Monday, February 23, 2009

நாட்டுடைமை... சரியான விஷயம்தான்!

ஒரு முறை அழ. வள்ளியப்பா இலக்கியக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து
ரயில் நிலையத்துக்கு அவரை வழியனுப்ப வந்தார் நிகழ்ச்சி அமைப்பாளர்.

‘சார், நான் ஒரு பாட்டு எழுதியிருக்கேன். கேட்கறீங்களா?’ என்றார் அமைப்பாளர்.

‘தாராளமா சொல்லுங்க’ என்றார் வள்ளியப்பா.

அமைப்பாளர் முழுப் பாடலையும் படித்துக் காட்டினார்.

வள்ளியப்பா அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.

‘சார், எப்படி இருந்தது என் பாடல்?’

‘ரயில்ல ஏறிட்டுச் சொல்லட்டுமா?’

வள்ளியப்பா ரயிலில் அமர்ந்ததும், அமைப்பாளர் , ‘சார் என் பாட்டு?’

’உங்க பாட்டுன்னா உடனே கருத்து சொல்லிருப்பேன். என் பாட்டை என்கிட்டேயே கருத்துக் கேட்டால் எப்படி?’ என்றார் வள்ளியப்பா.

*

வள்ளியப்பாவின் பாடல்களை அவருடைய பெயரைக் குறிப்பிடாமலே பயன்படுத்திக் கொண்டவர்கள் அநேகம். இனி எல்லோரும் அவர் பெயரைப் போட்டே பயன்படுத்திக்கொள்ளலாம். அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட இருக்கின்றன.