமொழியின் அன்புப் பிடியில் சிக்கி விட்டேன். அதனால் நான் அவருடன் நெருக்கமாக முடியவில்லை. ஆனால் அவரே வந்து என்னை அடிக்கடி விசாரிப்பார். ஊருக்குப் போகும்போது பத்திரமாக அழைத்துச் செல்வார். சீனியர் மாணவியாக இருந்தாலும் ஜூனியர் மாணவிகளிடம் அன்புடன் பழகுவதால் வசந்தியை எல்லோருக்கும் பிடிக்கும். <br />
<br />
நன்றாகப் படிப்பார். அழகாக உடுத்துவார். தெரிந்தவர், தெரியாதவர் பார்க்காமல் உதவி செய்வார். பேஸ்கட் பால் கேப்டனாக இருந்தார். ஹாஸ்டல் தலைவிகளில் ஒருவர். வார்டன், ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவி. அவருடன் படித்தவர்களுக்கு அன்புத் தோழி. விடுதியில் இருந்த என்னைப் போன்ற ஏராளமான ஜூனியர் மாணவிகளுக்கு வசந்தி கிறிஸ்டி பாய் ஒரு ரோல் மாடல். <br />
<br />
அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். பார்க்க வந்தவர்கள் உணவு கொண்டு வந்திருந்தால் அன்று விடுதியில் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. வசந்தி அக்காவின் குழுதான் அந்த வாரம் பரிமாற வேண்டும்.சந்தோஷமாக வந்தார் வசந்தி. வார்டனிடம், ’எங்க அண்ணன் சாப்பாடு கொண்டு வந்திருக்காங்க. பரிமாறிட்டு மட்டும் போயிடறேன்’என்றார். வார்டன் சிரித்துக்கொண்டே தலையசைத்தார். <br />
<br />
தன் பொறுப்பை மற்றவர்கள் போலத் தட்டிக் கழிக்காத அவருடைய நடத்தை, அவர் மீது இன்னும் கொஞ்சம் மதிப்பை உயர்த்தியது. வசந்தி அக்காவிடம் படிக்கப் போகும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டேன்!(ஆசிரியராவதுதான் அவர் விருப்பம்.)<br />
<br />
மாலை நான்கு மணிக்கு ஹாஸ்டலில் ஏதோ சலசலப்பு. விஷயம் ஒன்றும் புரியவில்லை. சிலுவைச் செல்வி, அமுதாவுடன் நான் மைதானத்துக்குச் சென்று விட்டேன். மீண்டும் ஐந்து மணிக்குத் திரும்பினோம். கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அமுதா விசாரித்துவிட்டு வந்தாள்.<br />
<br />
’இன்னிக்கு வாங்கிட்டு வந்த ஃப்ரான்ஸ்சிஸ்காவோட புதுச் செருப்பைக் காணோமாம்’ என்றாள் எங்களிடம்.<br />
<br />
’சரி, ஒரு செருப்புக் காணோம்னா இப்படியா ஹாஸ்டலே பரபரப்பாகும்?’<br />
<br />
’செருப்புக் காணோம்ங்கிறதுக்காக பரபரப்பாகலை சுஜா. செருப்பை எடுத்தவங்கன்னு அவ சொல்றவங்களாலதான் பரபரப்பு...’<br />
<br />
’யாருப்பா?’<br />
<br />
’யார் கிட்டேயும் சொல்ல வேணாம், செருப்பு உனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யறேன்னு வார்டன் சொன்னதால பேரைச் சொல்லல. ஆனால் பிளஸ் டூ படிக்கறவங்கதான் எடுத்திருக்காங்கன்னு மத்தவங்க சொல்றாங்க... ’<br />
<br />
’ஃப்ரான்சிஸ்கா அடிச்சுப் பேசறதைப் பார்த்தா அவ பொய் சொல்லற மாதிரி இல்லை...’<br />
<br />
’வார்டன் ஃப்ரான்சிஸ்காவையும் அவ குற்றம் சொல்றவங்களையும் தனியா வச்சு விசாரிச்சிருக்காங்க. இவ பெட்டியைத் திறந்து காட்டச் சொன்னாளாம். ஆனா அவங்க மாட்டேன்னு சாதிச்சிட்டாங்களாம்...’<br />
<br />
உணவுக்காக மணி அடித்தது. அமைதியாகச் சாப்பிட்டோம். சிறப்புப் பிரார்த்தனைக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. மீண்டும் செருப்பு விஷயம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. <br />
<br />
’குரூப் லீடரா இருக்கறவங்கள்ள ஒருத்தர் தானாம் சுஜா!’<br />
<br />
’குரூப் லீடரா...? வசந்தி அக்காவா இருக்கக் கூடாது!’<br />
<br />
’நானும் அதைத்தான் ஜீசஸ் கிட்ட ஜெபிக்கிறேன்...’ என்றாள் சிலுவைச் செல்வி.<br />
<br />
பிரார்த்தனைக்காக மணி அடிக்கப்பட்டது. வாய் மட்டும் கூட்டத்தோடு சேர்ந்து பாடியது. அவர்கள் பேசிய எந்த விஷயமும் காதில் விழுந்ததே தவிர, மனத்தில் பதியவில்லை. திருட்டு என்ற சொல்லைக் கூட மனம் ஏற்கவில்லை. யார் எடுத்திருப்பார்கள் என்று யோசனையில் இருந்தேன். எப்படியோ கூட்டம் முடிந்தது. படுப்பதற்குப் போர்வை, தலையணை எடுப்பதற்காக அறைக்குத் திரும்பினோம். ஃபிரான்சிஸ்கா சந்தோஷத்துடன் செருப்பைக் காட்டி, தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள். <br />
<br />
’நல்லவேளை, யாருன்னு வெளியில் தெரியாமலே செருப்பு கிடைச்சது’ என்று பெருமூச்சு விட்டபடி படுக்கை அறை நோக்கி நடந்தேன். வழியில் கனிமொழி அக்காவைப் பார்த்தேன். <br />
<br />
’சுஜா, விஷயம் தெரியுமா?’<br />
<br />
’என்னக்கா?’<br />
<br />
’செருப்பை எடுத்தது...’ என்று கிசுகிசுப்பாகச் சொல்ல வந்தார்.<br />
<br />
’வேண்டாம்... அதான் கிடைச்சிருச்சே...விட்டுடுங்க...!’<br />
<br />
<div style="background-color: #ffd966;"><a href="http://tamilsujatha.blogspot.com/2010/06/blog-post_24.html">ஹாஸ்டல் கதைகள் - 1</a></div>TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-51469149015415542862010-07-02T03:06:00.000-07:002010-07-02T03:06:14.645-07:00சந்தோஷ்ஆ... ஐயோ... <br />
<br />
என்ன ஆச்சு?<br />
<br />
மெதுவாகக் கண் விழித்துப் பார்த்தார் பிருந்தா. <br />
<br />
“இந்தப் பொண்ணு கண் முழிச்சிருச்சு’ என்று அருகில் இருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்த பெண், மீண்டும் பிருந்தாவைப் பார்த்தார். <br />
<br />
“எமன் மாதிரி வந்த அந்த லாரி இடிச்சுப்புட்டு நிக்காம போயிட்டான். இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது’ என்று என்றார்.<br />
<br />
சற்றுத் தூரத்தில் ராஜாவின் முனகல் கேட்டது. மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தார் பிருந்தா. கண்களை மூடிக்கொண்டு வலியால் துடித்துக்கொண்டிருந்தார். கையை ஊன்றி வேகமாக உட்கார முயற்சி செய்யும்போதுதான் தெரிந்தது, அவருடைய இடது கை முட்டி உடைந்திருந்தது.ராஜாவுக்குக் கால் முட்டி உடைந்திருந்தது. <br />
<br />
’கடவுளே, இந்தச் சந்தர்ப்பத்திலாவது என்னைக் காப்பாற்று’ என்று தனக்குள் நினைத்தபடி பிருந்தாவின் கண்கள் அங்கும் இங்கும் தேடின. <br />
<br />
’என்னம்மா உன் குழந்தையையா தேடற? கடவுள் புண்ணியத்துல அவனுக்கு ஒண்ணும் ஆகல. சின்னச் சிராய்ப்புத்தான்... நீ கவ... ’ <br />
<br />
’ஐயோ... கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கற? நான் வேண்டாத நேரம் இல்லையே...’ <br />
<br />
வெடித்து அழுதார் பிருந்தா. <br />
<br />
சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. <br />
<br />
**<br />
<br />
’சந்தோஷ், அப்பா ஆபிஸ் போயிட்டு வரேன். பை!’ <br />
... <br />
<br />
’சந்தோஷ் குட்டி, உனக்கு கார்ட்டூன் சானல் வைக்கட்டுமா?’<br />
...<br />
<br />
’தம்பி சமர்த்தா டிவி பார்ப்பானாம். அம்மா சமைச்சிட்டு வந்துடுவேனாம்...’<br />
...<br />
<br />
’சந்தோஷ் அம்மாவைக் கூப்பிடு... ரெண்டு பேருக்கும் கதை சொல்றேன்!’<br />
... <br />
<br />
இப்படி பிருந்தா, ராஜாவின் குரல்கள் மட்டுமே அந்த வீட்டில் கேட்கும். யார் சந்தோஷ்? அவன் எப்படி இருப்பான்? கேட்கவும் தயக்கமாக இருந்தது.<br />
<br />
ஒரு வாரத்துக்குப் பிறகு பிருந்தா தயங்கித் தயங்கி வந்தார். <br />
<br />
“வீட்ல யாரும் இல்லையே?’<br />
<br />
“இல்ல... என்ன சொல்லுங்க?’<br />
<br />
“எனக்கு ஒரு உதவி... கொஞ்சம் வர்றீங்களா?’<br />
<br />
போனேன்.<br />
<br />
ஹாலில் வெள்ளைவெளேரென்று ஒல்லியான, உயரமான உருவம் ஒன்று படுத்திருந்தது. <br />
<br />
“சந்தோஷ் ஆன்ட்டிக்கு வணக்கம் சொல்லு...’<br />
... <br />
<br />
’இவன் எங்க பையன். பதிமூணு வயசாச்சு. பிறக்கும்போதே இப்படித்தான் இருந்தான். என்னென்னவோ காரணம் சொன்னாங்க. பார்க்காத வைத்தியம் இல்லை. பேச முடியாது. எதையும் புரிஞ்சுக்க முடியாது. நடக்க முடியாது. அசைய முடியாது. கண்ணை மட்டும் சுத்திச் சுத்திப் பார்ப்பான். தினமும் குளிக்க ஊத்தணும். இல்லைன்னா புண் வந்துரும். இவங்க அப்பா ஊருக்குப் போயிருக்கார். தனியா ஊத்த முடியாது. நீங்க தண்ணி ஊத்தினா போதும். மத்ததை நான் பார்த்துக்குவேன்...’<br />
<br />
“என்னங்க இதுக்கு இவ்வளவு தயக்கமா?’<br />
<br />
இருவரும் சந்தோஷைக் குளிப்பாட்டினோம்.<br />
<br />
உடல் முழுவதும் பவுடர் போட்டு, அழகாக டிரஸ் செய்து, மீண்டும் படுக்கையில் கிடத்தப்பட்டான் சந்தோஷ். <br />
<br />
’ஆன்ட்டிக்கு தேங்க்ஸ் சொல்லு சந்தோஷ்!’<br />
<br />
... <br />
<br />
’ரொம்பக் கஷ்டமா இருக்கு...’<br />
<br />
“குழந்தை ஊனமாவோ, மூளை வளர்ச்சி இல்லாமலோ இருந்தால் கூடப் பரவாயில்லை. உயிர் மட்டும் இருக்கற ஒரு பொம்மையா இருக்கறது ரொம்பக் கொடுமை. கிட்டத்தட்ட நானும் அவரும் இவனை மாதிரிதான் வாழ்ந்துட்டிருக்கோம். பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு நாங்க சந்தோஷமா வெளியில போய். நல்லது, கெட்டது எதுக்கும் போறதில்லை. சம்பாதித்ததை எல்லாம் செலவு பண்ணிப் பார்த்துட்டோம். கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை.’<br />
<br />
“சந்தோஷ், ஆன்ட்டிக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்...’<br />
<br />
“சந்தோஷ் என்ன சாப்பிடுவான்?’<br />
<br />
“எதையும் மிக்ஸியில் அரைச்சு கூழ் மாதிரி ஊட்டணும். நம்மளா பார்த்து தண்ணி கொடுக்கணும். பிறந்த குழந்தைக்கு மாதிரி ஆச்சா, மூச்சா எல்லாம் சுத்தம் பண்ணனும்...’<br />
<br />
எனக்குப் பேச்சு வரவில்லை.<br />
<br />
“இவ்வளவு பிரச்னை இருக்கறதாலவோ என்னவோ காய்ச்சல், சளி மாதிரியான தொந்தரவு எல்லாம் சந்தோஷுக்கு வர்றதில்லை. மருத்துவத்துலதான் சரியாகலை. எங்க பிரார்த்தனையிலாவது சரியாகுமான்னு யார் என்ன சொன்னாலும் செஞ்சிட்டிருந்தோம். இப்ப ரெண்டு வருஷாமா அதையும் விட்டுட்டோம்...’<br />
<br />
“உங்க மாமியார், அம்மா யாரையாவது உதவிக்கு வச்சுக்கலாமே?<br />
<br />
“அவங்க வந்தாங்கன்னா இன்னொரு குழந்தை பெத்துக்கச் சொல்லி ஒரே தொந்தரவு. நீங்களே சொல்லுங்க, அந்தக் குழந்தையும் இவனை மாதிரி பொறந்தான்னா நான் என்ன பண்ணறது? இவங்களுக்கு அது புரிய மாட்டேங்குது...’<br />
<br />
“உங்க கையில் என்ன தழும்பு?’<br />
<br />
“அதை ஏன் கேட்கறீங்க? ரெண்டு வருஷத்துக்கு முன்னால பழனியில் வேண்டுதலை முடிச்சிட்டு, காரில் திரும்பி வந்தோம். அப்ப ஒரு ஆக்சிடெண்ட். எனக்குக் கை முட்டி உடைஞ்சிருச்சு. அவருக்குக் கால் முட்டி. அந்த விபத்துல குழந்தைக்கு ஏதாவது ஆயிருக்கணும்னு வேண்டிக்கிட்டே திரும்பிப் பார்த்தேன். சின்னச் சிராய்ப்போட குழந்தை அப்படியே இருந்தான்...!’TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-4867117938594552602010-06-25T22:56:00.000-07:002010-06-28T01:14:37.332-07:00ரசிக்க... சிரிக்க...தினமும் இரண்டு முறை செல்லும் வழிதான். ஆனாலும் கடந்த ஒரு வாரமாக சுவாரசியம் கூட்டுகிறது. பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அவசர அவசரமாகப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதில் சிலர் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். சில பெயர்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன; சில பெயர்கள் சிரிக்கும்படியாக இருக்கின்றன! <br />
<br />
நேஷனல் மட்கலன் - National Ceramics<br />
சிவா வணிகம் நடுவம் - Siva Enterprises<br />
குமார் வன்பொருளகம் - Kumar Hardwares<br />
ரவீஸ் வெதுப்பகம் - Ravees Cakes<br />
குமார் அடுமனை - Kumar Bakery<br />
மை லேடி தேடல் - My lady’s choice <br />
எஸ்.டி. தூதஞ்சல் - S.T. Courier<br />
ஸ்ரீ தேவி தானியங்கி - Sridevi Automobiles<br />
ராஜ் தொலைபேசி நடுவன் - Raj Telephone Centre<br />
ஏ.கே. முகவாண்மை - A. K. Agencies<br />
பி.கே. வீட்டுக் குழுமம் - B.K. Housing Group<br />
சந்திரன் ஒட்டும் பலகைகள் - Chandran Plywoods<br />
அன்பு மின்பொருளகம் & வன்பொருளகம் - Anbu Electricals & Hardwares<br />
மன்னா இனிப்புகள், வெதுப்பகம், நொறுவைகள் - Manna Sweets, Cakes, Snacks<br />
கேக் அலைகள் - Cake Waves<br />
சிவா குளிர் பான அருந்தகம் - Siva Coolbar<br />
புஷ்பக் அணிகலன்கள் - Pushpak Jeweller<br />
ஜோதி நறுமணப் பொருள்கள் - Jothi CosmeticsTAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-51513080607135580892010-06-24T01:51:00.000-07:002010-07-10T00:04:23.629-07:00ஹாஸ்டல் கதைகள் - 1 : எஸ்தருக்கு இறங்கி வந்த ஏசு!ஹாஸ்டலில் எல்லோருக்கும் தெரிந்த பெயர் எஸ்தர். ஆறாம் வகுப்பில் இருந்து ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருக்கிறாள். நான் சேர்ந்த அன்றே அவளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு வந்தது. இரவு உணவுக்காக எல்லோரும் அமர்ந்திருந்தோம். உணவு பரிமாறி, பிரார்த்தனை முடியும் வரை யாரும் தட்டில் கை வைக்கக்கூடாது. ஆனால் பிரார்த்தனைக்கு முன்பே சாப்பிட்டு, தண்டனையாக நின்றுகொண்டிருந்தாள் எஸ்தர். அத்தனைப் பேர் மத்தியில் ஒருத்திக்குத் தண்டனை எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்குக் கவலையாக இருந்தது. <br />
<br />
மறுநாள் காலை உணவு வேளை. முதலில் இட்லி பரிமாறப்பட்டது. ஆறிப் போய், புளிப்பேறியிருந்த இட்லியின் வாசம் குடலைப் புரட்டியது. ஆனால் சற்றுத் தூரத்தில் அமர்ந்திருந்த எஸ்தர் தட்டு நிறைய இட்லிகளை வாங்கியிருந்தாள். சுவையான கேக்கைச் சாப்பிடும் பாவத்தில் இட்லிகளைப் பிட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள். சட்னி வரும்போது அவள் தட்டில் இரண்டே இட்லிகள்தான் இருந்தன. பிரார்த்தனை முடிவதற்குள் இன்னும் ஓர் இட்லி மாயமானது. அங்கு வந்த வார்டன், எஸ்தரை எழுந்து நிற்கச் சொன்னார்.<br />
<br />
’நீயெல்லாம் ஒரு கிறிஸ்துவப் பெண்ணா? எல்லோரும் பிரேயர் முடிகிறவரை காத்திருக்காங்க. உனக்கென்ன? ஒழுங்கீனம்... ஒழுங்கீனம்... உன்னைப் பார்த்து மத்த பிள்ளைகளும் கெட்டுப் போகும்’ என்று திட்டினார்.<br />
<br />
எதையும் காதில் வாங்காத எஸ்தர் நின்றுகொண்டே பிரார்த்தனை முடித்து, அடுத்த ஒரு நிமிடத்துக்குள் மீதி இருந்த இட்லியைக் காலி செய்துவிட்டு, முதல் ஆளாக வெளியேறினாள்.<br />
<br />
இப்படிச் சாப்பிடும் இடம், தூங்கும் இடம், பிரார்த்தனை நேரம், படிக்கும் நேரம் எல்லாம் எஸ்தர் பெரும்பாலும் நின்றுகொண்டுதான் இருப்பாள். எதையும் மீறுவது அவள் குணமாக மாறி இருந்தது. தண்டனை கொடுத்து, கொடுத்து வார்டன்களுக்கும் சலிப்பு வந்துவிட்டது. இவ்வளவு தண்டனை வாங்கினாலும் அவள் மேல் கொஞ்சம் பரிவு இருந்ததற்குக் காரணம் ஓரளவு நன்றாகப் படித்துவிடுவாள் என்பதே. <br />
<br />
எஸ்தர் வீட்டில் அவளைச் சேர்த்து மூன்று பிள்ளைகள். ஆசிரியராக இருந்த அவளுடைய அப்பாவின் சொற்ப வருமானத்தில் மூன்று பிள்ளைகளையும் ஹாஸ்டலில் படிக்க வைப்பதால், அவளைப் பார்ப்பதற்கு யாரும் வரமாட்டார்கள். மாதாமாதம் மணியார்டர் வரும். அவள் ஊரிலிருந்து யாராவது வந்தால் சத்துமாவு கொடுத்து அனுப்புவார்கள். ஆனால் அவள் யாரும் பார்க்க வரவில்லையே என்று கவலைப்பட்டதாகவே தெரியாது.<br />
தன் தோழிகளுடன் எப்போதும் சந்தோஷமாக இருப்பாள். ஞாயிற்றுக்கிழமை தலை குளித்து, யாரிடமாவது வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறப் பாவாடை, தாவணி<br />
வாங்கி அணிந்துகொண்டு முதல் ஆளாக தேவாலயத்துக்குக் கிளம்பிவிடுவாள். அதற்கு அவள் சொல்லும் காரணம், ‘இந்த ஒரு நாள் தான் நம்மள வெளியில் கூட்டிட்டுப் போறாங்க. நாலு பேரைப் பார்க்க முடியுது!’<br />
<br />
அன்று ஞாயிற்றுக் கிழமை. பார்வையாளர்கள் வரும் நாள். அப்பா வருகிறார் என்பதால் சிலுவைச் செல்வி தேவாலயம் செல்லவில்லை. (பார்வையாளர்கள் வராத கிறிஸ்துவ மாணவிகள் தேவாலயம் செல்லாவிட்டால் தண்டனை!) நானும் அமுதாவும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்குச் சென்று விட்டோம். <br />
<br />
ஒரு மணி நேரம் கழித்து சிலுவைச் செல்வி எங்களைத் தேடிக் கொண்டு ஓடி வந்தாள். காரணம் புரியாமல் நானும் அமுதாவும் பார்த்தோம். “எங்கெல்லாம் உங்களைத் தேடுறது? பிரேயர் ஹால்ல ஒரே கூட்டம்... பரபரப்பா இருக்கு. எங்கப்பா கிளம்பிட்டார். வாங்கடி போய்ப் பார்ப்போம்’ என்றாள் மூச்சிரைத்தபடி.<br />
<br />
அவளுடைய பதற்றம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டது. வேக வேகமாக நடந்தோம். வழியில் சில பெண்கள் வந்தார்கள். அவர்களிடம் விசாரித்தோம்.<br />
<br />
’பிரேயர் ஹால்ல ஏசு தெரியறார்! நாங்க எல்லாம் பார்த்துட்டோம். சீக்கிரம் போங்க!’ <br />
<br />
புத்தகங்களை அறையில் வைத்துவிட்டு ஓடினோம். <br />
<br />
’நம்ம எஸ்தருக்குத்தான் முதலில் ஏசு காட்சி கொடுத்தார். அவ சொல்லித்தான் எல்லோரும் பாத்திருக்காங்க! எனக்கும் தெரிஞ்சார்!’ என்று தேன்மொழி அக்கா சொன்னார். <br />
<br />
பிரார்த்தனை கூடத்துக்குள் வழக்கத்தை விடக் கூட்டம். பார்க்க வந்த பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் கூரையை நோக்கி ஜெபித்தபடி இருந்தனர். சிலர் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. அமுதாவும் சிலுவைச் செல்வியும் முட்டி போட்டு ஜெபிக்க ஆரம்பித்தார்கள். நானும் பார்த்தேன். அந்த இடத்தில் சிறிது காரை பெயர்ந்திருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு, கற்பனை செய்து பார்த்தால் கொஞ்சம் சிலுவைக் குறி போலத் தெரிந்தது. மற்றபடி ஒன்றும் தெரியவில்லை. <br />
<br />
அமுதாவையும் சிலுவைச் செல்வியையும் பார்த்தேன். அவர்கள் மும்முரமாக ஜபித்தபடி அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் சென்றதும் வெளியில் போகலாம் என்றேன். சிலுவைச் செல்வியும் அமுதாவும் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அந்தக் கசகசப்பையும் சத்தத்தையும் விட்டு நான் வெளியில் வந்து நின்றேன்.<br />
<br />
அரை மணி நேரத்துக்குப் பிறகு அமுதாவும் சிலுவைச் செல்வியும் வருத்தத்துடன் வெளியே வந்தார்கள். அவர்கள் முகமே விஷயத்தைச் சொன்னது. இருந்தாலும் கேட்டேன்.<br />
<br />
’உனக்குத் தெரிஞ்சதா சிலுவை?’<br />
<br />
’இல்லப்பா... ’ என்று அழுதபடிச் சொன்னாள் சிலுவைச் செல்வி.<br />
<br />
அமுதாவைப் பார்த்தேன், அவள் தான் ஏதோ குற்றம் செய்துவிட்டதால்தான் ஏசு தனக்குக் காட்சி தரவில்லை என்றாள். <br />
<br />
’இல்ல அமுதா, எனக்கும் தெரியலை’ என்றேன். <br />
<br />
அமுதாவுக்கும் சிலுவைச் செல்விக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. <br />
<br />
நாங்கள் மேலும் பலரை விசாரித்தோம். எல்லோரும் தங்களுக்கு ஏசு காட்சி தந்ததாகப் பரவசத்துடன் சொன்னார்கள். சிலுவைச் செல்வியும் அமுதாவும் மறுபடியும் அழ ஆரம்பித்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்குச் சென்றேன். நாங்கள் மூவரும் விரக்தியுடன் அமைதியாக அமர்ந்திருந்தோம். அப்போது பக்கத்து அறையில் பேச்சுச் சத்தம். யாரு? ஆ...! எஸ்தரிடம் அவள் தோழிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.<br />
<br />
’என்ன நடந்துச்சு எஸ்தர்? இப்பவாவது சொல்லு.’ <br />
<br />
’உங்களுக்கு எல்லாம் விசிட்டர்ஸ் வந்து, போயிட்டீங்க. எனக்கு இன்னிக்கு என்னவோ மனசே சரியில்லை. சர்ச்சுக்கும் போகப் பிடிக்கலை. அதான் பிரேயர் ஹால்ல போய்த் தனியா உட்கார்ந்து யோசிச்சிட்டிருந்தேன். என்னைப் பார்க்க யாரும் வரமாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சதும் எனக்கு அழுகை வந்துருச்சு. அந்த நேரம் பார்த்து ஏசு பைத்தியம் பிடிச்ச லூசு வந்துச்சு...’<br />
<br />
’எத்தனையோ லூசு இருக்கு. எந்த லூசு? ’<br />
<br />
’அங்காளப் பரமேஸ்வரி. என்னன்னு காரணம் கேட்டாள். ஒரு இந்துப் பிள்ளை எப்படி ஏசு மேல நம்பிக்கை வச்சிருக்கா பாருன்னு அன்னிக்கு வார்டன் அவளைக் காட்டி, என்னைத் திட்டினது ஞாபகம் வந்துச்சு. உடனே இந்த லூசை இன்னும் லூசாக்கிடலாம்னு முடிவு பண்ணி, ஏசு தெரியறார்னு அந்தக் காரையைக் காட்டினேன். அவ்வளவுதான்! அவ முட்டி போட்டு ஜபிக்க ஆரம்பிச்சிட்டா. திடீர்னு சத்தம் போட்டு அழுதாள். நானே பயந்துட்டேன்! அவளைத் தேடிக்கிட்டு அவளுடைய ஃப்ரெண்ட்ஸ் வந்தாங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா எல்லோருக்கும் ஏசு தெரிய ஆரம்பிச்சார்!’ <br />
<br />
’அடிப்பாவி! எல்லாம் உன்னுடைய வேலைதானா? எங்களுக்குத் தெரியலையேன்னு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. உன்னை என்ன பண்ணலாம்?’ <br />
<br />
‘ஒண்ணும் பண்ண வேணாம். நான் இப்ப சந்தோஷமா இருக்கேன். மத்த பிள்ளைகளோட அம்மா, அப்பா எல்லாம் அன்பா விசாரிச்சாங்க. ஸ்வீட் எல்லாம் கொடுத்தாங்க. கூட்டம் கூடி, நிலைமை கட்டு மீறிடுச்சு. இப்ப வெளியில் இருந்து ஃபாதர் எல்லாம் வரப்போறாங்க. சிறப்புப் பிரார்த்தனை நடக்கப் போகுது’ என்று சொல்லி முடித்தாள் எஸ்தர். <br />
<br />
நாங்கள் மூவரும் ஆச்சரியத்தில் உட்கார்ந்திருந்தோம்.<br />
<br />
ஹாஸ்டல் மணி ஒலித்தது.<br />
<br />
’என்னடி பார்க்கறீங்க? இன்னும் கொஞ்ச நாளைக்கு வார்டன், டீச்சர் எல்லாம் என்கிட்ட எவ்வளவு மரியாதையா நடந்துக்கப் போறாங்கன்னு பாருங்க!’ என்றபடி எழுந்தாள் எஸ்தர்.<br />
<br />
மறுநாள் உணவு வேளையில் வழக்கம் போல இட்லிகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் எஸ்தர். வார்டன் கண்டும் காணாதது போல நகர்ந்து விட்டார்! நான், அமுதா, சிலுவைச் செல்வி மூவரும் பட்டென்று சிரித்துவிட்டோம். வார்டன் திரும்பினார். நாங்கள் மூவரும் முதல் முறையாக எழுந்து நின்றோம்!TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-52924526034687861792010-06-09T04:29:00.000-07:002010-06-09T04:29:50.186-07:00இவர்களா காப்பாற்றப் போகிறார்கள்?அந்தக் கொடூரம் நிகழ்ந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் மரண ஓலங்கள் நிற்கவில்லை. உயிர் அற்ற உடல்களும் எலும்புக்கூடுகளும் கண் முன்னே வந்து நியாயம் கேட்கின்றன. பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போய்விட்டனர். இந்த 26 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் இல்லை. தண்ணீரிலும் மண்ணிலும் கலந்த நஞ்சால் இன்று பிறக்கும் குழந்தை கூட அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகிக்கு இணையானது இந்தியாவின் போபால். <br />
<br />
யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கொள்கைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்த காரணத்தால் பல நாடுகளும் இதனை அனுமதிக்கவில்லை. ஆனால் மக்களின் உயிர் மேல் மதிப்பு இல்லாத இந்திய அரசு இருகரம் நீட்டி, அதனை அரவணைத்தது. நிறுவனம் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்தபோது சோதனைக்கு வந்த அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்பு விஷயங்கள் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்பதை எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும் அலட்சியம் தொடர்ந்திருக்கிறது. அந்த அலட்சியத்துக்கு விலையாக ஒன்றும் அறியாத அப்பாவிகள் பலியாகியிருக்கின்றனர். பல குடும்பங்களில் ஒருவர் கூட மிச்சம் இல்லை. கை, கால் செயலிழப்பு, கண் பார்வை பறிபோதல், கேன்சர், தோல் வியாதிகள் என்று உயிர் பிழைத்த பலரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். <br />
<br />
நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றது. 8 பேருக்கு 2 ஆண்டு காலம் சிறைத் தண்டனை அளித்த கையோடு, ஜாமீனையும் வழங்கி சாதனை செய்திருக்கிறது நீதிமன்றம்!. மீண்டும் ஒருமுறை இந்திய மக்கள் அவமானத்திலும் அதிர்ச்சியிலும் தலைகுனிந்து நிற்கிறார்கள். கால் நூற்றாண்டு போராட்டத்துக்கு ஒன்றும் பலன் இல்லை. <br />
<br />
மிகக் குறைந்த காப்பீட்டுத் தொகை வழங்கியதோடு எங்கள் கடமை முடிந்தது என்று கழன்றுகொண்டுவிட்டது யூனியன் கார்பைட் நிறுவனம். யூனியன் கார்பைடின் தலைவர் வாரன் ஆண்டர்சன்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இவர் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஜாமீனில் வெளிநாடு சென்றுவிட்டார். இதுவரை இந்தியா திரும்பவில்லை. தீர்ப்பு வந்த திங்களன்று வரை சொகுசாக அவருடைய இல்லத்தில் வசித்திருக்கிறார். இப்போது அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. தீர்ப்பில் அவரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை! குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவர் மரணமடைந்து விட்டார். மீதி ஏழு பேரும் அந்த நிறுவனத்தின் இந்திய உயர் அதிகாரிகள். <br />
<br />
மக்களுக்காகத்தான் அரசாங்கம். ஆனால் நீண்ட கால வழக்கு இழுத்தடிப்பு, குற்றவாளிகள் தப்பித்தல் போன்ற காரணங்களுக்கு இந்திய அரசே துணை நின்றிருக்கிறது! இதில் ஒரு குற்றவாளிக்கு பத்மபூஷன் விருது (வழக்கு நடந்ததால் வழங்கப்படவில்லை) வேறு அறிவித்திருக்கிறது! <br />
<br />
குற்றவாளிகள் பலரும் இப்போதே முதுமையில் இருக்கிறார்கள். இதற்குப் பிறகு மேல்முறையீடு செய்து, ஒருவேளை தண்டனை கிடைத்தால் அதை அனுபவிக்க யார் இருக்கப் போகிறார்கள்? ருச்சிகா கிர்ஹோத்ரா வழக்கிலும் இதுவே நடந்திருக்கிறது. பணம், அதிகாரம், அரசியல் பலம் இருந்தால் இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்கு மிகவும் கேவலமானது.<br />
<br />
சொந்த நாட்டு மக்களின் உயிர்களையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள விரும்பாத இந்திய அரசாங்கமா ஈழத்தில் அழிந்துகொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பாற்றப் போகிறது?TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-62701512967501872102010-06-06T23:47:00.000-07:002010-06-06T23:47:07.031-07:00ஏதோ ஒன்று குறைகிறது!இரண்டு நாள்களாகக் கவனித்து வருகிறேன். எங்கள் அபார்ட்மெண்ட் குழந்தைகளில் ஆறு பேர் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து, மாடியில் குழுமிவிடுகிறார்கள். ஒரு பெட் ஷீட் விரித்து உட்கார்கிறார்கள். யோகா, ஓடிப்பிடித்தல், பாட்டு, நடனம் என்று சில நிமிடங்களுக்குள் காட்சி மாறுகிறது. அருகில் ஒரு பெரிய பாட்டில் தண்ணீர், ஒரு ஃபேண்டா பாட்டில், சிப்ஸ், முறுக்கு...! ஓ... இவர்கள் எல்லோரும் பிக்னிக் வந்திருக்கிறார்கள்! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு தின்பண்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அடடா! அதே கான்செப்ட்!<br />
<br />
என்னுடைய எட்டு வயதில் ஒரு முறை எங்கள் கிராமத்துக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்தோம். சினிமாவில் வரும் கிராமங்களைப் போல அவ்வளவு பசுமையான கிராமம் அல்ல. கம்மாய், ஊருணி, கோயில், இடிந்த அரண்மனை, கருவேலங்காடு, வயல்காடு என்று இருக்கும். என் வயதை ஒத்த பெண்கள் கூட அப்போதே சமைக்க, தண்ணீர் எடுக்க, வீட்டு வேலை செய்ய என்றுதான் இருப்பார்கள். அந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு விளையாட என்று அவர்களுக்குத் தனியாக நேரம் இருக்காது. ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையில் விளையாட வருவார்கள். சிறிது நேரத்திலேயே அவர்களைத் தேடிக்கொண்டு அம்மாக்கள் வந்துவிடுவார்கள். இதனால் இந்தப் பெண்கள் எல்லாம் சேர்ந்து ‘கூட்டாஞ்சோறு’ என்று ஒரு ரகசிய விளையாட்டை ஆண்டுக்குச் சிலமுறை விளையாடுவது வழக்கம்.<br />
<br />
நான் சென்றிருந்தபோது அவர்கள் விளையாடத் திட்டமிட்டிருந்தனர். இந்தக் கூட்டத்துக்கு என் அத்தைப் பெண் நாகவள்ளிதான் தலைவி. அவர் தோழிகள் ஐந்து பேர், அவர்களுடன் நாகவள்ளியின் தங்கை மீனா. அவர்களைவிட இளையவர்களைப் பொதுவாக அவர்கள் இந்த விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. மீனாவின் சிபாரிசில் என்னைச் சேர்த்துக்கொண்டார் நாகவள்ளி. பல நாள்களாக அவர்கள் யோசித்து திட்டத்தைத் தீட்டி வைத்திருந்தார்கள். <br />
<br />
இந்த முறை அவர்கள் (நாங்கள்!) சமைக்கப் போவது கேசரி. ரவை, சர்க்கரை, எண்ணெய், விறகு, பாத்திரம், குடம், தீப்பெட்டி என்று ஆளுக்கு ஒரு பொருளை யார் யார் கொண்டுவருவது, எத்தனை மணிக்குக் கிளம்புவது என்று முடிவு செய்தார்கள். எந்த வீட்டிலும் அனுமதி கிடைக்காது என்பதால் இந்த விளையாட்டு ரகசியமாகவே விளையாடப்படும். நான் மட்டும் அம்மாவிடம் முறையாக அனுமதி பெற்றிருந்தேன். <br />
<br />
மறுநாள் காலை வேலைகளை ஓரளவு முடித்துவிட்டு ஒவ்வொருவராக இடிந்த அரண்மனைக்குப் பின்பக்கம் வந்து சேர்ந்தார்கள். கருவேல மரங்களுக்கு நடுவில் பயணம் ஆரம்பித்தது. ஆள் அரவம் இல்லாத இடமாகப் பார்த்து ஒரு மரத்தடியில் அமர்ந்தோம். சற்றுத் தூரத்தில் கம்மாய் இருந்தது. <br />
<br />
ஒருவர் தண்ணீர் கொண்டுவர, இன்னொருவர் முள் எடுத்து வர என்று பரபரப்பாக இயங்கினார்கள். மூன்று கற்களை வைத்து அடுப்பை உருவாக்கி முள்ளையும் விறகையும் வைத்து எரிக்க ஆரம்பித்தார் நாகவள்ளி. ரவை நிறைய இருந்தது, ஆனால் சர்க்கரை மிகவும் குறைவாக இருந்தது. நாகவள்ளி சர்க்கரை கொண்டு வந்தவளையும் எண்ணெய் கொண்டு வந்தவளையும் திட்டினார். பிறகு ஒருவழியாகச் சமாதானமாகி, கேசரி செய்ய ஆரம்பித்தார்கள். <br />
<br />
எல்லோரும் அடுப்பைச் சுற்றி அமர்ந்துகொண்டு, ஊர்க் கதைகள் பேசினார்கள். ஊரில் நடக்கும் ஒரு காதல் கதையைப் பகிர்ந்துகொண்டார்கள். எனக்கு அவர்கள் பேசுவது புரியா விட்டாலும் கேட்டுக்கொண்டிருந்தேன். அரைமணி நேரத்தில் கேசரி தயாராகிவிட்டது. சூடு குறையட்டும் என்று சொல்லிவிட்டு, விளையாட ஆரம்பித்தோம். கேசரி என்பதால் விளையாட்டில் யாருக்கும் அவ்வளவு ஈடுபாடு இல்லை. (அப்போதெல்லாம் கேசரி எப்போதாவது தான் செய்வார்கள்). அருகில் இருந்த பூசணி இலைகளைப் பறிந்து வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கரண்டி கேசரி பரிமாறப்பட்டது. <br />
<br />
வண்ணம் சேர்க்காத வெள்ளை நிறக் கேசரியாக இருந்தாலும் ஆர்வத்தைத் தூண்டியது. எல்லோரும் மிகவும் ரசித்து, ருசித்துப் பேசிக்கொண்டே, சந்தோஷமாகச் சாப்பிட ஆரம்பித்தோம். சர்க்கரை பத்தாமல், போதிய எண்ணெய் இல்லாமல், உப்புமாவுக்குச் சர்க்கரைத் தொட்டு சாப்பிடுவதைப் போலத்தான் இருந்தது அந்த கூட்டாங் கேசரி . ஆனால் எங்கள் யாருக்கும் அப்போது இப்படித் தோன்றவேயில்லை. வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாக வந்த த்ரில், அரட்டை, நாங்களே செய்த இனிப்பு என்ற பெருமிதம் எல்லாம் சேர்ந்து அப்படி ஒரு சந்தோஷத்தை அளித்திருந்தது. எல்லோரும் வயிறு நிறைய சாப்பிட்டு, தண்ணீர் குடித்து, சற்று ஓய்வெடுத்தோம். பாத்திரங்களைச் சுத்தம் செய்தோம். அவரவர் பொருள்களை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தோம். <br />
<br />
ஊருக்குள் நுழைந்தவுடன், எதிரில் வந்த ஓர் அம்மா, “ ஏண்டி அங்காளம், எங்கே போயிருந்தே? உங்கம்மா உன்னைக் காணாம்னு தேடிக்கிட்டு இருக்கு’ என்று சொல்லவும் எல்லோரும் தேனீ கூட்டில் கல் பட்டது போல களைந்து சென்றார்கள். நானும் எங்கள் வீடு நோக்கி ஓடி வந்தேன். வழியில் அங்காளத்தின் அம்மா அருகில் இருந்த குச்சியை எடுத்துகொண்டு, “எங்கே போனடி? தனியாளா வேலை செஞ்சிட்டிருக்கேன். தண்ணி எடுக்கப் போறேன்னு கிளம்பினவ இப்பத்தான் வர்றீயா?’ என்றபடி ஓடி வர, அங்காளம் பக்கத்துச் சந்தில் புகுந்து மறைந்தார். <br />
<br />
இன்று நெய் வடிய, முந்திரிப் பருப்பு மிதக்க, பச்சைக் கற்பூர வாசனையுடன் கேசரி செய்தாலும், அந்தக் கூட்டாங் கேசரியில் இருந்த சுவையில் ஏதோ ஒன்று குறைவது போலிருக்கிறது!TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-8100416626354987002010-05-26T02:55:00.000-07:002010-05-26T02:55:49.380-07:00கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் : இந்திய மருத்துவக் கொள்கைபோலி மருந்துகளையும், காலாவதியான மருந்துகளையும் தேடிப்பிடித்து அழிக்கும் பணி ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவின் மருத்துவக் கொள்கை குறித்து விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் திரு. சுகுமாரனைத் தொடர்பு கொண்டோம்.<br />
<br />
சுகுமாரன், FMRAI (Federation of Medical and Sales Representatives Association of India) அமைப்பின் அனைத்து இந்திய முன்னாள் துணைத் துலைவர். TNMSRA (Tamil Nadu Medical and Sales Representatives Association) அமைப்பில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர். இந்திய மருத்துவக் கொள்கைகள் குறித்து கூர்மையான விமரிசனங்களை பல்வேறு பொதுக்கூட்டங்களில் முன்வைத்து வருபவர். கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவும் விவாதிக்கவும் ஆர்வமாக இருக்கிறார்.<br />
<br />
* வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பல இந்தியாவில் சுதந்தரமாக விற்பனை செய்யப்படுவதாகச் சொல்லப்படுவது உண்மையா? இந்திய அரசு எப்படி இதனை அனுமதிக்கிறது?<br />
* ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட கிராமப்புறங்களில் ஏழை மக்கள் மீது மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் அவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவ்வப்போது வரும் செய்திகள் அதிர்ச்சியூட்டுகின்றன. எனில், இந்தியா ஒரு பரிசோதனைக் கூடமாக மாறிவருகிறதா?<br />
* பெருகும் நோய்கள், பெருகும் போலி மருந்துகள்.<br />
* பெருகும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள்.<br />
<br />
ஆழமாகவும் அகலமாகவும் இன்னும் நிறைய விவாதிக்கலாம். அனைவரும் வருக.<br />
<br />
<b>* தேதி : ஜூன் 4, வெள்ளிக்கிழமை<br />
* நேரம் : மாலை 6.30 மணி<br />
* இடம் : கிழக்கு மொட்டை மாடி.<br />
* முகவரி : 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18</b>TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4482296658149842579.post-6930787776081934932010-05-11T02:41:00.000-07:002010-05-11T02:41:38.370-07:00பள்ளிகள் இப்படிச் செய்யலாமா?ஒரு பக்கம் பள்ளிகளில் இருந்து இடை நிறுத்தம் செய்யும் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி பல்வேறு அமைப்புகளால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் பணி சாதாரணமானது அல்ல. <br />
<br />
கல்வியே வியாபாரமாகி விட்ட இந்த நாளில் தனியார் பள்ளிகள், தங்கள் அருமை பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்வதற்காக மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்குகின்றன. சுமாராகப் (!) படிக்கும் பத்தாம் வகுப்புக்குள் நுழையும் மாணவர்களை, டிசி கொடுத்து வெளியே அனுப்பி விடுகின்றன. இதன் மூலம் நூற்றுக்கு நூறு தேர்ச்சி என்று விளம்பரம் செய்து, அதன் மூலம் ஏராளமான மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவும், பெற்றோரிடமிருந்து பணத்தைக் கறந்துகொள்ளவும் செய்கின்றன. <br />
<br />
தஞ்சாவூரில் ஒரு தனியார் பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்புக்குத் தேறிய முப்பது மாணவர்கள், அந்தப் பள்ளியால் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். முதல் வகுப்பில் இருந்து காசு கொட்டிப் படித்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களை, மற்ற பள்ளிகளும் பத்தாம் வகுப்பில் சேர்த்துக்கொள்வதில்லை. பிரைவேட்டாகப் படித்து பரீட்சை எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதன் மூலம் மாணவர்களும் பெற்றோரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். <br />
<br />
நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குத்தான் பள்ளிகளில் இடம் என்றால் மற்றவர்கள் எல்லாம் என்ன செய்வது? சுமாராகப் படிக்கும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, அவர்களையும் படிக்க வைத்து, உயர்த்துவதுதானே ஒரு பள்ளியின் கடமை! நன்றாகப் படிப்பவர்களை மட்டும்தான் சேர்த்துக்கொள்ளும் பள்ளிக்கும் ஜெயிக்கிற குதிரை மீது பணம் கட்டும் ரேஸுக்கும் என்ன வித்தியாசம்? <br />
<br />
சென்ற மாதம் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கச் சொல்லி ஊர்வலம் நடத்தினார்கள். ஆங்கிலப் பள்ளிகளின் மேல் மோகம், பணம் கொடுத்துப் படித்தால்தான் நல்ல கல்வி என்று நினைக்கும் மக்களின் மனத்தை இதுபோன்ற ஊர்வலங்களாலும், பிரசாரங்களாலும் மாற்றி விட முடியாது. அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். <br />
<br />
சென்ற ஆண்டு யூனிசெஃப் நடத்திய ஆய்வுகளில் இந்திய அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் கற்கும் திறன் வித்தியாசப்படுகிறது என்கிறது. அதாவது அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தை, மற்ற பள்ளிகளில் இரண்டாம், மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையின் அளவுக்குத்தான் கற்கும் திறனைப் பெற்றிருக்கிறது. இப்படி ஒரு நிலை இருந்தால் எந்தப் பெற்றோர்தான் விரும்பி அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள்? <br />
<br />
காசு கொடுத்துப் படிக்க வைக்கும் எல்லா பள்ளிகளும் தரம் வாய்ந்தவை அல்ல. சிறிய இடங்களில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், தகுதியான ஆசிரியர்களை வைத்துப் பாடம் நடத்தாமல், குழந்தைகளின் மேல் போதிய அக்கறை இல்லாமல் இருக்கும் பள்ளிகளும் ஏராளமாக இருக்கின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்து இதுபோன்ற பள்ளிகளில் சேர்த்துப் பணத்தைக் கொடுத்துவிட்டு, நம் குழந்தைகள் படித்து, உயர்ந்த இடத்தை அடைந்துவிடுவார்கள் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள். இந்த மாயையிலிருந்து எப்படி விடுவிப்பது?<br />
<br />
மதிப்பெண் என்பது என்ன? மனப்பாடம் செய்து ஒப்பித்து மதிப்பெண் வாங்கினால் மட்டும் ஒருவர் புத்திசாலியாகி விட முடியுமா? <br />
<br />
காலம் காலமாக இருந்து வரும் மெகாலே கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும். பள்ளி என்றால் பயந்து அலறாமல், விருப்பத்துடன் கல்வி கற்க குழந்தைகள் வர வேண்டிய நிலை வேண்டும். மாறி வரும் உலகத்தைக் கருத்தில் கொண்டு, அவ்வப்போது ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து, அவர்களை அப்டேட் செய்துகொள்ள வைக்க வேண்டும். இப்படி அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயரும்போது தனியார் பள்ளிகளின் மேல் இருக்கும் மோகம் விலகும். <br />
<br />
ஐஐஎம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு முன்பே பரிசோதித்து, தகுதியான மாணவர்களை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஓர் அடிப்படைக் கல்விக்கு, ஏற்கெனவே அந்தப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களை வெளியேற்றுவது என்பது எவ்விதத்தில் நியாயம்?TAMILSUJATHAhttp://www.blogger.com/profile/08296812390468452204noreply@blogger.com4